Sunday , June 29 2025
Home / Tag Archives: காணாமல் ஆக்கப்பட்டோரின் உறவினர்கள் வலியுறுத்து

Tag Archives: காணாமல் ஆக்கப்பட்டோரின் உறவினர்கள் வலியுறுத்து

வாக்குறுதிகளை நிறைவேற்றுங்கள்! – ஜனாதிபதியிடம் காணாமல் ஆக்கப்பட்டோரின் உறவினர்கள் வேண்டுகோள்

வலிந்து காணாமல் ஆக்கப்பட்டோரின் உறவினர்களை ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன சந்தித்தவேளை அளித்த வாக்குறுதிகளை அவர் நிறைவேற்றவில்லை எனத் தெரிவித்துள்ள வலிந்து காணாமல் ஆக்கப்பட்டவர்களின் உறவினர்கள், இலங்கை அரசின் காணாமல் ஆக்கப்பட்டோர் தொடர்பான அலுவலகம் குறித்து தங்களுக்கு நம்பிக்கையில்லை எனவும் குறிப்பிட்டுள்ளனர். கொழும்பில் நடைபெற்ற செய்தியாளர் மாநாட்டில் கருத்து தெரிவிக்கையிலேயே அவர்கள் இதனைத் தெரிவித்துள்ளனர். அவர்கள் மேலும் கூறியுள்ளதாவது:- “இலங்கையில் காணாமல்போகச்செய்யப்பட்டவர்கள் குறித்து ஆராய்வதற்காக ஏற்படுத்தப்பட்ட ஆணைக்குழுக்கள் தொடர்பில் நாங்கள் சந்தித்த …

Read More »

ஜனாதிபதி மைத்திரியிடம் காணாமல் ஆக்கப்பட்டோரின் உறவினர்கள் வேண்டுகோள்

வலிந்து காணாமல் ஆக்கப்பட்டோரின் உறவினர்களை ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன சந்தித்தபோது அளித்த வாக்குறுதிகளை அவர் நிறைவேற்றவில்லை எனவும் இலங்கை அரசின் காணாமல் ஆக்கப்பட்டோர் தொடர்பான அலுவலகம் குறித்து தங்களுக்கு நம்பிக்கையில்லை என்றும் வலிந்து காணாமல் ஆக்கப்பட்டவர்களின் உறவினர்கள் குறிப்பிட்டுள்ளனர். கொழும்பில் நேற்றைய தினம் (17) நடைபெற்ற செய்தியாளர் மாநாட்டில் கருத்து தெரிவிக்கையிலேயே அவர்கள் இதனைத் தெரிவித்துள்ளனர். இதன்போது தொடர்ந்தும் கருத்து வெளியிட்டுள்ள அவர், இலங்கையில் காணாமல்போகச் செய்யப்பட்டவர்கள் குறித்து ஆராய்வதற்காக …

Read More »

காணாமல் ஆக்கப்பட்டோருக்கு  என்ன நடந்தது? – உண்மையை அரசு வெளிப்படுத்த வேண்டும் என்று பரணகம வலியுறுத்து 

“காணாமல்போயிருப்போர் எமது நாட்டின் பிரஜைகள். எனவே, காணாமல்போனோருக்கு என்ன நடந்தது?  அவர்கள் உயிருடன் இருக்கின்றனரா? இல்லையா? என்பது தொடர்பில் கண்டுபிடித்து அவர்களின் உறவினர்களுக்கு உண்மையை வெளிப்படுத்த வேண்டியது நல்லாட்சி அரசின் கடமையாகும்.” – இவ்வாறு காணாமல்போனோர் தொடர்பாக விசாரணை நடத்திய ஜனாதிபதி ஆணைக்குழுவின் முன்னாள் தலைவர் ஓய்வுபெற்ற நீதிபதி மெக்ஸ்வல் பரணகம கொழும்பு ஊடகம் ஒன்றுக்குத் தெரிவித்துள்ளார். “காலத்தை கடத்திக் கொண்டிருக்காமல் ஏதாவது ஒரு பொறிமுறையை முன்னெடுத்து காணாமல்போனோரின் உறவினர்களின் …

Read More »

ஜனநாயக போராட்டத்திற்கு மதிப்பளிக்காவிடின் தமிழினம் வேறு வழியை கையாளும்

மனிதாபிமான போராட்டம் தீர்வின்றி தொடருமாயின், அது எமது இனத்தவரை வேறு வழிக்கு திசைதிருப்புவதற்கே வழிவகுக்கும்” என கிளிநொச்சியில் போராட்டத்தில் ஈடுபட்டுள்ள காணாமல் ஆக்கப்பட்டோரின் உறவினர்கள் தெரிவித்துள்ளனர். காணாமல் ஆக்கப்பட்டவர்களின் உறவினர்களால் கிளிநொச்சியில் கடந்த பெப்ரவரி மாதம் 20ஆம் திகதி ஆரம்பிக்கப்பட்ட போராட்டம் 66ஆவது நாளாக இன்றும் (புதன்கிழமை) தீர்வின்றி தொடர்ந்து வருகின்ற நிலையில், போராட்டத்தில் ஈடுபட்டுள்ள தந்தையொருவரே இவ்வாறு குறிப்பிட்டுள்ளார். தனது ஆதங்கத்தை தொடர்ந்து வெளிப்படுத்திய அவர், “இந்த ஜனநாயக …

