கேப்பாப்பிலவு மக்களிடம் காணிகளை ஒப்படைக்கவும்: இராணுவம் ஜனாதிபதியின் உத்தரவை மீறியுள்ளது “காணிகள் மீளக் கையளிப்பு தொடர்பில் ஜனாதிபதியினால் வழங்கப்பட்ட உறுதிமொழிகளை பாதுகாப்புப் படையினர் மீறியுள்ளனர். எனவே, கேப்பாப்பிலவு மக்களின் காணிகளை அவர்களிடம் ஒப்படைக்க அரசு உடன் நடவடிக்கை வேண்டும்.” என தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் பேச்சாளரும், நாடாளுமன்ற உறுப்பினருமாக எம்.ஏ.சுமந்திரன் கோரிக்கை விடுத்துள்ளார். வடக்கு மற்றும் கிழக்கிலுள்ள தமிழ் மக்களின் காணிப் பிரச்சினை தொடர்பான சபை ஒத்திவைப்பு வேளை பிரேரணையை […]
Other News
அதிமுக எம்.எல்.ஏக்கள் சுதந்திரமான சட்டசபை வாக்கெடுப்பு நடத்த ஸ்டாலின் வலியுறுத்தல்
அதிமுக எம்.எல்.ஏக்கள் சுதந்திரமான சட்டசபை வாக்கெடுப்பு நடத்த ஸ்டாலின் வலியுறுத்தல் அதிமுக எம்.எல்.ஏக்கள் பிணைக் கைதிகளாக உள்ளதால் சுதந்திரமான சட்டசபை வாக்கெடுப்பு நடத்த ஸ்டாலின் வலியுறுத்தியுள்ளார். அதிமுக எம்.எல்.ஏ.க்கள் பிணைக் கைதிகளாக வைக்கப்பட்டுள்ளதால் சட்டசபையில் சுதந்திரமான வாக்கெடுப்பு நடத்த ஆளுநர் நடவடிக்கை எடுக்க வேண்டும் என திமுக செயல் தலைவரும் எதிர்க்கட்சித் தலைவருமான மு.க. ஸ்டாலின் வலியுறுத்தியுள்ளார். இது தொடர்பாக ஸ்டாலின் இன்று வெளியிட்ட அறிக்கை: தமிழகத்தின் அரசியல் சூழல் […]
தமிழக பொறுப்பு ஆளுநர் வித்யாசாகர் ராவ் இன்று பிற்பகல் சென்னை வர உள்ளதாக தகவல்
தமிழக பொறுப்பு ஆளுநர் வித்யாசாகர் ராவ் இன்று பிற்பகல் சென்னை வர உள்ளதாக தகவல் மும்பையில் உள்ள தமிழக பொறுப்பு ஆளுநர் வித்யாசாகர் ராவ் இன்று பிற்பகல் சென்னை வர உள்ளதாக தகவல்கள் தெரிவிக்கின்றன. சென்னை வரும் ஆளுநர் வித்யாசகர் ராவை அதிமுகவின் இடைக்கால பொதுச்செயலர் சசிகலா தமது ஆதரவு எம்.எல்.ஏ.க்களுடன் சென்று சந்தித்து ஆட்சி அமைக்க உரிமை கோர உள்ளார். அதேபோல் முதல்வர் ஓ. பன்னீர்செல்வமும் தமது ராஜினாமா […]
பாலமேட்டில் 2 ஆண்டுகளுக்கு பின் ஜல்லிக்கட்டு தொடங்கியது – சீறிப் பாயும் காளைகளை பிடிக்க களத்தில் இறங்கிய இளைஞர்கள்
பாலமேட்டில் 2 ஆண்டுகளுக்கு பின் ஜல்லிக்கட்டு தொடங்கியது – சீறிப் பாயும் காளைகளை பிடிக்க களத்தில் இறங்கிய இளைஞர்கள் 2 ஆண்டுகளுக்கு பின்னர் பாலமேட்டில் ஜல்லிக்கட்டு தொடங்கியது. சீறிப் பாயும் காளைகளை பிடிக்க 1607 மாடுபிடி வீரர்கள் களத்தில் இறங்கியுள்ளனர். மதுரை: பாலமேட்டில் ஜல்லிக்கட்டு விழா 2 ஆண்டுகளுக்கு பின்னர், 850 காளைகளுடன் 1607 மாடுபிடி வீரர்களுடனும் இன்று தொடங்கியது. தமிழகத்தில் ஜல்லிக்கட்டுப் போட்டிகளை நடத்த உச்சநீதிமன்றம் தடைவிதித்திருந்தது. இந்நிலையில் […]
சசிகலா ஆதரவு எம்எல்ஏக்கள் ஒவ்வொருவராக தற்போது ஓபிஎஸ் பக்கம் சாய்ந்து வருவதால் திருப்பம்?
