ஆவா குழு வவுனியாவில் பெற்றோல் குண்டு தாக்குதல்! வவுனியா, பண்டாரிக்குளம் பகுதியில் உள்ள வீடு ஒன்றின் முன் பெற்றோல் குண்டுத் தாக்குதல் நடத்தப்பட்டுள்ளதுடன், வீட்டின் சுவரில் ஆவா குழு என பெயர் பதிக்கப்பட்டுள்ளது. இரவு 9 மணியளவில் இடம்பெற்ற இச்சம்பவம் தொடர்பில் மேலும் தெரியவருவதாவது, வவுனியா, பண்டாரிக்குளம், கூமாங்குளம் வீதியில் உள்ள வீடு ஒன்றின் முன்னால் மோட்டார் சைக்கிள்களில் வந்த இளைஞர்கள் அவ்விடத்தில் நின்றுவிட்டு வீட்டு முன்பாக பெற்றோல் குண்டுத் …
Read More »ஆவா குழுவை உருவாக்கியது புலிகளல்ல!
யாழ்ப்பாணத்தில் தற்போது உருவாகியிருக்கும் ஆவா குழுவுக்கும் புலிகளுக்கு எவ்வித தொடர்பும் கிடையாது என யாழ்.பாதுகாப்புப் படைத் தளபதி மேஜர் ஜெனரல் டி.டி.கே. ஹெட்டியாரச்சி தெரிவித்துள்ளார். ‘ வடமாகாணத்தில் தற்போது விடுதலைப்புலிகள் இல்லை. 2009ஆம் ஆண்டு யுத்தம் மௌனிக்கப்பட்டதன் பின் விடுதலைப்புலிகள் இலங்கையில் இல்லை என அவர் குறிப்பிட்டுள்ளார். தென்னிந்திய திரைப்படங்களின் தாக்கம் மற்றும் மதுபாவனை, போதைப்பொருள் பாவனை என்பவற்றாலேயே ஆவா குழு உருவாகியுள்ளது. இவர்களுக்கும் புலிகளுக்கும் தொடர்புகள் இல்லை என …
Read More »பீரங்கியை சுமந்தவர்களுக்கு கத்தியை சுமக்கவேண்டிய அவசியம் இல்லை: முன்னாள் போராளிகள்
பீரங்கிகளையும் செல்களையும் தோளில் சுமந்து சென்று தாக்குதல் நடத்தி ஜனநாயக பாதைக்கு வந்துள்ள முன்னாள் போராளிகளுக்கு, கத்திகளுடன் அலைய வேண்டிய தேவையில்லையென ஜனநாயக போராளிகள் கட்சியினர் தெரிவித்துள்ளனர். மட்டக்களப்பு லயன்ஸ் கிளப் மண்டபத்தில் நேற்று (ஞாயிற்றுக்கிழமை) நடைபெற்ற செய்தியாளர் சந்திப்பில், ஜனநாயக போராளிகள் கட்சியின் ஊடகச் செயலாளர் எஸ்.துளசி இவ்வாறு குறிப்பிட்டுள்ளார். ஆவா குழு என்ற பெயரில் முன்னாள் போராளிகளே செயற்படுகின்றனர் என பல்வேறு குற்றச்சாட்டுக்கள் முன்வைக்கப்பட்டு வரும் நிலையில், …
Read More »இராணுவமே ஆவா குழுவை உருவாக்கியது! – நாடாளுமன்றில் மீண்டும் தெரிவித்தது கூட்டமைப்பு
வடக்கில் கைது, தேடுதல்களால் முன்னாள் போராளிகளின் எதிர்காலம் கேள்விக்குறியாகியுள்ளது என்று தெரிவித்த தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் நாடாளுமன்ற உறுப்பினர் சி.சிறிதரன், இராணுவமே ஆவா குழுவை உருவாக்கியது எனவும் சுட்டிக்காட்டினார். நாடாளுமன்றத்தில் நேற்று நடைபெற்ற இலங்கை ஜேர்மன் தொழில்நுட்பப் பயிற்சி நிறுவக சட்டமூலம் மீதான விவாதத்தில் கலந்துகொண்டு உரையாற்றுகையிலேயே அவர் இதனைத் தெரிவித்தார். இது தொடர்பாக அவர் மேலும் கூறியவை வருமாறு:- “12 ஆயிரம் போராளிகள் புனர்வாழ்வளிக்கப்பட்டு சமூகமயப்படுத்தப்பட்டுள்ளனர் என்றும், அவர்களுக்கு …
Read More »