உறுதியற்ற அரசியல் செயற்பாடுகளால் இலங்கை அரசாங்கம் பல முதலீடுகளை இழந்து வருவதாக முன்னாள் பாதுகாப்புச் செயலாளர் கோட்டாபய ராஜபக்ஷ குறிப்பிட்டுள்ளார். கம்பஹாவில் நேற்று (ஞாயிற்றுக்கிழமை) எலிய அமைப்பின் திட்டத்தை ஆரம்பித்து வைக்கும் நிகழ்வில் உரையாற்றிய போதே அவர் இதனைக் குறிப்பிட்டுள்ளார். இது தொடர்பாக அவர் மேலும் தெரிவிக்கையில், “கடந்த நான்கு ஆண்டுகளில் இலங்கையால் புதிதாக நேரடி முதலீட்டு வாய்ப்புகளைப் பெற முடியவில்லை. இதற்கு இங்கு காணப்படும் அரசியல் ஸ்திரமற்ற தன்மையே …
Read More »மன்செஸ்டர் குண்டுத் தாக்குதல்: இலங்கை அரசாங்கம் கண்டனம்
பிரித்தானியாவில் இடம்பெற்ற பயங்கரவாத தாக்குதலுக்கு இலங்கை அரசாங்கம் கண்டனம் வெளியிட்டுள்ளது. பிரித்தானியா மன்செஸ்டர் பகுதியில் இடம்பெற்ற இந்த தாக்குதலில் 19 பேர் உயிரிழந்துள்ளதுடன், 50க்கும் மேற்பட்டோர் படுகாயம் அடைந்துள்ளனர். இந்த தாக்குதலுக்கு இலங்கை அரசாங்கம் கவலை வெளியிட்டுள்ளதாகவும் பாதிக்கப்பட்டவர்களின் குடும்பத்திற்கு அனுதாபங்களை தெரிவித்துக் கொள்வதாகவும் இலங்கை வெளிவிவகார அமைச்சின் ஊடகப் பேச்சாளர் மகிஷினி கொலன்ன தெரிவித்துள்ளார். தனது உத்தியோகபூர்வ டுவிட்டர் கணக்கின் மூலமே இலங்கை வெளிவிவகார அமைச்சின் ஊடகப் பேச்சாளர் …
Read More »சர்வதேச நீதிபதிகள் கொண்ட விசாரணை பொறிமுறையே இம்முறையும் வலியுறுத்தப்படும்
சர்வதேச நீதிபதிகள் கொண்ட விசாரணை பொறிமுறையே இம்முறையும் வலியுறுத்தப்படும் சர்வதேச நீதிபதிகள் கொண்ட விசாரணைப் பொறிமுறையே இம்முறையும் வலியுறுத்தப்படும் எனவும், கடந்த 2015ஆம் ஆண்டு பிரேரணையை ஒத்ததாகவே புதிய பிரேரணையும் அமையுமெனவும் அமெரிக்கா மற்றும் பிரித்தானியா நாடுகள் ஜெனிவாவில் தெரிவித்துள்ளன. அமெரிக்காவினால் நேற்றையதினம் (செவ்வாய்கிழமை) ஏற்பாடு செய்யப்பட்டிருந்த இலங்கை குறித்த நகல்வரைபு தொடர்பான உபகுழுக் கூட்டத்திலேயே இவ்விடயங்கள் தெரிவிக்கப்பட்டுள்ளன. அத்துடன் இக்கூட்டத்தில், பிரித்தானியா உள்ளிட்ட மனித உரிமைகள் பேரவையில் அங்கம் …
Read More »சர்வதேச நீதிபதிகளை நீக்கினால் உறுப்பு நாடுகள் பிளவுபடும் : ராஜதந்திர வட்டாரங்களில் பரபரப்பு
சர்வதேச நீதிபதிகளை நீக்கினால் உறுப்பு நாடுகள் பிளவுபடும் : ராஜதந்திர வட்டாரங்களில் பரபரப்பு இலங்கையின் போர்க்குற்ற விசாரணைகளில் சர்வதேச நீதிபதிகளை அனுமதிக்கப் போவதில்லை என்ற தீர்மானத்தில் ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன மற்றும் பிரதமர் உறுதியாக உள்ளனர். இந்நிலையில், இலங்கை மீதான விசாரணை பொறிமுறையிலிருந்து சர்வதேச நீதிபதிகள் நீக்கப்படின் அது, ஐ.நா. மனித உரிமைகள் பேரவையின் உறுப்பு நாடுகளிடையே பிளவை ஏற்படும் என ராஜதந்திர வட்டாரங்கள் தெரிவித்துள்ளன. கடந்த 2015ஆம் ஆண்டு …
Read More »இலங்கையின் செயற்பாடுகள் மகிழச்சியளிக்கும் வகையில் இல்லை: ஐ.நா. குற்றச்சாட்டு
இலங்கையின் செயற்பாடுகள் மகிழச்சியளிக்கும் வகையில் இல்லை: ஐ.நா. குற்றச்சாட்டு இலங்கையில் நிலைமாறுகால பொறிமுறை தொடர்பான செயற்பாடுகளின் வேகம் மகிழ்ச்சி அளிக்கும் வகையில் அமையவில்லை எனச் சுட்டிக் காட்டியுள்ள ஐக்கிய நாடுகள் மனித உரிமைப் பேரவையின் ஆணையாளர் சயிட் அல் ஹூசெய்ன், தற்போது கிடைத்துள்ள சந்தர்ப்பத்தை பயன்படுத்தி இலங்கை அரசாங்கம் நிலையான சமாதானத்தை ஏற்படுத்துவதற்கு தேவையான அடிப்படை விடயங்களை நிறைவேற்றிக் கொள்ள வேண்டும் எனவும் சுட்டிக் காட்டியுள்ளார். ஜெனீவாவில் நடைபெற்று வருகின்ற …
Read More »பொறுப்புக்கூறல் விவகாரம்: ஐ.நா.விடம் கால அவகாசம் கோரும் இலங்கை
பொறுப்புக்கூறல் விவகாரம்: ஐ.நா.விடம் கால அவகாசம் கோரும் இலங்கை இலங்கையில் இடம்பெற்றதாகக் கூறப்படும் யுத்தக் குற்றம் மற்றும் மனித உரிமை மீறல் தொடர்பில் ஐ.நா.வில் கடந்த 2015ஆம் ஆண்டு நிறைவேற்றப்பட்ட தீர்மானத்தின் பரிந்துரைகளை இலங்கை அரசாங்கம் இன்னும் நடைமுறைப்படுத்தாமை குறித்து பல்வேறு விமர்சனங்கள் முன்வைக்கப்பட்டு வரும் நிலையில், இவ்விடயம் குறித்து மேலும் ஒன்றரை வருட கால அவகாசத்தை கோருவதற்கு இலங்கை அரசாங்கம் தீர்மானித்துள்ளது. இதற்கு சிவில் அமைப்புகளின் ஒத்துழைப்பை அரசாங்கம் …
Read More »