முல்லைத்தீவில் அதிகாலை முதல் பலத்த மழை

பக்கத்தை பகிர்ந்து கொள்ள!

முல்லைத்தீவு மாவட்டத்தின் பல பகுதிகளில் இன்று அதிகாலை தொடக்கம் மழை பெய்து வருகின்றது.

இதனால், பல பகுதிகளிலும் வான்பரப்பை மழைமேகம் சூழ்ந்துள்ளதுடன், கரையோரங்களில் காற்றின் வேகம் அதிகரித்துள்ளதாக தெரியவருகின்றது.

இதனால் கரையோரப்பகுதி மீனவர்களின் பல வாடிகள் சேதங்களுக்கு உள்ளாகியுள்ளதுடன், மீனவர்களின் மீன்பிடித் தொழிலும் பாதிக்கப்பட்டுள்ளது.