அமெரிக்கா, சீனா இடையே மீண்டும் தகராறு அமெரிக்க மற்றும் சீன அதிபர்கள் தொலைபேசி மூலம் உரையாடல் நடத்தி ஒரு நாளே ஆன நிலையில், தென் சீனக் கடற்பரப்பில் இவ்விரு நாடுகளுக்கிடையே பதட்டத்தை ஏற்படுத்தும் சம்பவம் நிகழ்ந்துள்ளது. அமெரிக்க அதிபராக பதவியேற்ற பின் டொனால்டு டிரம்ப், முதல் முறையாக சீன அதிபர் ஜி ஜின்பிங்குடன் தொலைபேசியில் உரையாடினார். அப்போது ஒரே சீனா கொள்கைக்கு மதிப்பளித்து அதனை பின்பற்ற டிரம்ப் சம்மதம் தெரிவித்துள்ளார். […]





