ஐ.நா மனித உரிமைகள் பேரவையில் நிறைவேற்றப்பட்ட தீர்மானத்தை சிறிலங்கா முழுமையாக நடைமுறைப்படுத்த வேண்டும் என்று ஐரோப்பிய ஒன்றியம் வலியுறுத்தியுள்ளது. இதுதொடர்பாக ஐரோப்பிய ஒன்றியத்தின் கொழும்பு பணியகம் வெளியிட்டுள்ள செய்திக் குறிப்பில், “ஐநா மனித உரிமைகள் பேரவைத் தீர்மானத்தை முழுமையாக நடைமுறைப்படுத்துவதற்கான ஐரோப்பிய ஒன்றியத்தின் ஆதரவு நிலைப்பாட்டில் எந்த மாற்றமும் கிடையாது. பாதிக்கப்பட்டவர்களின் இதயத்தில் தான் நீதியும், குணப்படுத்தல் வசதிகளும் உள்ளன என்பது முக்கியமாகும். வேறு எதுவும் அனைத்துலக சமூகத்தினால் ஏற்றுக் …
Read More »விடுதலைப் புலிகள் இயக்கத்தின் தடையை நீக்கியது ஐரோப்பிய ஒன்றியம்
விடுதலைப் புலிகள் இயக்கத்தை தீவிரவாத கறுப்புப் பட்டியலில் இருந்து ஐரோப்பிய ஒன்றிய நீதிமன்றம் நீக்கியுள்ளது. ஐரோப்பிய ஒன்றிய நீதிமன்றத்தின் நீதிபதிகள் இன்று இந்த தீர்ப்பை அளித்துள்ளனர். 2009ஆம் ஆண்டு விடுதலைப் புலிகள் இராணுவ ரீதியாகத் தோற்கடிக்கப்பட்ட பின்னர் தாக்குதல்களை நடத்தும் ஆபத்து இருப்பதற்கான சான்றுகளை ஐரோப்பிய ஒன்றியம் சமர்ப்பிக்கவில்லை என்று நீதிமன்றம் தெரிவித்துள்ளது. விடுதலைப் புலிகளின் நிதியை தொடர்ந்து முடக்கிவைக்கும் உத்தரவையும் ரத்துச் செய்தும் ஐரோப்பிய ஒன்றிய நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது. …
Read More »இலங்கையின் நல்லிணக்க செயற்பாடுகள் மந்த கதியில்: ஐரோப்பிய ஒன்றியம்
இலங்கையின் நல்லிணக்க செயற்பாடுகள் மிகவும் மந்த கதியிலேயே செல்கின்றதெனவும், இவ்விடயத்தில் அரசாங்கம் அதிக கவனஞ்செலுத்துவது அவசியம் என்றும் ஐரோப்பிய ஒன்றியம் தெரிவித்துள்ளது. அமைச்சர் ஏ.எச்.எம்.பௌசியுடனான சந்திப்பின்போது, இலங்கை மற்றும் மாலைதீவிற்கான ஐரோப்பிய ஒன்றியத் தூதுவர் டுங்–லாய் மார்க் இதனைத் தெரிவித்துள்ளார். குறிப்பாக காணாமல் போனோர் குறித்த அலுவலத்தை நிறுவுதல் உள்ளிட்ட நேரடி செயற்பாடுகளைக்கூட இலங்கை அரசாங்கம் செயற்படுத்த தவறியுள்ளதென டுங்–லாய் மார்க் சுட்டிக்காட்டியுள்ளார். இலங்கையின் நல்லிணக்க செயற்பாடுகள் குறித்து ஐரோப்பிய …
Read More »ஸ்ரீலங்காவுக்கு 42 மில்லியன் யூரோவை வழங்குகிறது ஐரோப்பிய ஒன்றியம்
