கடிதத்தில் கையெழுத்து : கூட்டமைப்பிற்குள் குழப்பம் ஐக்கிய நாடுகள் மனித உரிமைகள் பேரவையின் தீர்மானத்தை நடைமுறைப்படுத்துவதற்கு ஸ்ரீலங்காவிற்கு மேலும் கால அவகாசம் வழங்கக் கோரியும், வழங்கக் கூடாது என்று கோரியும், அனுப்பப்பட்ட மனுக்களில் போலியான கையெழுத்துகள் இடம்பெற்றிருப்பதாக குற்றம்சாட்டப்பட்டுள்ளது. தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் நாடாளுமன்ற உறுப்பினர்களால் மனித உரிமைகள் பேரவைக்கு அனுப்பப்பட்ட கடிதம் ஒன்றில், கூட்டமைப்பின் 11 நாடாளுமன்ற உறுப்பினர்கள் கையெழுத்திட்டிருப்பதாக கூறப்பட்டது. ஸ்ரீலங்கா அரசாங்கத்துக்கு மேலதிக காலஅவகாசம் வழங்கக்கூடாது …
Read More »இலங்கைக்கு காலஅவகாசம் வழங்கப்பட வேண்டியது அவசியமாகும்: ஜெகான் பெரேரா
இலங்கைக்கு காலஅவகாசம் வழங்கப்பட வேண்டியது அவசியமாகும்: ஜெகான் பெரேரா இலங்கையின் அரசியல் சூழ்நிலையை கவனத்திற்கொண்டு இலங்கைக்கு காலஅவகாசம் வழங்கப்பட வேண்டும் என தேசிய சமாதானப் பேரவையின் தலைவரும் ஜெனிவா சென்றுள்ள அரச தூதுக்குழுவின் பிரதிநிதியுமான கலாநிதி ஜெகான் பெரேரா தெரிவித்துள்ளார். ஜெனிவா வளாகத்தில் இலங்கை தூதுக்குழுவினால் ஏற்பாடு செய்யபட்டிருந்த உபகுழுக் கூட்டத்தில் கலந்துக் கொண்டு கருத்து தெரிவிக்கையிலேயே அவர் இவ்வாறு குறிப்பிட்டுள்ளார். அங்கு தொடர்ந்து தெரிவித்த அவர், நாட்டில் நல்லிணக்கத்தை …
Read More »