கீதா குமாரசிங்கவின் பதவி ரத்து – நாடாளுமன்ற செயலாளர் அறிவிப்பு

பக்கத்தை பகிர்ந்து கொள்ள!

ஐக்கிய மக்கள் சுதந்திர முன்னணியின் காலி மாவட்ட நாடாளுமன்ற உறுப்பினர் கீதா குமாரசிங்கவின் பதவி வெற்றிடமாகியுள்ளதாக, சிறிலங்கா நாடாளுமன்ற செயலாளர் தம்மிக தசநாயக்க அறிவித்துள்ளார்.

மேல்முறையீட்டு நீதிமன்றம் அளித்த தீர்ப்புக்கு அமைய கீதா குமாரசிங்கவின் நாடாளுமன்ற உறுப்புரிமை ரத்துச் செய்யப்பட்டுள்ளதாக அவர், தேர்தல்கள் ஆணைக்குழுவின் தலைவருக்கு அறிவித்துள்ளார்.

இரட்டைக் குடியுரிமையைக் கொண்டுள்ளதால், கீதா குமாரசிங்க நாடாளுமன்ற உறுப்பினராகப் பதவி வகிக்க தகுதியற்றவர் என்று கடந்த மே 3ஆம் நாள் மேல்முறையீட்டு நீதிமன்றம் தீர்ப்பளித்திருந்தது.

அதேவேளை இந்த தீர்ப்புக்கு எதிராக உச்சநீதிமன்றத்தில் முறையீடு செய்யவுள்ளதாக, கீதா குமாரசிங்க கூறியிருந்தார் என்பது குறிப்பிடத்தக்கது.

Leave a Comment

Your email address will not be published. Required fields are marked *