Other News

வடபகுதி மக்களுக்கு முக்கிய அறிவித்தல்!

மின்சாரப் பராமரிப்பு, புனரமைப்பு மற்றும் கட்டுமானப் பணிகளின் பொருட்டு நாளை யாழ்ப்பாணம், மன்னார், வவுனியா ஆகிய மாவட்டங்களின் சில பகுதிகளில் 9 1/2 மணி நேர மின்சார தடை அமுலில் இருக்குமென தெரிவிக்கப்பட்டுள்ளது. இதன்படி, நாளை காலை 8.00 மணி முதல் மாலை 5.30 மணி வரை மின்சார தடை அமுலில் இருக்குமென இலங்கை மின்சார சபையின் வடமாகாணப் பிரதிப் பொதுமுகாமையாளர் தெரிவித்துள்ளார். யாழ்ப்பாணத்தின் பொன்னாலை, காரைநகர், காரைநகர் இராணுவ […]

நீதிபதி இளஞ்செழியனின் மற்றுமொரு அதிரடி தீர்ப்பு.!

யாழ். மணல்காட்டு பிரதேசத்தைச் சேர்ந்த சிறுமியொருவரை பாலியல் வல்லுறவு செய்த குற்றச்சாட்டில் குற்றவாளியாக இனங்காணப்பட்ட நான்கு பிள்ளைகளின் தந்தைக்கு 15 ஆண்டுகால கடூழிய சிறைத் தண்டனை விதித்து யாழ்.மேல் நீதிமன்ற நீதிபதி மாணிக்கவாசகர் இளஞ்செழியன் தீர்பளித்துள்ளார். கடந்த 2012 ஆம் ஆண்டு ஜீலை மாதம் மணல்காட்டு பிரதேசத்தை சேர்ந்த 16 வயதினை விட குறைந்த பெண் பிள்ளையை கற்பழித்திருந்தார் என்ற குற்றச்சாட்டில் நான்கு பிள்ளைகளின் தந்தையான விக்டர் அருந்தவராஜா (47) […]

இன்றைய ராசிபலன் 21.11.2017

மேஷம்: கடந்த இரண்டு நாட்களாக கணவன்- மனைவிக் குள் இருந்த மனக்கசப்பு நீங்கும். அரைக்குறையாக நின்ற வேலைகள் முடியும். புதியவர்கள் நண்பர்களாவார்கள். வியாபாரம் சூடுபிடிக்கும். உத்யோகத்தில் மேலதி காரி மதிப்பார். நிம்மதி கிட்டும் நாள். ரிஷபம்: சந்திராஷ்டமம் தொடங்குவதால் சில வேலை களை நீங்களே முன்னின்று முடிப்பது நல்லது. வீட்டிலும், வெளியிலும் மற்றவர்களை அனுசரித்துப் போங்கள். அடுத்தவர்கள் மனசு காயப்படும்படி பேசாதீர்கள். வியாபாரத்தில் வேலையாட்க ளால் விரயம் வரும். உத்யோகத்தில் […]

தோட்டவெளி அரசினர் தமிழ் கலவன்  பாடசாலையின் வருடாந்த  ஒளி விழா

மன் தோட்டவெளி அரசினர் தமிழ் கலவன்  பாடசாலையின் வருடாந்த  ஒளி விழா நிகழ்வானது பாடசாலை அதிபர் A.N.ஜோகராஜா தலைமையில் மதியம்  12.30 மணிக்கு ஆரம்பம் ஆனது. மேற்படி  நிகழ்வில் மன்னார் வலயக்கல்வி பணிமனையின் முன்னாள் தமிழ்  உதவி கல்வி பணிப்பாளர் P.P.M.V.லெம்பேட் அவர்களுக்கு பிரியாவிடை நிகழ்வும்  இடம் பெற்றது. இந்த நிகழ்வில் தோட்டவெளி பங்கு  தந்தை செபமாலை  மற்றும் ஜோசேவாஸ்  நகர்  பங்கு தந்தை யூட் குரூஸ் அவர்களும் மடு […]

மின்னல் தாக்கி சிறுவன் மரணம் மன்னாரில் சம்பவம்

மன்னாரில் மின்னல் தாக்கி சிறுவன் மரணம்-(படம்)   (20-11-2017) மன்னார் முருங்கன் செட்டடியார் மகன் கட்டையடம்பன் பகுதியில் மின்னல் தாக்கிய 11 வயது சிறுவன் ஒருவர் உயிரிழந்த சம்பவம் நேற்று(19) ஞாயிற்றுக்கிழமை மாலை இடம் பெற்றுள்ளது. -உயிரிழந்த சிறுவன் செட்டடியார் மகன் கட்டையடம்பன் கிராமத்தைச் சேர்ந்த நித்தியானந்தன் ரஸ்கின் வயது(11) என தெரிய வந்துள்ளது. -குறித்த சிறுவன் நேற்று ஞாயிற்றுக்கிழமை மாலை 2.30 மணியளவில் வயலில் வேளை செய்து கொண்டிருந்த […]

இன்றைய ராசிபலன் 20.11.2017

மேஷம்: சந்திராஷ்டமம் நீடிப்பதால் கொஞ்சம் அலைச்சலும், சிறுசிறு ஏமாற்றமும் வந்து நீங்கும். அக்கம்-பக்கம் இருப்பவர்களை அனுசரித்துப் போங்கள். உங்களை நீங்களே குறைத்து மதிப்பிடாதீர்கள். வியாபாரத்தில் பணியாட்களால் டென்ஷன் ஏற்படும். உத்யோகத்தில் விமர்சனங்களை கண்டு அஞ்ச வேண்டாம். அதிஷ்ட எண்: 5 அதிஷ்ட நிறங்கள்: மஞ்சள், கருநீலம். Loading… ரிஷபம்: குடும்பத்தில் ஆரோக்யமான விவாதங்கள் வந்துப் போகும். மனைவிவழியில் நல்ல செய்தி உண்டு. வெளிவட்டாரத்தில் புதியவர்கள் அறிமுகமாவார்கள். வாகனத்தை சீர் செய்வீர்கள். வியாபாரத்தில் […]

