எதிர்வரும் 07ம் திகதி இடம்பெறவுள்ள பாராளுமன்ற அமர்வு நேரத்தை அதிகரிக்கும்படி, எதிர்க்கட்சித் தலைவர் மஹிந்த ராஜபக்ஷ சபாநாயகர் கரு ஜயசூரியவுக்கு கடிதம் எழுதியுள்ளார். அன்றைய தினம் மாலை 05.30 மணி முதல் இரவு 07.30 மணி வரை இடம்பெறுவுள்ள சபை ஒத்திவைப்பு பிரேரணை தொடர்பான விவாதத்தை 01.00 மணி முதல் 07.30 மணி வரை நடத்த நடவடிக்கை எடுக்குமாறு கோரிக்கை விடுத்துள்ளார். நாட்டின் தற்போதைய நிலையை கருத்திற் கொண்டு இந்நடவடிக்கையை …
Read More »தற்போதைய நாடாளுமன்றம் குறித்து எதிர்க்கட்சித் தலைவர் கருத்து
மனிதர்களின் நடத்தையை தவறாக எடுத்துக்காட்டும் இடமாக தற்போதைய நாடாளுமன்றம் மாறியுள்ளது என எதிர்க்கட்சித் தலைவர் மஹிந்த ராஜபக்ஷ தெரிவித்துள்ளார். திஸ்ஸமஹாராமையில் நேற்று இடம்பெற்ற நிகழ்வு ஒன்றில் கலந்துகொண்டு கருத்து தெரிவித்தபோதே அவர் இதனைத் தெரிவித்துள்ளார். தாம் 1970ஆம் ஆண்டுகளில் இருந்த நாடாளுமன்றம் தற்போது இல்லை என அவர் குறிப்பிட்டுள்ளார். நாடாளுமன்றிற்கு வருகைதந்து பதிலளிக்க முடியாத ஒருவர் குறித்து விமர்சனம் முன்வைக்கப்படுவதில்லை. எனினும், இன்று அந்த நிலைமை மாறியுள்ளதாக மஹிந்த ராஜபக்ஸ …
Read More »இலங்கை நாடாளுமன்றத்தில் இரண்டு எதிர்க்கட்சித் தலைவர்களா?
சபாநாயகர் இன்னும் தன்னை பதவியில் இருந்து நீக்கவில்லை என தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் தலைவர் தெரிவித்துள்ளார். நாடாளுமன்றத்தில் இன்றைய தினம் விசேட உரையொன்றை ஆற்றும் போதே அவர் இந்த விடயத்தை குறிப்பிட்டுள்ளதாக தகவல்கள் தெரிவிக்கின்றன. மேலும், தற்போது இலங்கையில் எதிர்க்கட்சித் தலைவர் பதவியை இருவர் வகித்து வருவதாக கருத வேண்டியுள்ளது என்றும் அவர் குறிப்பிட்டுள்ளார். நேற்று நடைபெற்ற நாடாளுமன்ற அமர்வின் போது எதிர்க்கட்சித் தலைவராக முன்னாள் ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷ …
Read More »இரா.சம்பந்தனே எதிர்க்கட்சித் தலைவர்
எதிர்க்கட்சித் தலைவர் பதவியிலிருந்து இரா. சம்பந்தனை மாற்றுவதற்கு எவ்விதத் தீர்மானங்களும் கிடையாது என ஐ. ம .சு.மு பாராளுமன்ற உறுப்பினர் டலஸ் அழகப்பெரும தெரிவித்துள்ளார். ஒன்றிணைந்த எதிரணி ஏற்பாடு செய்திருந்த ஊடகவியலாளர் சந்திப்பில் கலந்துகொண்டு உரையாற்றிய அவர் மேலும் குறிப்பிட்டதாவது, 54 சுதந்திரக் கட்சி எம்.பிக்கள் எதிரணியில் இருக்கையில், 16 பேர் கொண்ட தமிழ் கூட்டமைப்பிற்கு எதிர்க்கட்சித் தலைவர் பதவி வழங்கப்பட்டது. தற்பொழுதும் அதே வாதத்தின் பிரகாரம் எதிரணியில் ஐ.தே.க …
Read More »தமிழ் தேசியக் கூட்டமைப்பின் தீர்மானம் மகிழ்ச்சியளிக்கிறது: அஸ்கிரிய பீடம்
