Tag: தேர்த்திருவிழா

பெருந்திரளான பக்தர்களுக்குத் தேரேறி அருட்காட்சியளித்தார் நயினை அம்மன்!

வரலாற்றுச் சிறப்புமிக்க நயினாதீவு நாகபூசணி அம்மன் ஆலயத்தின் வருடாந்தத்  தேர்த்திருவிழா நேற்று சிறப்பாக இடம்பெற்றது. அதிகாலை மூன்று மணிக்கு ஆரம்பமான அபிஷேகம் மற்றும்  சிறப்புப் பூஜைகளைத் தொடர்ந்து காலை ஏழு மணிக்கு வசந்த மண்டபப்பூஜை நடைபெற்றது. அதனைத் தொடர்ந்து பெருந்திரளான பக்தர்களின் அரோகரா கோஷத்துடன் அம்மன்  வீதி உலா வந்து பக்தர்களுக்குக் காட்சியளித்தார்.