இலங்கைக்கு முச்சக்கரவண்டிகளை இறக்குமதி செய்வதை நிறுத்த வேண்டும் என பெருந்தோட்டக் கைத்தொழில் அமைச்சர் நவீன் திசாநாயக தெரிவித்துள்ளார். இவ்விடயம் தொடர்பாக தீர்க்கமான தீர்மானம் ஒன்று எட்டப்பட வேண்டும் எனவும் நவீன் திசாநாயக கூறியுள்ளார். நாடாளுமன்றில் இன்று (புதன்கிழமை) நடைபெற்றுவரும் வரவு செலவு திட்டம் மீதான குழுநிலை விவாதத்தில் கலந்துகொண்டு கருத்து தெரிவிக்கும்போதே அவர் மேற்கண்டவாறு கூறினார். மேலும் தற்போது இலங்கையில் ஒரு மில்லியனுக்கும் அதிகமாக முச்சக்கரவண்டிகள் உள்ளதாகவும், அதனால் மில்லியன் […]





