யாழ். பல்கலைக்கழக வளாகத்தில் சுடரேற்றி அஞ்சலி

பக்கத்தை பகிர்ந்து கொள்ள!

யாழ். பல்கலைக்கழக வளாகத்தில் சுடரேற்றி அஞ்சலி

இறுதி யுத்தத்தின் போது முள்ளிவாய்க்காலில் படுகொலை செய்யப்பட்ட உறவுகளை நினைவுகூர்ந்து, யாழ்.பல்கலைக்கழக வளாகத்தில் அஞ்சலி செலுத்தப்பட்டது.

யாழ்.பல்கலைக்கழக மாணவர் ஒன்றியத்தின் ஏற்பாட்டில் இன்று (வியாழக்கிழமை) முற்பகல், பல்கலைக்கழக துணைவேந்தர் ஆர்.விக்னேஸ்வரன் பொதுச் சுடரினை ஏற்றி வைத்து, அஞ்சலி நிகழ்வினை ஆரம்பித்து வைத்தார்.

அதனைத் தொடர்ந்து மாணவர்கள் அனைவரும் மலர் தூவியும் ஈகைச் சுடரேற்றியும் அஞ்சலி செலுத்தியதுடன், இரண்டு நிமிட மௌன அஞ்சலியும் செலுத்தினர்.

முள்ளிவாய்க்காலில் உயர்நீத்த உறவுகளுக்காய் வடக்கு கிழக்கின் பல பகுதிகளிலும் இன்றைய தினம் பரவலாக நினைவேந்தல் நிகழ்வுகள் முன்னெடுக்கப்பட்டு வருகின்றமை குறிப்பிடத்தக்கது.

Leave a Comment

Your email address will not be published. Required fields are marked *