அரசமைப்பில் பௌத்த சமயத்துக்குரிய முதன்மை இடம் பாதுகாக்கப்படும் என்றும், அதேபோல் சமயங்களுக்கும் நியாயத்தை வழங்குவதே அரசின் நிகழ்ச்சிதிட்டமாகும் என்றும் ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன தெரிவித்தார். பத்தரமுல்லை அபேகம வளாகத்தில் நேற்று நடைபெற்ற ரணவிரு வீடுகள் மற்றும் காணி உறுதிகள் வழங்கும் நிகழ்வில் கலந்துகொண்டு உரையாற்றுகையிலேயே அவர் மேற்கண்டவாறு கூறினார். அவர் மேலும் தெரிவிக்கையில், “பௌத்த தத்துவத்தின் உன்னத செய்தியை உலகுக்கு எடுத்துச்செல்லும் நோக்கிலேயே சர்வதேச வெசாக் தின நிகழ்வுகள் இலங்கையில் […]