மகாநாயக்கர்களை சந்திப்பதற்கு, எதிர்க்கட்சித் தலைவர் இரா.சம்பந்தன் உள்ளிட்ட தமிழ் தேசியக் கூட்டமைப்பினர் எடுத்துள்ள தீர்மானம் மகிழ்ச்சியளிப்பதாக அஸ்கிரிய பீடத்தின் தலைமைச் செயலாளர் வண.மெதகம தம்மானந்த தேரர் தெரிவித்துள்ளார். புதிய அரசியல் சாசனமொன்று அவசியமில்லையென பௌத்த உயர் பீடத்தின் மகாநாயக்கர்கள் தெரிவித்துள்ள நிலையில், புதிய அரசியலமைப்பின் அவசியப்பாடு தொடர்பாக மகாநாயக்கர்களுக்கு தெளிவுபடுத்தவுள்ளதாக கூட்டமைப்பினர் கூறியிருந்தனர். இதற்கு பதிலளிக்கும் போதே அஸ்கிரிய பீடத்தின் தலைமைச் செயலாளர் மேற்குறித்தவாறு குறிப்பிட்டுள்ளார். கூட்டமைப்பினரை சந்திப்பதில் மகிழ்ச்சியடைவதாக …
Read More »போராட்டங்களுக்கு தீர்வாக மே தினம் அமையவேண்டும்: சம்பந்தன்
”தொழிலாளர் வர்க்கத்தின் போராட்டம், வெற்றி மற்றும் அவர்கள் முகம்கொடுத்து வருகின்ற சவால்கள் என்பவற்றினை முன்னிலைப்படுத்தி அவர்களின் பிரச்சினைகளுக்குத் தீர்வு காணும் ஒரு மேடையாகவும், தொழிலாளர்களின் முயற்சிகளை நினைவுகூருவதற்கான ஒரு சந்தர்ப்பமாகவும் தமது மே தினக் கொண்டாட்டங்களை அமைத்துக் கொள்ளுமாறு அனைத்து அரசியல் கட்சிகளிடமும் வேண்டுகோள் விடுக்க விரும்புகிறேன்” என எதிர்க்கட்சித் தலைவர் இரா.சம்பந்தன் தெரிவித்துள்ளார். சர்வதேச தொழிலாளர் தினத்தை முன்னிட்டு வெளியிட்டுள்ள வாழ்த்துச் செய்தியிலேயே அவர் இவ்வாறு குறிப்பிட்டுள்ளார். குறித்த …
Read More »மீதொட்டமுல்ல அனர்த்தம்; பாதிக்கப்பட்டவர்களுக்கு இரா. சம்பந்தன் இரங்கல்
மீதொட்டமுல்ல பிரதேசத்தில் ஏப்ரல் 14 ஆம் திகதி இடம்பெற்ற துரதிஷ்ட சம்பவத்தில் உயிரிழந்த குடும்ப உறவுகளுக்கு தனது ஆழ்ந்த அனுதாபங்களை தெரிவித்துக்கொள்ளவதாக எதிர்க்கட்சித் தலைவரும் தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் தலைவருமான இரா. சம்பந்தன் இரங்கல் தெரிவித்துள்ளார். எதிர்க்கட்சித் தலைவர் இன்று அனுப்பி வைத்துள்ள இரங்கல் செய்தியிலே இதனைக் குறிப்பிட்டுள்ளார். இந்த சம்பவமானது நூற்றுக்கணக்கான குடும்பங்களின் வாழ்க்கைகளை பாதித்துள்ளதாகக் குறிப்பிட்ட அவர், இச்சந்தர்ப்பத்தில் பாதிக்கப்பட்ட மக்களின் வாழ்க்கையை மீளக்கட்டியெழுப்புவதற்கான அனைத்து நடவடிக்கைகளையும் …
Read More »போரில் 150,000 மக்கள் கொல்லப்பட்டனர்: இரா சம்பந்தன் இந்தியாவில் தெரிவிப்பு
போரில் 150,000 மக்கள் கொல்லப்பட்டனர்: இரா சம்பந்தன் இந்தியாவில் தெரிவிப்பு வன்னியில் இடம்பெற்ற மூன்றுதசாப்தகால போரில் 150,000 இற்கும் மேற்பட்ட தமிழ் மக்கள் கொல்லப்பட்டுள்ளதாக எதிர்க்கட்சித் தலைவர் இரா. சம்பந்தன் தெரிவித்துள்ளார். கொழும்பிலிருந்து வெளியாகும் ஆங்கில நாளிதழான தி ஐலண்ட் பத்திரிகை இந்த செய்தியை வெளியிட்டுள்ளது. இந்தியாவின், புதுடில்லியில் அண்மையில் நடைபெற்ற பயங்கரவாதத்திற்கு எதிரான மாநாட்டில் கலந்துகொண்டு உரையாற்றியபோதே எதிர்கட்சித் தலைவர் இதனைக் கூறியுள்ளதாக அந்த செய்தியில் தெரிவிக்கப்பட்டுள்ளது. மேலும் …
Read More »