தன்னை கொலை செய்யும் நோக்கத்தோடு நடத்தப்பட்ட தாக்குதலை தமிழரசுக் கட்சியினரே நடத்தியதாக வடக்கு மாகாணசபை அமைச்சர் அனந்தி சசிதரன் தெரிவித்திருப்பது வரவேற்கத்தக்கது என நாடாளுமன்ற உறுப்பினர் டக்ளஸ் தேவானந்தா தெரிவித்துள்ளார். 2013ஆம் ஆண்டு வடக்கு மாகாணசபைக்கான தேர்தல் அறிவிக்கப்பட்டிருந்த நிலையில் இந்த சம்பவம் இடம்பெற்றிருந்தத. இது குறித்து ஊடகங்களுக்கு அனுப்பி வைத்துள்ள அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளதாவது 2013ஆம் ஆண்டு வடக்கு மாகாணசபைக்கான தேர்தல் அறிவிக்கப்பட்டிருந்த நிலையில் தன்னை கொலை செய்யும் நோக்கத்தோடு …
Read More »வடக்கு அமைச்சரவையில் அனந்தி, சர்வேஸ்வரனின் பதவிகள் நிரந்தரமாகும்!
வடக்கு மாகாண புனர்வாழ்வு, மகளிர் விவகாரம், கூட்டுறவு அமைச்சராக நியமிக்கப்பட்ட திருமதி அனந்தி சசிதரன் மற்றும் கல்வி அமைச்சராக நியமிக்கப்பட்ட க.சர்வேஸ்வரன் இருவருக்கும் பதவிகள் நிரந்தரமாக்கப்படும் என்று தெரிகின்றது. மூன்று மாதங்களுக்கு மட்டும் தற்காலிகமாகவே அவர்களுக்குப் பதவி வழங்கப்படுவதாக முதலமைச்சர் சி.வி.விக்னேஸ்வரன் அறிவித்திருந்தார். எனினும், மாகாண சபையின் எஞ்சிய காலப் பகுதிக்கும் அவர்கள் அமைச்சர்களாகத் தொடர்வார்கள் என்று கூறப்படுகின்றது. வடக்கு மாகாண முதலமைச்சர் சி.வி.விக்னேஸ்வரனுக்கும், தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் பங்காளிக் …
Read More »வடக்கு மாகாண அமைச்சர்களாக அனந்தி மற்றும் சர்வேஸ்வரன் நியமனம்
வடக்கு மாகண புதிய அமைச்சர்களாக அனந்தி சசிதரன் மற்றும் கந்தையா சர்வேஸ்வரன் ஆகியோர் முதலமைச்சரினால் நியமிக்கப்பட்டுள்ளனர். இவர்கள் இருவரும் 3 மாதத்திற்கு தற்காலிகமாக நியமிக்கப்பட்டுள்ளதாகவும் முதலமைச்சர் தெரிவித்தார். வடக்கு மாகாண முதலமைச்சரின் வாசஸ்தலத்தில் வடக்கு மாகாண சபை உறுப்பினர்களுடன் நடைபெற்ற சந்திப்பின் பின்னர் முதலமைச்சர் ஊடகங்களுக்கு தெரிவித்தார். விவசாய அமைச்சு முதலமைச்சரின் கீழும், அதன் பிரிவில் இருந்த கூட்டுறவு மற்றும் சமூக சேவைகள் மகளிர் விவகார அமைச்சுக்கள் அனந்தி சசிதரனுக்கும், …
Read More »கூட்டமைப்பை சிதைக்கும் எண்ணமில்லை: அனந்தி சசிதரன்
தமிழ் தேசியக் கூட்டமைப்பினை சிதைக்கும் எண்ணம் தனக்கில்லை எனவும் எவ்வாறான எதிர்ப்புகள் வந்தாலும் அதனை கூட்டமைப்பிற்குள் இருந்தவாறே சமாளிக்க தயார் என்றும் வட. மாகாண சபை உறுப்பினர் அனந்தி சசிதரன் தெரிவித்துள்ளார். தமிழ் மக்கள் பேரவையில் அங்கம் வகிக்கும் சில அரசியல் தலைமைகளினால் புதிய அரசியல் கட்சியொன்றை உருவாக்குவதற்கான முயற்சிகள் மேற்கொள்ளப்பட்டு வருவதாக வெளியான தகவல்கள் குறித்து வினவிய போதே அவர் இவ்வாறு குறிப்பிட்டுள்ளார். இது தொடர்பில் மேலும் தெரிவித்த …
Read More »சர்வதேசத்தின் ஒத்துழைப்புடன் தமிழர்களை ஏமாற்ற முயற்சி
சர்வதேசத்தின் ஒத்துழைப்புடன் தமிழர்களை ஏமாற்ற முயற்சி ஐக்கிய நாடுகள் மனித உரிமைகள் பேரவைக்கு ஸ்ரீலங்கா அரசாங்கம் வழங்கிய வாக்குறுதிகளை நிறைவேற்ற மேலும் காலஅவகாசம் வழங்கக்கூடாது என தமிழ்த் தேசியக் கூட்டமைப்பு, வட மாகாண சபை உறுப்பினர் கோரிக்கை விடுத்துள்ளார். ஸ்ரீலங்கா அரசாங்கத்திற்கு மேலும் காலஅவகாசம் வழங்குவதானது காணாமற்போனவர்களின் உறவினர்களுக்கு இழைக்கப்படும் அநீதியாக அமையுமெனவும் அவர் வலியுறுத்தினார். “வடக்கு கிழக்கில் வலிந்து காணாமற் ஆக்கப்பட்டவர்களின் குரல்“ இன்று கொழும்பில் ஆர்ப்பாட்டம் ஒன்றை …
Read More »நெடுந்தாரகை படகு சேவையில் ஈடுபடுவதில்லை: அனந்தி குற்றச்சாட்டு
நெடுந்தாரகை படகு சேவையில் ஈடுபடுவதில்லை: அனந்தி குற்றச்சாட்டு நெடுந்தீவு மக்களின் கடல்பயணத்தை இலகு படுத்தும் நோக்கில் ஆரம்பிக்கபட்ட ”நெடுந்தாரகை” படகு வெள்ளோட்டம் விடப்பட்டதன் பின்னர் பயணிகள் சேவையில் ஈடுபடவில்லையென வடமாகாணசபை உறுப்பினர் அனந்தி சசிதரன் குற்றம் சுமத்தியுள்ளார். இதனால் நெடுந்தாரகை படகு சேவை தொடர்பில் விசாரணை நடத்தி அடுத்த அமர்வில் பதிலளிக்கப்படும் என முதலமைச்சர் சீ.வி.விக்னேஸ்வரன் கூறியுள்ளார். வடமாகாணசபையின் 83 ஆவது அமர்வு நேற்று நடைபெற்ற போதே மாகாணசபை …
Read More »