பளை, அரசர்கேணியில் நிலக்கீழ் பதுங்கு குழி ஒன்று நேற்றுக் கண்டுபிடிக்கப்பட்டது. காணியின் உரிமையாளர் நேற்றுக் காணியைத் துப்புரவு செய்தபோதே நிலக்கீழ் பதுங்குழி தென்பட்டது. இந்தப் பதுங்கு குழி தமிழீழ விடுதலைப் புலிகள் அமைப்பால் பயன்படுத்தப்பட்டது என்று நம்பப்படுகின்றது. பதுங்கு குழி இருப்பது தொடர்பில் இராணுவத்தினருக்குத் தெரிவிக்கப்பட்டது. அவர்கள் அந்தப் பகுதிக்குச் சென்று ஆய்வுகளை மேற்கொண்டனர். பதுங்கு குழியை அகற்ற நடவடிக்கை எடுக்கப்படும் என்று தெரிவித்த இராணுவத்தினர், அதுவரை காணியில் எந்த […]
Tag: பளை
பளை பிரதேசக் காடுகளில் ஆபத்தான வெடிபொருட்கள்!
கிளிநொச்சி, பச்சிலைப்பள்ளி பிரதேச செயலக பிரிவிலுள்ள காடுகளில் ஆபத்தான வெடிபொருட்கள் காணப்படுவதாக வன வளப் பாதுகாப்பு அதிகாரிகள் தெரிவித்துள்ளனர். தங்களது பிரதேச எல்லைக்குட்பட்ட காடுகளில் பரிசோதனைக்காகச் சென்ற போதே அங்கு ஆபத்தான வெடிபொருட்கள் காணப்படுவதனை அவதானித்துள்ளனர். குறித்த பகுதிகளில் வெடிக்காத நிலையில் காணப்படும் வெடிபொருட்கள் மனிதர்களுக்கும், விலங்குகளுக்கும் எவ்வேளையிலும் ஆபத்தை ஏற்படுத்தலாம் எனவும் அவர்கள் தெரிவித்துள்ளனர். எனவே உரிய தரப்பினர் இவற்றை அடையாளம் கண்டு, அவற்றை அகற்றுவதற்கான நடவடிக்கைகளை எடுக்கவேண்டும் […]





