Other News

Today rasi palan | இன்றைய ராசிபலன் 22.06.2019

இன்றைய ராசிபலன் 17.05.2019

மேஷம்: தன் பலம் பலவீனத்தை உணருவீர்கள். சகோதர வகையில் நன்மை உண்டு. கல்யாண முயற்சிகள் பலிதமாகும். விலை உயர்ந்தப் பொருட்கள் வாங்குவீர்கள். வியாபாரத்தில் பழைய வாடிக்கையாளர்கள் தேடி வருவார்கள். உத்யோகத்தில் அதிகாரிகள் வலிய வந்து உதவுவார்கள். திறமைகள் வெளிப்படும் நாள். ரிஷபம்: சாதுர்யமானப் பேச்சால் சாதிப்பீர்கள். பணப்புழக்கம் அதிகரிக்கும். உறவினர், நண்பர்கள் வீட்டு விசேஷங்களில் கலந்துக் கொள்வீர்கள். அரசால் அனுகூலம் உண்டு. வழக்கில் சாதகமான தீர்ப்பு வரும். வியாபாரத்தில் பற்று […]

Today rasi palan | இன்றைய ராசிபலன் 22.06.2019

இன்றைய ராசிபலன் 16.05.2019

மேஷம்: குடும்பத்தில் உங்கள் வார்த்தைக்கு மதிப்புக் கூடும். சுப நிகழ்ச்சிகளில் கலந்து கொள்வீர்கள். அதிகாரப் பதவியில் இருப்பவர்கள் அறிமுகமாவார்கள். வாகன வசதிப் பெருகும். வியாபாரத்தில் பழைய சரக்குகள் விற்கும். உத்யோகத்தில் உங்களின் புது முயற்சிகளை உயரதிகாரிகள் பாராட்டுவார்கள். அமோகமான நாள். ரிஷபம்: புதிய திட்டங்கள் நிறைவேறும். பிள்ளைகளின் தனித்திறமைகளை கண்டறிவீர்கள். ஆடம்பரச் செலவுகளைக் குறைத்து சேமிக்கத் தொடங்குவீர்கள். அக்கம்-பக்கம் வீட்டாரின் ஆதரவுப் பெருகும். வியாபாரத்தில் வேலையாட்களின் ஒத்துழைப்பு அதிகரிக்கும். உத்யோகத்தில் […]

பருத்தித்துறையில் இராணுவ சீருடைகளை ஒத்த ஆடைகள் மீட்பு: 11 பேர் கைது…

புடவைக் கடைகள் மற்றும் தையல் நிலையங்களில் முன்னெடுக்கப்பட்ட தேடுதல்களில் இராணுவ சீருடைகளுக்கு ஒத்த ஆடைகள் கைப்பற்றப்பட்டன. அதனால் 4 தமிழர்கள் உள்பட 11 பேர் பொலிஸாரால் கைது செய்யப்பட்டுள்ளனர். பருத்தித்துறை பொலிஸ் பிரிவுக்குட்பட்ட புடவைக் கடைகள் மற்றும் தையல் நிலையங்களில் நேற்று முன்தினம் செவ்வாய்க்கிழமை சோதனை நடவடிக்கை முன்னெடுக்கப்பட்டன. இதன்போது இராணுவம் மற்றும் சிறப்பு அதிரடிப்படையினரின் சீருடையை ஒத்த வடிவமைப்புடைய துணிகளான ஆடைகள் பொலிஸாரால் கைப்பற்றப்பட்டன. அதில் சிறுவர்களின் ஆடைகளும் […]

போரின் பின் 7 தடவைகள் தாக்க முயற்சித்த புலிகள் – இராணுவத் தளபதி!!

போரின் பின்னர் ஏழு தடவைகள் தமிழீழ புலிகள் இலங்கையில் பாரியளவில் அழிவுகளை ஏற்படுத்துவதற்கு முயற்சித்தனர் என முன்னாள் இராணுவத் தளபதி தயா ரட்நாயக்க தெரிவித்துள்ளார். கொழும்பு பத்திரிகையொன்றுக்கு வழங்கிய நேர்காணலில் அவர் இந்த விடயத்தை சுட்டிக்காட்டியுள்ளார். அவர் மேலும் கூறுகையில், ஊடகங்களோ, மக்களோ யாரும் அறிந்திராத ஓர் விடயத்தை நான் இப்பொழுது கூறுகின்றேன். தமிழீழ விடுதலைப் புலிகள் போரின் தோற்கடிக்கப்பட்டதன் பின்னர், ஏழு தடவைகள் நாட்டில் பாரிய அழிவுகளை ஏற்படுத்த […]

மின்விளக்குகளுடன் பறந்த பட்டத்தைப் பார்த்து வெருண்ட படையினர்

பொன்னாலையில் மின்னொளி பொருத்தப்பட்டு விண் பூட்டப்பட்டு ஏற்பட்ட பட்டத்தைக் கண்ட படையினர் அது ஆள் இல்லாத விமானம் எனக் கருதி சுட முயன்றதால் பெரும் பதற்றம் ஏற்பட்டது. நேற்றிரவு இச்சம்பவம் இடம்பெற்றது. அப்பகுதியைச் சேர்ந்த சிறுவர்கள் இருவர் நேற்று மாலை பற்றரி பொருத்திய டோர்ச் லைற் ஒன்றை பட்டத்தில் பொருத்தி விண் பூட்டி வானத்தில் ஏற்றியிருந்தனர். இரவானதும் அதைக் கீழே இறக்காமல் அப்படியே கட்டிவிட்டு வீடுகளுக்குச் சென்றுவிட்டனர். நேற்றிரவு 11.00 […]

போலி தகவல்கள் பரவுவதை தடுக்க விசேட தடுப்பு பிரிவு!

