“சர்வதேச சமூகத்தின் ஊடாகப் பாதிக்கப்பட்ட தமிழ் மக்களுக்கு நீதி கிடைக்கும் என்று எதிர்பார்த்தோம். எமது எதிர்பார்ப்பு நிறைவேறவில்லை. ஆனால், நாம் அந்த எதிர்பார்ப்பிலிருந்து தளர்ந்துபோய்விடவில்லை. ஐ.நா. தீர்மானத்தை மைத்திரி ரணில் தலைமையிலான அரசு முழுமையாக நடைமுறைப்படுத்தும் என்ற நம்பிக்கையுடன் செயற்படுகின்றோம்.” – இவ்வாறு எதிர்க்கட்சித் தலைவரும் தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் தலைவருமான இரா.சம்பந்தன், தன்னை சந்தித்த அமெரிக்கக் காங்கிரஸ் அலுவலர்களிடம் தெரிவித்துள்ளார். கொழும்பிலுள்ள எதிர்க்கட்சித் தலைவரின் அலுவலகத்தில் நேற்றுமுன்தினம் இந்தச் […]