சசிகலா ஆதரவு எம்எல்ஏக்கள் ஒவ்வொருவராக தற்போது ஓபிஎஸ் பக்கம் சாய்ந்து வருவதால் திருப்பம்? அதிமுகவில் சசிகலாவுக்கு ஆதரவாக இருந்த எம்எல்ஏக்கள் ஒவ்வொருவராக தற்போது ஓபிஎஸ் பக்கம் சாய்ந்து வருவதால் திருப்பம் ஏற்பட்டுள்ளது. நேற்று இரவு வரை பன்னீர் செல்வத்தையும் சேர்த்து அவரது அணியில் 6 எம்.எல்.ஏ.க்கள் இருப்பது உறுதியாகியுள்ளது. தமிழகத்தில் கடந்தாண்டு மே மாதம் நடைபெற்ற 232 தொகுதிகளுக்கான தேர்தலில் 134 தொகுதிகளை அதிமுக கைப்பற்றி ஆட்சியை தக்கவைத்தது. இதில், […]
அதிமுக எம்எல்ஏக்கள் எதிர்தரப்புக்கு தாவிவிடக் கூடாது என்பதற்காக அனைவரும் ரகசிய இடத்தில் தங்கவைப்பு
அதிமுக எம்எல்ஏக்கள் எதிர்தரப்புக்கு தாவிவிடக் கூடாது என்பதற்காக அனைவரும் ரகசிய இடத்தில் தங்கவைப்பு எதிர்தரப்புக்கு தாவிவிடக் கூடாது என்பதற்காக அதிமுக எம்எல்ஏக்கள் அனைவரும் சொகுசு பேருந்துகளில் அழைத்துச் செல்லப்பட்டு ரகசிய இடத்தில் பாதுகாப்பாக தங்கவைக்கப்பட்டுள்ளதாக கட்சி வட்டாரங்கள் தெரிவித்தன. சட்டப்பேரவை கட்சித் தலைவராக சசிகலா தேர்வு செய்யப்பட்டதைத் தொடர்ந்து, அவர் முதல்வராக பொறுப்பேற்க தயாராகி வருகிறார். இதற்கிடையே, சசிகலாவுக்கு எதிராக ஓ.பன்னீர்செல்வம் அளித்த திடீர் பேட்டியால் கட்சியில் சலசலப்பு ஏற்பட்டுள் […]
அதிமுக கணக்கு வைத்துள்ள வங்கிகளுக்கு முதல்வர் ஓ.பன்னீர் செல்வம் கடிதம்
அதிமுக கணக்கு வைத்துள்ள வங்கிகளுக்கு முதல்வர் ஓ.பன்னீர் செல்வம் கடிதம் பொருளாளரின் அனுமதியின்றி பணப்பரிமாற்றம் செய்யக்கூடாது என அதிமுக கணக்கு வைத்துள்ள வங்கிகளுக்கு முதல்வர் ஓ.பன்னீர் செல்வம் நேற்று கடிதம் அனுப்பி யுள்ளார். முன்னாள் முதல்வர் ஜெயலலிதா நினைவிடத்தில் நேற்று முன்தினம் சசிகலாவுக்கு எதிராக ஓ.பன்னீர் செல்வம் பேட்டியளித்தார். இதை யடுத்து அதிமுகவின் பொருளா ளர் பொறுப்பில் இருந்து ஓ.பன்னீர் செல்வத்தை நீக்கி நேற்று முன்தினம் இரவே அதிமுக பொதுச்செயலாளர் […]