Read More »

காணாமல் ஆக்கப்பட்டோரின் உறவுகள் தொடர் போராட்டம்

வலிந்து காணாமல் ஆக்கப்பட்ட உறவுகளை மீட்டுத்தருமாறு வலியுறுத்தி போராட்டத்தில் ஈடுபட்டுள்ளோர், தேங்காய் உடைத்து போராட்டத்தை மேற்கொண்டுள்ளனர். காணாமல் ஆக்கப்பட்ட உறவுகளை மீட்டுத்தருமாறு வலியுறுத்தி தமிழர் தாயகப் பகுதிகள் எங்கும் தொடர் போராட்டம் முன்னெடுக்கப்பட்டுவருகின்றது. காணாமல் போகச் செய்யப்பட்டுள்ள உறவுகளை மீட்டுத்தருமாறு வலியுறுத்தி வவுனியா வீதி அபிவிருத்தி திணைக்களத்தின் முன்னால் ஏ9 வீதியின் அருகில் தொடர் போராட்டம் முன்னெடுக்கப்பட்டு வருகின்றது. குறித்த போராட்டம் இன்று 60 ஆவது நாளை எட்டியுள்ள நிலையில், …

Read More »

காணாமல் ஆக்கப்பட்டோரின் வெளிப்படுத்தலை வலியுறுத்தி கிளிநொச்சி, வவுனியாவில் 27ஆம் திகதி ஹர்த்தால்!

“காணாமல் ஆக்கப்பட்டவர்களின் வெளிப்படுத்தலையும், விடுவிப்பையும் வலியுறுத்தி எதிர்வரும் 27ஆம் திகதி வியாழக்கிழமை கிளிநொச்சியிலும், வவுனியாவிலும் ஹர்த்தால் அனுஷ்ட்டிக்கப்படவுள்ளது. அனைத்துத் தரப்பினரையும் அதில் இணையுமாறு அழைக்கின்றோம்.” – இவ்வாறு கிளிநொச்சி மற்றும் வவுனியா மாவட்டங்களின் காணாமல் ஆக்கப்பட்டோர் உறவினர்கள் சங்கத்தினர் தெரிவித்துள்ளனர். கிளிநொச்சி மாவட்டத்தைச் சேர்ந்த காணாமல் ஆக்கப்பட்டடோர் உறவினர்கள் சங்கத் தலைவி கலாரஞ்சினி இது தொடர்பில் தெரிவிக்கையில், “காணாமல் ஆக்கப்பட்டவர்களை வெளிப்படுத்தவும், விடுவிக்கவும் வலியுறுத்தி அவர்களது உறவினர்களால் கிளிநொச்சி கந்தசுவாமி …

Read More »

பதின்மூன்றாம் நாளாக இரவு பகலாக பிள்ளைகளுக்காக வீதியில் காத்திருக்கும் பெற்றோர்

வீதியில் காத்திருக்கும் பெற்றோர்

பதின்மூன்றாம் நாளாக இரவு பகலாக பிள்ளைகளுக்காக வீதியில் காத்திருக்கும் பெற்றோர் முல்லைத்தீவு மாவட்ட அரசாங்க அதிபர் செயலகத்திற்கு முன்பாக இடம்பெற்று வரும் காணாமல் ஆக்கப்பட்டோரின் உறவுகளின் போராட்டம் இன்று பதின்மூன்றாம் நாளாக தொடர்கின்றது. இந்த நிலையில் காணாமல்ஆக்கப்பட்டோரின் உறவுகள் முன்னெடுக்கும் போராட்டம் இதுவரை எந்தவொரு தீர்வும் முன்வைக்கப்படாத நிலையில் தொடர்கின்றது. இறுதிக்கட்ட யுத்தத்தின்போது தமது பிள்ளைகளை இராணுவத்திடம் கையளித்ததாகவும் எனினும் தமது பிள்ளைகளுக்கு என்ன நடந்தது எனவும் கேள்வி எழுப்பியுள்ளனர். …

Read More »

மஹிந்த, கோட்டாவை உடன் கைதுசெய்! – காணாமல் ஆக்கப்பட்டோரின் உறவினர்கள் வலியுறுத்து

மஹிந்த, கோட்டாவை உடன் கைதுசெய்

மஹிந்த, கோட்டாவை உடன் கைதுசெய்! – காணாமல் ஆக்கப்பட்டோரின் உறவினர்கள் வலியுறுத்து “மஹிந்த ராஜபக்ஷவின் ஆட்சிக் காலத்தில் – கோட்டாபய ராஜபக்ஷ பாதுகாப்பு அமைச்சின் செயலாளராக இருந்த காலத்தில்தான் எமது உறவுகள் பலர் காணாமல் ஆக்கப்பட்டனர். இதனை தற்போதைய மைத்திரிபால சிறிசேன தலைமையிலான அரசும் வெளிப்படையாகக் கூறியுள்ளது. எனவே, மஹிந்தவையும், கோட்டாபயவையும் உடன் கைதுசெய்து கையளிக்கப்பட்டு, கடத்தப்பட்டு காணாமல் ஆக்கப்பட்ட எமது உறவுகளுக்கு என்ன நடந்தது என்பதை இந்த அரசு …

Read More »