சமூகவலைத்தளங்களில் போலி தகவல்கள் பரப்புவதை தவிர்ப்பதற்காக பொலிஸ் தலைமையகத்தினால் விசேட பிரிவு ஒன்று அமைக்கப்பட்டுள்ளதாக பொலிஸ் பேச்சாளர் ருவன் குணசேகர தெரிவித்தார். சமூக வலைத்தளங்கள் ஊடாக போலியான தகவல்களை பரப்புவதன் காரணமாக சமூகங்களுக்கிடையில் வன்முறை சம்பவங்கள் இடம்பெறுகின்றன. சிலாபத்தில் இடம்பெற்ற சம்பவம் இதற்கு சிறந்த உதாரணமாகும். இவ்வாறான சமூகவலைத்தளங்களில் போலி தகவல்கள் பரப்புவதை தவிர்ப்பதற்காக பொலிஸ் தலைமையகத்தினால் விஷேட பிரிவு ஒன்று அமைக்கப்பட்டுள்ளது. இப்பிரிவானது சமூக வலைத்தளங்கள் ஊடாக போலியான […]

ஏறாவூரில் விசேட அதிரடிப்படை – பொலிசாரும் குவிப்பு

ஏறாவூர் காளிகோவில் வீதியில் (காலாச்சேனை) யில் ஆட்டிரச்சிக்கடை அலியின் மருமகனின் கார் தீக்கிறை முஸ்லீம் இருகுழுக்கள் பிரச்சனை காரணமாக இனவாதிகளினால் நாடத்தப்பட்டது. வீட்டுக்கு பின்புறத்தால் இரண்டு பேர் வந்து பெற்றோல் குண்டு வீசி இருக்கின்றனர் காரை நோக்கி வீட்டின் உரிமையாளர் எழுந்ததும் இனவாதிகள் தமிழ் மக்கள் குடியிருக்கும் பகுதியை நோக்கி தப்பி ஓடிஉள்ளனர். தற்போது சம்பவ இடத்திற்கு விசேட அதிரடிப்படையினரும் பொலிசாரும் குவிக்கப்பட்டுல்லார்கள் – ஏறாவூரில் எல்லைப்புறங்களில் இருக்கும் தமிழர்கள் […]

Today rasi palan | இன்றைய ராசிபலன் 22.06.2019

இன்றைய ராசிபலன் 15.05.2019

மேஷம்: பணப்புழக்கம் அதிகரிக்கும். உறவினர்கள், நண்பர்கள் ஆதரவாகப் பேசத் தொடங்குவார்கள். அரசால் அனுகூலம் உண்டு. வழக்கில் சாதகமான தீர்ப்பு வரும். வியாபாரத்தில் சில மாற்றம் செய்வீர்கள். உத்யோகத்தில் உயரதிகாரிகளின் ராஜதந்திரத்தை உடைத் தெறிவீர்கள். தொட்டது துலங்கும் நாள். ரிஷபம்: குடும்ப வருமானத்தை உயர்த்த புது முயற்சிகளை மேற்கொள்வீர்கள். உங்களைச் சுற்றியிருப்பவர்களின் சுயரூபம் தெரிய வரும். உறவினர்களின் அன்புத் தொல்லை குறையும். வியாபாரத்தில் புதிய வாடிக்கையாளர்கள் அறிமுகமாவார்கள். உத்யோகத்தில் சூட்சுமங்களை உணருவீர்கள். […]

விடுதலைப்புலிகள் மீதான தடையை நீடித்துள்ள இந்தியா!

தமிழீழ விடுதலைப்புலிகள் மீது ஏற்கனவே இந்தியாவில் தடை விதிக்கப்பட்டுள்ள நிலையில், அந்த தடையை மேலும் நீடிப்பதாக இந்திய உள்துறை அமைச்சகம் அறிவித்துள்ளது. இது தொடர்பில் மேலும் தெரியவருகையில்,தமிழீழ விடுதலைப்புலிகள் மீது விதிக்கப்பட்டுள்ள தடை மேலும் 5 ஆண்டுகளுக்கு நீடிக்கப்பட்டடுள்ளதாக இந்திய உள்துறை அமைச்சகம் அறிவித்துள்ளது. இந்த தடை நீடிப்பு தொடர்பில் மேலும் தெரியவருகையில், விடுதலைப்புலிகளின் ஆதரவு இயக்கங்கள் தனி ஈழம் அமைப்பதற்கான முயற்சிகளை தொடர்ச்சியாக முன்னெடுத்து வருகின்றன எனவும், தமிழகத்தில் […]

வற்றாப்பளை அம்மனுக்கு- உப்பு நீரில் விளக்கெரிக்கும் அற்புத நிகழ்வு!!

முல்லைத்தீவு வற்றாப்பளை கண்ணகி அம்மன் ஆலய வருடாந்த விசாக பொங்கல் உற்சவத்தை முன்னிட்டு உப்பு நீரில் விளக்கேற்ற தீர்த்தம் எடுக்கும் அற்புத நிகழ்வு நேற்று மாலை இடம்பெற்றது. காட்டாவிநாயகர் ஆலயத்தில் இருந்து தீர்த்தம் எடுக்கும் புனித நிகழ்வுக்கு தீர்த்தக்குடம் புறப்பட்டு மாலை 06:00 க்கு புனித தீர்த்தக்கரையில் தீர்த்தமெடுக்கப்பட்டது. நள்ளிரவு 12:00 மணிக்கு அம்மன் சந்நிதானத்தில் மடை பரப்பி உப்பு நீரில் விளக்கெரிக்கப்பட்டது.