காணாமல்போனோர் குடும்பங்களின் அங்கத்தவர்கள், மனித உரிமை மீறல்களுக்கு உள்ளாக்கப்பட்ட நபர்கள், மனித உரிமைகளுக்காக குரல் கொடுக்கும் நபர்கள் அடங்கலாக பொதுவான சட்டமுறையற்ற கண்காணிப்பு மற்றும் துன்புறுத்தல்கள் பற்றிய சம்பவங்களை சட்ட மற்றும் ஒழுங்கு அமைச்சு அவ்வப்போது அறிந்து கொண்டுள்ளது. சட்டம் மற்றும் ஒழுங்கு அமைச்சு வெளியிட்டுள்ள ஊடக அறிக்கையில் இந்த விடயம் குறிப்பிடப்பட்டுள்ளது. இலங்கை அரசு தனது சகல பிரஜைகளினதும் பாதுகாப்பை எப்பொழுதும் உறுதி செய்ய கடமைப்பட்டுள்ளது. இலங்கை பொலிஸாருக்கு …
Read More »காணாமல்போனோர் அலுவலகத்தால் இராணுவத்துக்குப் பாரிய அச்சுறுத்தல் என்கிறார் திஸ்ஸ விதாரண!
காணாமல்போனோர் தொடர்பாக அமைக்கப்படவுள்ள அலுவலகம் யுத்தத்தை வெற்றிகொண்ட இராணுவத்தினருக்குப் பாரிய அச்சுறுத்தலாக உள்ளதென லங்கா சமசமாஜக் கட்சி கடும் எதிர்ப்பு வெளியிட்டுள்ளது. காணாமல்போனோர் தொடர்பாகக் கண்டறிவதற்கு அமைக்கப்படவுள்ள அலுவலகத்தின் ஊடாக நாட்டின் எந்தவொரு நபருக்கு எதிராகவும் நடவடிக்கை எடுக்க முடியும் என அக்கட்சியின் செயலாளரும் முன்னாள் அமைச்சருமான திஸ்ஸ விதாரண குறிப்பிட்டுள்ளார். இந்த அலுவலகத்தின் பரிந்துரைகள் சர்வதேச நீதிமன்றங்களிலும் அங்கீகரிக்கப்பட்டுள்ளதால், யுத்தத்தை வெற்றிகொண்ட இராணுவத்தினருக்கே அச்சுறுத்தல் என்றும் அவர் சுட்டிக்காட்டியுள்ளார். …
Read More »