தொண்டமானைத் தள்ளி வைத்த ஐக்கிய தேசிய கட்சி
வரும் ஜனாதிபதித் தேர்தலில் ஐக்கிய தேசியக் கட்சிக்கு ஆதரவை வழங்க 30 அம்சக் கோரிக்கையை முன்வைத்தார் இலங்கைத் தொழிலாளர் காங்கிரசின் தலைவரும் எம்பியுமான ஆறுமுகம் தொண்டமான்.
ஆனால் அந்த கோரிக்கைகளை நிராகரித்த ஐக்கிய தேசியக் கட்சி தொண்டமானை உள்வாங்க மறுத்துவிட்டது.
கோரிக்கைகளை ஏற்றுக்கொள்வதா இல்லையா என்பதற்கு அப்பால் இ தொ காவை இணைப்பதன் மூலம் தமிழ் முற்போக்குக் கூட்டணியின் எதிர்ப்பை சம்பாதிக்கக் கூடாதென ஐ தே க மூத்த உறுப்பினர்கள் கருதியதாக தெரிகிறது.
இதேவேளை ஸ்ரீ லங்கா பொதுஜன பெரமுனவின் ஜனாதிபதி வேட்பாளர் கோட்டாபய ராஜபக்வுடன் ஆறுமுகம் தொண்டமான் தொலைபேசி ஊடாக பேச்சு நடத்தியுள்ளார்.
தற்போதைய தேர்தல் நிலைமைகள் மற்றும் அது தொடர்பான இலங்கைத் தொழிலாளர் காங்கிரசின் நிலைப்பாட்டை இதன்போது ஆறுமுகம் தெரிவித்ததாக அறியமுடிந்தது.
இந்த பின்னணியில் – தற்போதைய சூழ்நிலையில் யாருக்கும் ஆதரவளிக்காமல் நடுநிலை வகிப்பது குறித்தும் இலங்கைத் தொழிலாளர் ஆராய்ந்து வருகிறது.










