கூட்டமைப்பின் எம்.பிக்கள் ஜே.வி.பிக்கு ஆதரவு தேசிய மக்கள் சக்தியின் கொள்கை விளக்கம் எதிர்வரும் 26ம் திகதி வெளியிட்டு வைக்கப்படும். பத்தரமுல்ல வோட்டர் எட்ஜ் ஹோட்டலில் வெளியீட்டு நிகழ்வு நடக்கும். ஜேவிபியின் பிரச்சார செயலாளர் விஜித ஹேரத் இன்று செய்தியாளர்களிடம் இதனை தெரிவித்தார். சிறுபான்மையினரின் ஆதரவை பெற முயற்சிப்பதாகவும், தமிழ் தேசிய கூட்டமைப்பினர் தமது வேட்பாளர் அநுரகுமாரவுடன் உத்தியோகப்பற்றற்ற முறையில் பேசியதாகவும் தெரிவித்தார். தமிழ் தேசிய கூட்டமைப்பின் சில உறுப்பினர்கள் தமது …
Read More »ஹிஸ்புல்லாவைச் சந்தித்த கூட்டமைப்பின் மூன்று பிரபலங்கள்!
கிழக்கு மாகாண ஆளுநரின் அழைப்பை தமிழ்த் தேசியக் கூட்டமைப்பு முழுமையாக நிராகரிப்பதாக தமழரசுக் கட்சியின் பொதுச் செயலாளரும் கிழக்கு மாகாண முன்னாள் விவசாய அமைச்சருமான கி.துரைராசசிங்கம் அன்மையில் தெரிவித்திருந்தார். தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் முன்னாள் மாகாண சபை உறுப்பினர்கள் மற்றும் இன்னாள் கிழக்கு மாகாணத்தில் இருக்கக்கூடிய பிரதேச சபை, நகர சபை, மாநகர சபையின் தவிசாளர்கள் நகர முதல்வர்கள், மாநகர மேயர்கள் அனைவரும் ஹிஸ்புல்லாவின் அழைப்பினை புறக்கணிப்பதென மட்டக்களப்பில் இடம்பெற்ற …
Read More »கூட்டமைப்பின் புதிய தலைவர் சுமந்திரன் ?
தமிழ் தேசிய கூட்டமைப்பின் தலைமைத்துவத்தை மாற்றுவதற்கான எவ்வித நடவடிக்கைகளும் மேற்கொள்ளப்படவில்லை என, கூட்டமைப்பின் பேச்சாளர் எம்.ஏ.சுமந்திரன் தெரிவித்துள்ளார். கூட்டமைப்பின் அடுத்த தலைவராக சுமந்திரனை தெரிவு செய்வது தொடர்பாக உயர்மட்டக் கூட்டத்தில் ஆலோசனை நடத்தப்படவுள்ளதாக ஆங்கில ஊடகமொன்று செய்தி வெளியிட்டிருந்தது. நாடாளுமன்ற உறுப்பினர் சரவணபவனை மேற்கோள்காட்டி இச்செய்தி வெளியாகி பெரும் பரபரப்பை ஏற்படுத்தியிருந்தது. இந்நிலையில், இது தொடர்பாக கூட்டமைப்பின் பேச்சாளர் எம்.ஏ.சுமந்திரனிடம் வினவியபோதே அவர் மேற்கண்டவாறு குறிப்பிட்டார். மேலும், கூட்டமைப்பின் தலைமையில் …
Read More »கூட்டமைப்பின் திட்டத்தை தோற்கடிக்க போடப்படும் பாரிய திட்டம்
தமிழ் தேசியக் கூட்டமைப்பின் சர்ச்சைக்குரிய அரசியலமைப்பு திருத்த யோசனைகளை ஐக்கிய மக்கள் சுதந்திர முன்னணி தோற்கடிக்குமென அறிவிக்கப்பட்டுள்ளது. அக்கட்சியின் பொதுச்செயலாளர் மஹிந்த அமரவீர இதனை தெரிவித்துள்ளார்.வடக்கு-கிழக்கு இணைப்பு போன்ற அரசியலமைப்பு திருத்தங்களுக்கு தமிழ் தேசியக் கூட்டமைப்பு திட்டமிட்டுள்ளது. இருந்த போதிலும், நாடாளுமன்றத்தில் இதுவரையில் எந்த வரைவும் சமர்ப்பிக்கப்படவில்லை. அது தொடர்பான எந்த கலந்துரையாடல்களிலும் தாங்கள் பங்கேற்கவில்லை. எவ்வாறாயினும் நாட்டின் தேசிய பாதுகாப்பிற்கும், ஐக்கியத்திற்கும் அச்சுறுத்தல்விடும் எந்த திட்டமும் நாடாளுமன்றத்தில் தடுக்கப்படும். …
Read More »