விரைவில் விக்கியுடன் பேசிச் சுமுகமான தீர்வு! – வடக்கு மாகாண சபை விவகாரத்தை ஊதிப் பெருப்பிக்கக்கூடாது என்கிறார் சம்பந்தன்

பக்கத்தை பகிர்ந்து கொள்ள!
“வடக்கு மாகாண சபை விவகாரம் ஊதிப் பெருப்பிக்கப்படக்கூடாது. இதற்கு விரைவில் முடிவு கட்டப்படவேண்டும்; சுமுகமான தீர்வு காணப்படவேண்டும். இந்த விடயம் தொடர்பில் வடக்கு மாகாண முதலமைச்சரை எப்போது சந்தித்துப் பேசுவது என்று இதுவரையில் தீர்மானிக்கப்படவில்லை. ஆனால், விரைவில் சந்திப்பு நடக்கும்.”
– இவ்வாறு தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் தலைவரும் எதிர்க்கட்சித் தலைவருமான இரா.சம்பந்தன் தெரிவித்தார்.
வடக்கு மாகாண சபை விவகாரம் தொடர்பில் முதலமைச்சர் சி.வி.விக்னேஸ்வரனிடம்  எப்போது நேரடிச் சந்திப்பு நடைபெறும் என்று கூட்டமைப்பின் தலைவர் இரா.சம்பந்தனிடம் வினவியபோதே அவர் மேற்கண்டவாறு கூறினார்.
அவர் மேலும் தெரிவிக்கையில்,
“வடக்கு மாகாண சபை விவகாரம் தொடர்பில் முதலமைச்சர் சி.வி.விக்னேஸ்வரன் மின்னஞ்சல் ஊடாக எனக்கு விடயங்களை அறியத் தந்துள்ளார். அந்த மின்னஞ்சலில் நேரடிச் சந்திப்புத் தொடர்பிலும் கருத்துத் தெரிவிக்கப்பட்டுள்ளது. விரைவில் இந்தச் சந்திப்பு நடைபெறும். ஆனால், எப்போது என்று இன்னமும் தீர்மானிக்கப்படவில்லை.
வடக்கு மாகாண சபை விவகாரத்தை ஊதிப் பெருப்பிக்கக்கூடாது. இதற்கு விரைவில் முடிவு கட்டப்படவேண்டும்; சுமுகமான தீர்வு காணப்படவேண்டும்” – என்றார்.

Leave a Comment

Your email address will not be published. Required fields are marked *