Tag: அழுத்தம் கொடுக்கிறது மஹிந்த அணி

ஜப்பான் பறந்தார் மஹிந்த!

முன்னாள் ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷ ஜப்பானுக்குச் சென்றுள்ளார். நேற்றுமுன்தினம் இரவு 07.15 மணிக்கு இலங்கையிலிருந்து அவர் தனது பயணத்தை ஆரம்பித்தார் விமான நிலையத் தகவல்கள் தெரிவித்தன. ஜப்பானிலுள்ள இலங்கையர்கள் விடுத்த அழைப்பின் பேரில் அங்கு சென்றுள்ள அவர், சமய நிகழ்வொன்றில் கலந்துகொள்ளவுள்ளார் எனவும் தெரியவந்துள்ளது. இதேவேளை, மஹிந்த ராஜபக்ஷவுடன் இந்த விஜயத்தில் ரொஷான் ரணசிங்க, பியல் நிஷாந்த ஆகிய நாடாளுமன்ற உறுப்பினர்களும் இணைந்துகொண்டுள்ளனர்.

அரசமைப்பில் தமது நிலைப்பாட்டில் அழுத்தம் கொடுக்கிறது மஹிந்த அணி!

அரசமைப்புத் தொடர்பில் தம்மால் முன்வைக்கப்படும் திருத்தங்கள் உள்வாங்கப்படாவிட்டால், வழிநடத்தல் குழுவிலிருந்து வெளியேறுவோம் என்று பொது எதிரணியான மஹிந்த அணியின் முக்கிய தலைவர்களில் ஒருவர் தமிழ்ப் பத்திரிகை ஒன்றுக்குத் தெரிவித்துள்ளார். புதிய அரசமைப்பு உருவாக்க நடவடிக்கையில் ஈடுபட்டுள்ள வழிநடத்தல் குழு, இடைக்கால அறிக்கையை தயாரித்துள்ளது. கடந்த 3 ஆம்திகதி இடைக்கால அறிக்கையின் வரைபு, வழிநடத்தல் குழுவின் சகல உறுப்பினர்களுக்கும் விநியோகிக்கப்பட்டுள்ளது. இடைக்கால வரைவு மீதான கருத்துக்களை, வழிநடத்தல் குழுவின் உறுப்பினர்கள் எதிர்வரும் […]