ஸ்ரீலங்காவின் விவசாயத் துறையை நவீன மயப்படுத்தவதற்கும், நல்லிணக்க செயல்முறைகளை வலுப்படுத்துவதற்கும், 42 மில்லியன் யூரோவை ஐரோப்பிய ஒன்றியம் உதவியாக வழங்க முன்வந்துள்ளது. இதுதொடர்பாக ஸ்ரீலங்காவின் நிதியமைச்சர் செயலாளர் சமரதுங்கவுக்கும், ஐரோப்பிய ஒன்றியத்தின் ஸ்ரீலங்காவுக்கான தூதுவர் டங் லாய் மார்கேயுக்கும் இடையில் கடந்த ஏப்ரல் 6 ஆம் திகதி உடன்பாடு கையெழுத்திடப்பட்டுள்ளது. இதன்படி, இரண்டு திட்டங்களுக்காக 42 மில்லியன் யூரோவை (6791.4 மில்லியன் ரூபா) ஐரோப்பிய ஒன்றியம் வழங்கவுள்ளது. இதில் விவசாயத்துறையை …
Read More »புலிகளின் செயற்பாடுகள் பயங்கரவாத நடவடிக்கையாக ஏற்க முடியாது : ஐரோப்பிய நீதிமன்றம்
புலிகளின் செயற்பாடுகள் பயங்கரவாத நடவடிக்கையாக ஏற்க முடியாது : ஐரோப்பிய நீதிமன்றம் புலிகள் அமைப்பினை பயங்கரவாத அமைப்புக்கள் பட்டியலிலிருந்து நீக்க மறுக்கும் வகையிலான தீர்ப்பொன்றினை ஐரோப்பிய நீதிமன்றம் வழங்கியுள்ளது. சர்வதேச மனிதநேயச் சட்டத்தின் கீழ், போரில் ஈடுபடும் ஆயுதப் படைகளின் செயற்பாடுகள் பயங்கரவாத நடவடிக்கைகள் என்ற வகைக்குள் அடக்கப்படலாம் என்றும் ஐரோப்பிய ஒன்றிய நீதிமன்றம் தெரிவித்துள்ளது. ஐரோப்பிய ஒன்றியம் 2006ஆம் ஆண்டு விடுதலைப் புலிகள் அமைப்பினை தடைசெய்யப்பட்ட பயங்கரவாத அமைப்புக்களுக்கான …
Read More »மனித உரிமைகள் விடயத்தில் முன்னேற்றம் அவசியம் : ஐரோப்பிய ஒன்றியம் வலியுறுத்து
மனித உரிமைகள் விடயத்தில் முன்னேற்றம் அவசியம் : ஐரோப்பிய ஒன்றியம் வலியுறுத்து ஐரோப்பிய ஒன்றியத்திற்கான ஏற்றுமதி சலுகையான ஜீ.எஸ்.பி. பிளஸ் வரிச்சலுகையை பெற்றுக்கொள்ள வேண்டுமாயின் மனித உரிமை நிலைமைகளை மேம்படுத்துவது குறித்து சர்வதேசத்திற்கு வழங்கிய வாக்குறுதிகளை நிறைவேற்றுவதில் காத்திரமான முன்னேற்றங்களை மேற்கொள்ளவேண்டுமென ஐரோப்பிய ஒன்றியம் ஸ்ரீலங்காவிடம் வலியுறுத்தியுள்ளது. ஐரோப்பிய ஒன்றியத்தின் நடவடிக்கைக்குழு ஒன்று நேற்றும், இன்றும் கொழும்பில் நடத்திய இணைக்குழுக் கூட்டத்தின் பின்னர் வெளியிட்டுள்ள அறிக்கையொன்றில், ஸ்ரீலங்கா சித்திரவதை உள்ளிட்ட …
Read More »ஐ.நா நோக்கிய மனிதநேய ஈருருளிப் பயணத்தின் நான்காம் நாள்
ஐ.நா நோக்கிய மனிதநேய ஈருருளிப் பயணத்தின் நான்காம் நாள் ஐக்கிய நாடுகள் சபை நோக்கிய மனிதநேய ஈருருளிப் பயணம் நான்காவது நாளாக தொடர்ந்தும் முன்னெடுக்கப்பட்டுள்ளது. ஐரோப்பிய ஒன்றியத்தின் முன்றலில் இருந்து கடந்த 24 ஆம் திகதி ஆரம்பமான ஈருருளிப் பயணம் தொடர்ச்சியாக இன்றும் முன்னெடுக்கப்படவுள்ளது. ஐ.நா நோக்கிய பேரணியை வலுப்படுத்தும் நோக்கில் ஐரோப்பிய நேரத்தின் படி கடந்த 26 ஆம் திகதி மதியம் ஆரம்பமான குறித்த பயணம், ஐரோப்பிய நாடுகளிடம் …
Read More »