பெரும்பான்மை சமூகத்துடன் கூட்டமைப்பிற்கு சரியான தொடா்பாடல் இல்லையென குறிப்பிட்டுள்ள வடக்கு முதலமைச்சர் சி.வி.விக்னேஸ்வரன், தமிழ் மக்களின் அடிப்படை பிரச்சினைகள் ஏனைய மொழி பேசும் நாடாளுமன்ற உறுப்பினர்களுக்குகூட சரியாக தெரிவிக்கப்படுவதில்லையென குறிப்பிட்டுள்ளார். நாடாளுமன்றில் பெரும்பான்மையாக சிங்களம் பேசும் உறுப்பினர்கள் இருக்கும் போது, தமிழில் எமது பிரச்சினைகளை எடுத்துரைப்பதால் எவ்வித பிரயோசனமும் இல்லையென்றும், சமூகங்களுக்கிடையிலான பிரச்சினைகளை பரிமாற்றிக்கொள்ள கூட்டமைப்பின் தலைமைத்துவம் சரியான நடவடிக்கையொன்றை எடுக்க வேண்டுமெனவும் விக்னேஸ்வரன் மேலும் தெரிவித்துள்ளார். தேசிய பிரச்சினைகளை …
Read More »புதிய அரசமைப்புக்கு சர்வதேச பங்களிப்பு அவசியம் : சிங்கப்பூர் வெளிவிவகார அமைச்சரிடம் சம்பந்தன் எடுத்துரைப்பு
தேசிய பிரச்சினைக்கு நிரந்தர தீர்வுகாண ஐக்கிய தேசியக் கட்சியும் ஸ்ரீலங்கா சுதந்திரக் கட்சியும் ஒன்றிணைந்து செயற்பட வேண்டும் என்றும் அதற்கு சர்வதேச ஆதரவளிக்க வேண்டும் என்றும் சிங்கப்பூர் வெளிவிவகார அமைச்சர் விவியன் பாலகிருஷ்ணனிடம் எடுத்துரைத்தாக எதிர்க்கட்சித் தலைவர் இரா. சம்பந்தன் தெரிவித்தார். ஐந்துநாள் உத்தியோகப்பூர் விஜயம் மேற்கொண்டு இலங்கைக்கு வந்துள்ள சிங்கப்பூர் வெளிவிவகார அமைச்சர் விவியன் பாலக்கிருஷணன் மற்றும் எதிர்க்கட்சியான தமிழ்த் தேசியக் கூட்டமைப்புக்குமான சந்திப்பு இன்று மாலை எதிர்கட்சியின் …
Read More »