நாட்டின் பொது வளங்களை சர்வதேசத்துக்கு தாரைவார்த்துக் கொடுத்து உலகின் பலமிக்க நாடுகளின் போர்க்களமாக இலங்கையை மாற்றுவதற்கே நல்லாட்சி அரசு முனைவதாக தேசிய அமைப்புகளின் சம்மேளனத் தலைவரும் மஹிந்தவின் விசுவாசியுமான குணதாஸ அமரசேகர தெரிவித்தார். கொழும்பில் நேற்று செவ்வாய்க்கிழமை நடைபெற்ற ஊடகவியலாளர் சந்திப்பொன்றில் கலந்துகொண்டு உரையாற்றியபோதே அவர் மேற்கண்டவாறு கூறினார். அவர் மேலும் தெரிவிக்கையில், “நல்லாட்சி என்று பொய் வாக்குறுதிகளை மக்களுக்கு விதைத்த தற்போதைய அரசு நாட்டின் பொது வளங்களையும், அரச …
Read More »இலங்கையைக் கூறுபோட்டு விற்கின்ற ஆட்சியாளர்களுக்குத் தண்டனை உறுதி! – சரத் வீரசேகர கூறுகின்றார்
“இலங்கையின் வளங்களை சர்வதேசத்துக்குக் கூறுபோட்டுக்கொடுக்கும் தற்போதைய ஆட்சியாளர்களுக்கு அமையப்போகும் வேறோர் அரசின்கீழ் தேசத்துரோகிகளாக அடையாளப்படுத்தப்பட்டு கடுமையான தண்டனை வழங்கப்படும்.” – இவ்வாறு முன்னாள் நாடாளுமன்ற உறுப்பினரும் முன்னாள் ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷவின் நெருங்கிய நண்பருமான ரியர் அட்மிரல் சரத் வீரசேகர தெரிவித்தார். அவர் மேலும் கூறியதாவது:- “இந்தியா, சீனா உள்ளிட்ட உலகின் பலம்வாய்ந்த நாடுகளுக்கு எமது நாட்டின் அரச வளங்களை விற்பனைசெய்வதன் மூலம் எதிர்காலத்தில் எமது நாடு வளங்களற்ற நாடாக …
Read More »அம்பாந்தோட்டை துறைமுகம் குறித்த இறுதி உடன்பாடு செய்யப்படவில்லை
அம்பாந்தோட்டை துறைமுகம் தொடர்பாக சிறிலங்கா அரசாங்கத்துக்கும் சீன நிறுவனத்துக்கும் இடையில் இன்னமும் இறுதி உடன்பாடு ஏற்படவில்லை என்று பிரதமர் ரணில் விக்கிரமசிங்க தெரிவித்துள்ளார். அம்பாந்தோட்டை துறைமுக உடன்பாடு சிறிலங்கா நாடாளுமன்றத்தில் இன்று நடைபெறும் விவாதத்தில் உரையாற்றிய போதே அவர் இதனைத் தெரிவித்தார். அம்பாந்தோட்டை துறைமுகத்தினால் அரசாங்கம் கடுமையான நிதி இழப்புகளை சந்தித்துக் கொண்டிருக்கிறது. இந்த இழப்புகள் ஈடு செய்யப்பட வேண்டும். சீன நிறுவனத்துடனான உடன்பாடு கையெழுத்திடப்படுவதற்கு முன்னர், இறுதி வரைவு …
Read More »