மகள் இவான்கா நவநாகரீக ஆடை தயாரிப்பை விற்பனை நிறுத்திய நிறுவனம் மீது டிரம்ப் விமர்சனம்
மகள் இவான்கா நவநாகரீக ஆடை தயாரிப்பை விற்பனை நிறுத்திய நிறுவனம் மீது டிரம்ப் விமர்சனம் தனது மகள் இவான்கா உரிமையாயாளராக உள்ள ஒரு நவநாகரீக ஆடை தயாரிப்பை தங்களின் விற்பனையிலிருந்து நிறுத்திய ஒரு ஆடை விற்பனையாளர் மீது தாக்குதல் தொடுத்து அமெரிக்க அதிபர் டொனால்டு டிரம்ப் வெளியிட்ட ட்விட்டர் பதிவுக்கு ஜனநாயக கட்சியினர் கண்டனம் தெரிவித்துள்ளனர். ‘மிகவும் ‘நியாயமற்ற முறையில் இவான்கா நடத்தப்பட்டுள்ளார்” என்று சில்லரை ஆடை விற்பனையாளரான நார்ட்ஸ்ட்ரம் […]
அமெரிக்க அதிபர் டொனால்ட் டிரம்ப் நியமித்த அட்டார்னி ஜெனரலாக உறுதி செய்தது அமெரிக்க செனட்
அமெரிக்க அதிபர் டொனால்ட் டிரம்ப் நியமித்த அட்டார்னி ஜெனரலாக உறுதி செய்தது அமெரிக்க செனட் அமெரிக்க அதிபர் டொனால்ட் டிரம்ப் நியமித்த அட்டார்னி ஜெனரலான (அரசு முதன்மை வழக்கறிஞர்) ஜெஃப் செஷன்ஸ் என்ற அலபாமா செனட் உறுப்பினர் நியமனத்தை அமெரிக்க சென்ட் அவை உறுதி செய்துள்ளது. இது தொடர்பாக நடந்த வாக்கெடுப்பில், ஜெஃப் செஷன்ஸுக்கு ஆதரவாக 52 வாக்குகளும், எதிராக 47 வாக்குகளும் கிடைத்துள்ளன. ஜெஃப் செஷன்ஸின் நியமனம் தொடர்பாக […]
காணாமல் போனோர் அலுவலகத்தை அமைப்பது தொடர்பான சட்டத்தில் திருத்தம்!
காணாமல் போனோர் அலுவலகத்தை அமைப்பது தொடர்பான சட்டத்தில் திருத்தம்! காணாமல் போனோர் தொடர்பான அலுவலகத்தை நிறுவுவதில் தொடர்ந்தும் இழுபறி நிலை காணப்படும் நிலையில், குறித்த அலுவலகத்தை அமைப்பது தொடர்பான சட்டத்தில் திருத்தத்தை மேற்கொள்வதற்கு தீர்மானிக்கப்பட்டுள்ளது. அரசாங்க தகவல் திணைக்களத்தில் இன்று (செவ்வாய்க்கிழமை) நடைபெற்ற அமைச்சரவை தீர்மானங்களை அறிவிக்கும் செய்தியாளர் சந்திப்பில், அமைச்சரவை இணைப் பேச்சாளரும் அமைச்சருமான கயந்த கருணாதிலக இதனைத் தெரிவித்தார். காணாமல் போனோர் தொடர்பான காரியாலயத்தை அமைப்பதற்கான சட்டத்தை […]