இன்றைய ராசிபலன் 19.11.2017

மேஷம்:சந்திராஷ்டமம் தொடர்வதால் வேலைச்சுமை இருந்துக் கொண்டேயிருப்பதாக ஆதங்கப்படுவீர்கள். குடும்பத்தில் ஒருவரை மாற்றி ஒருவர் குறைக் கூறிக் கொண்டிருக்க வேண்டாம். கோபத்தால் இழப்புகள் ஏற்படும். கணுக்கால் வலிக்கும். வியாபாரத்தில் யாரையும் நம்பி பொறுப்புகளை ஒப்படைக்க வேண்டாம். உத்யோகத்தில் யாரையும் பகைத்துக் கொள்ளாதீர்கள். அதிஷ்ட எண்: 6 அதிஷ்ட நிறங்கள்: சில்வர் கிரே, மயில் நீலம் ரிஷபம்:கடினமான காரியங்களையும் எளிதாக முடிப்பீர்கள். மூத்த சகோதர வகையில் உதவி கிடைக்கும். திருமணப் பேச்சு வார்த்தை […]

மன்னாரில் இரு இடங்களில் சிலைகள் உடைக்கப்பட்டுள்ளதோடு, திருடப்பட்டுள்ளது

மன்னாரில் பல்வேறு இடங்களில் பிள்ளையார் சிலைகள் திருடப்பட்டுள்ளதோடு, பிள்ளையார் சிலைகள் மற்றும் தேவாலயத்தின் உண்டியல் என்பன உடைக்கப்பட்ட சம்பவம் இன்று சனிக்கிழமை (18) அதிகாலை இடம் பெற்றுள்ளதாக தெரிய வருகின்றது. மன்னார்-யாழ்ப்பாணம் பிரதான வீதி,தள்ளாடி விமான ஓடு பாதைக்கு முன்பாக வீதியோரத்தில் அமைக்கப்பட்டிருந்த பிள்ளையார் சிலை நான்காவது தடவையாக இன்று (18) சனிக்கிழமை அதிகாலை இனம் தெரியாத நபர்களினால் உடைத்து சேதப்படுத்தப்பட்டுள்ளது. குறித்த பிள்ளையார் சிலை மூன்றாவது தடவையாக கடந்த […]

வித்­தியா வழக்­கு விவகாரம் இரா­ஜாங்க அமைச்­ச­ரின் மீது நட­வ­டிக்கை எடுக்­கா­தது ஏன்?

சிறு­மியை மிரு­கத்­த­ன­மா­கக் கொலை செய்த சுவிஸ் குமாரை விடு­வித்த குற்­றச்சாட் டில் பொலிஸ் அதி­கா­ரியை சிறை­யில் அடைத்­துள்­ளீர்­கள். அந்­தப் பொலிஸ் அதி­கா­ரிக்கு, சுவிஸ்­கு­மாரை விடு­விக்­கச் சொல்லி உத்­த­ர­விட்ட இரா­ஜாங்க அமைச்­சர் சபை­யில் இப்­போ­தும் இருக்­கின்­றார். இவ்­வாறு மகிந்த அணி­யின் நாடா­ளு­மன்ற உறுப்­பி­னர் விம­ல­வீர திசா­நா­யக்க தெரி­வித்­தார். நாடா­ளு­மன்­றில் நேற்று இடம்­பெற்ற விவா­தத்­தில் உரை­யாற்­று­கை­யி­லேயே அவர் மேற்­கண்­ட­வாறு கூறி­னார். அவர் மேலும் தெரி­வித்­த­தா­வது: இந்த நாட்­டில் நீதித்­து­றைக்கு நிதி ஒதுக்­கப்­ப­டு­கின்­றது. ஆனால் […]

சிறுமி கடத்­தப்­பட்டு கூட்டு வன்­பு­ணர்வு- வவு­னி­யா­வில் கொடூ­ரம்

முச்­சக்­க­ர­வண்­டி­யில் வந்­த­வர்­க­ளால் கடத்­திச் செல்­லப்­பட்டு வன்­பு­ணர்­வுக்கு உட்­ப­டுத்­தப்­பட்ட 16 வய­துச் சிறுமி ஒரு­வர் தவ­றான முடி­வெ­டுத்­துத் தற்­கொ­லைக்கு முயன்ற நிலை­யில் மருத்­து­வ­ம­னை­யில் சேர்க்­கப் பட்­டார். இது தொடர்­பில் நால்­வர் கைது செய்­யப்­பட்டு பொலி­ஸா­ரால் விசா­ரிக்­கப்­பட்டு வரு­கின்­ற­னர். இந்­தக் கூட்டு வன்­பு­ணர்வு வவு­னியா மாவட்­டத்­தில் நேற்­று­முன்­தி­னம் இடம்­பெற்­றது. வன்­பு­ணர்­வின் பின்­னர் சிறு­மியை குகன் நக­ரில் உள்ள ஆள்­க­ளற்ற வீடு ஒன்­றில் குற்­ற­வா­ளி­கள் அநா­த­ர­வாக விட்­டுச் சென்­ற­னர். ஒரு­வாறு நேற்று வீடு வந்து […]