மகிந்த சுதந்திரக் கட்சியை அழிக்கிறார் : துமிந்த குற்றசாட்டு

பக்கத்தை பகிர்ந்து கொள்ள!

முன்னாள் ஜனாதிபதி மகிந்த ராஜபக்ச ஸ்ரீலங்கா சுதந்திரக் கட்சியை அழிக்கும் காரியத்தில் ஈடுபட்டுள்ளதாக அமைச்சர் துமிந்த திஸாநாயக்க தெரிவித்துள்ளார்.

காலியில் நேற்று நடைபெற்ற கூட்டம் ஒன்றில் உரையாற்றும் போதே அவர் இதனை கூறியுள்ளார்.

தொடங்க வேண்டியது புதிய கட்சியை அல்ல, கட்சிக்குள் இருந்து கொண்டு 2020ஆம் அண்டு ஸ்ரீலங்கா சுதந்திரக்கட்சியின் அரசாங்கம் உருவாக்க வேண்டும்.

இதேவேளை, கட்சிக்குள் இருந்துக்கொண்டே கட்சியை பலப்படுத்த வேண்டும் என வடக்கு மாகாண ஆளுநர் ரெஜினோல்ட் குரே தெரிவித்துள்ளார். கண்டி யட்டிநுவர பிரதேசத்தில் நேற்று நடைபெற்ற கூட்டத்தில் அவர் இதனை கூறியுள்ளார்.

Leave a Comment

Your email address will not be published. Required fields are marked *