விடை தெரியா கேள்விகள் – கவிதை பல்நூல்கள் ஆய்ந்ததும் சால்புடையோர் செவியுற்றும் சிலபல கேள்விகள் நிற்கின்றன விடையற்று அனாதைகளாய்… தத்துவங்களும் அனுபவங்களும் தத்தளிக்கின்றன விடைக்கு வித்தின்றி… கடைநிலை பாமரனுக்கு மட்டுமல்ல கடைத்தேறிய மேதாவிகளுக்குள்ளும் கடை விரிக்கின்றன… விடைதெரியா கேள்விகள்… விடைதெரியா கேள்விகளுக்கு விடை தராமலே விடை பெறுமோ நம்மிடம் வாழ்க்கை… எழுதியவர் : Usharanikannabiran […]
Tag: கவிதை
வாழ்க்கை ஒரு போராட்டக்களம் – கவிதை
வாழ்க்கை ஒரு போராட்டக்களம் – கவிதை வாழ்க்கை… காதல் கடந்து செல்லும் பருவ வயதில்… காதல் மட்டுமே வாழ்க்கை என்ற எண்ணம் நம்மில் பலருக்கு… வாழ்க்கை கடலில் இருக்கும் முத்துப்போல… மூச்சடக்கி கடலில் இறங்கி ஏறுபவனுக்கே முத்துக்கள் கிடைக்கும்… கரையில் நிற்பவனுக்கு கரை ஒதுங்கிய… கிளிஞ்சல்கள் மட்டுமே கிடைக்கும்… காதலும் கிளிஞ்சல்போல் காதலே வாழ்க்கை இல்லை… வாழ்க்கை கடலில் நீ தவறவிட்ட நீர்த்துளிபோல்… எளிதாக கிடைத்துவிடாது இன்பம்… தடைகள் தாண்டி […]
தந்திர உறவுகள் – கவிதை
தந்திர உறவுகள் – கவிதை அன்பு காட்டினால்- அப்பா அரவணைத்தால்- அன்னை அள்ளிக்கொடுத்தால்- அண்ணன் அன்னமிட்டால்- அண்ணி ஆடிப்பாடினால்- குழந்தை ஆமாப்ப்போட்டால்- அக்கா அணைத்தால்- கணவன் ஆசைகாட்டினால்- மனைவி ஆதரவுகாட்டினால்- அயலவர் அடங்கிப்போனால்- மைத்துனி அடிமையாய் இருந்தால்- மருமகள் அடக்கமாய் இருந்தால்- மகள் சீர் கொடுத்தால்- சகோதரன் அப்பப்பா என்ன தந்திர உறவுகளடா இது! உண்மையான உணர்வுகளுக்கு உருவம் கொடுக்கும் உறவுகள் உருவாவது எப்போது! எழுதியவர் : யோகராணி கணேசன் […]





