ஐக்கிய தேசிய கட்சி ஜனநாயக ரீதியில் செயற்படும் ஒரு கட்சி ஆகும். அந்த வகையில் குடும்ப ஆட்சியை கொண்டு நடத்தாத ஐக்கிய தேசிய கட்சி எதிர்வரும் ஜனாதிபதி தேர்தலில் மக்கள் விரும்ப கூடிய அல்லது மக்கள் ஆதரிக்க கூடிய ஒரு வேட்பாளரை நிறுத்தும். அதற்கான சுப நேரம் ஓரிரு தினங்களில் வரும். அதன்போது வேட்பாளரை நாம் நியமிப்போம் என ஐக்கிய தேசிய கட்சியின் தவிசாளரும், நெடுஞ்சாலைகள், வீதி அபிவிருத்தி மற்றும் […]
Other News
நிறைவேற்று ஜனாதிபதி முறைமையை இல்லாதொழிக்க பின்வழியில் முயற்சிக்க கூடாது
நிறைவேற்று ஜனாதிபதி முறைமையை இல்லாமலாக்குவதாக இருந்தால் அதுதொடர்பில் அனைத்து தரப்பினருடன் கலந்துரையாடியே மேற்கொள்ளவேண்டும். மாறாக பின்வழியால் அதனை மேற்கொள்ள இடமளிக்கமாட்டோம் என ஸ்ரீலங்கா முஸ்லிம் காங்கிரஸின் தலைவரும் அமைச்சருமான ரவூப் ஹக்கீம் தெரிவித்தார். நிறைவேற்று ஜனாதிபதி முறைமையை இல்லாமலாக்குவது தொடர்பாக ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன மற்றும் பிரதமர் ரணில் விக்ரமசிங்க ஆகியோருக்கிடையில் இடம்பெற்றுள்ள பேச்சுவார்த்தை தொடர்பாக கருத்து தெரிவிக்கையிலேயே இவ்வாறு குறிப்பிட்டார்.
Today rasi palan | இன்றைய ராசிபலன் 29.08.2019
Today rasi palan | இன்றைய ராசிபலன் 29.08.2019 மேஷம்: எதிர்ப்புகள் அடங்கும். பால்ய நண்பர்கள் உதவுவார்கள். புது வேலைக் கிடைக்கும். பழைய கடனைத் தீர்க்க முயற்சி செய்வீர்கள். தாய்வழி உறவினர்களுடன் கருத்து வேறுபாடுகள் வந்து நீங்கும். வியாபாரத்தில் பங்குதாரர்களின் பிரச்னை தீரும். உத்யோகத்தில் மறுக்கப்பட்ட உரிமைகள் கிடைக்கும். நன்மை கிட்டும் நாள். ரிஷபம்: குடும்பத்தினருடன் கலந்தாலோசித்து பழைய பிரச்னைகளுக்கு முக்கிய தீர்வு காண்பீர்கள். பிரபலங்களின் நட்பு கிடைக்கும். வாகனத்தை […]
ஐ.தே.க. பிளவுப்படுத்த வேண்டிய தேவை சு.க.வுக்கில்லை
ஐக்கிய தேசியக் கட்சிக்குள் பிளவினை ஏற்படுத்த வேண்டிய தேவை ஸ்ரீலங்கா சுதந்திரக் கட்சிக்கு இல்லை எனத் தெரிவித்த அக் கட்சியின் ஊடகப் பேச்சாளர் வீரகுமார திஸாநாயக்க, ஐ.தே.க உறுப்பினர்களே தமக்குள் பிளவுகளை ஏற்படுத்தி கொண்டிருக்கிறார்கள் என்றும் அவர் கூறினார். ஐக்கிய தேசிய கட்சியின் பாராளுமன்ற உறுப்பினர் ஹிருணிகா பிரேமசந்திர நேற்று அலரி மாளிகையில் நடத்திய செய்தியாளர் சந்திப்பின் போது ‘ ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன ஜனாதிபதி வேட்பாளர் விடயத்தை பயன்படுத்தி […]
காணி அபகரிப்புக்கு எதிராக கவனஈர்ப்பு போராட்டம்
மட்டக்களப்பு மாவட்டத்தில் இடம்பெற்றுவரும் காணி அபகரிப்புக்கு எதிராக கவனஈர்ப்பு போராட்டம் ஒன்று இன்று(28.08.2019) மட்டக்களப்பில் நடைபெற்றது. மேற்படி போராட்டமானது, தேசிய மீனவ ஒத்துழைப்பு இயக்கத்தின் மட்டக்களப்பு மாவட்ட கிளையின் ஏற்பாட்டில் மட்டக்களப்பு காந்திபூங்கா முன்பாக நடைபெற்றது. இப்போராட்டத்தில் செங்கலடி-பதுளை வீதியில் உள்ள மக்கள் கலந்துகொண்டு தமது எதிர்ப்பினை வெளியிட்டனர். மேலும், தமது பாரம்பரிய காணிகளை அபகரிக்கும் முயற்சிகள் தொடர்ச்சியான முன்னெடுக்கப்பட்டுவருவதாக, போராட்டத்தில் ஈடுப்பட்ட மக்கள் இதன்போது குற்றஞ்சாட்டினர். குறிப்பாக அபிவிருத்தி […]
இன்றைய ராசிபலன் | Today rasipalan 28.08.2019
இன்றைய ராசிபலன் | Today rasipalan 28.08.2019 மேஷம்: அரசு அதிகாரிகளின் உதவியால் சில காரியங்களை முடிப்பீர்கள். மகளுக்கு நல்ல வரன் அமையும். எதிர்பார்த்த வேலைகள் தடையின்றி முடியும். தாயாருக்கு மருத்துவச் செலவுகள் வந்துப் போகும். வியாபாரத்தில் திடீர் லாபம் உண்டு. உத்யோகத்தில் சக ஊழியர்கள் ஆதரிப்பார்கள். ரிஷபம்: உடன்பிறந்தவர்கள் உங்கள் வேலைகளை பகிர்ந்துக் கொள்வார்கள். துணிச்சலாக சில முக்கிய முடிவுகள் எடுப்பீர்கள். விசேஷங்களை முன்னின்று நடத்துவீர்கள். வியாபாரத்தில் அனுபவமிக்க […]
பிக்பாஸ் வீட்டிற்குள் நுழைந்த சிறப்பு விருந்தினர்!
பிக்பாஸ் வீட்டிற்குள் நுழைந்த சிறப்பு விருந்தினர் பிக்பாஸ் நிகழ்ச்சி குழுவினர் விளையாட்டில் இப்போது தான் கவனம் செலுத்த ஆரம்பித்துள்ளார்கள் போல் தெரிகிறது. சீரியஸான டாஸ்க் இதுவரை கொடுத்தது போல் தெரியவில்லை, இன்று காலை ஒரு புதிய புரொமோ வந்துள்ளது. அதில் பிக்பாஸ் குழுவினர் 2 வீடுகளாக பிரிக்கப்படுகின்றனர். அவர்களுக்கு நமது பாரம்பரியத்தை தெரிந்துகொள்ளும் வகையில் சில டாஸ்க் கொடுக்கப்படுகிறது. அதை கற்றுக்கொண்டு எப்படி நமது போட்டியாளர்கள் செய்கிறார்கள் என்பதை இன்றைய […]
ஓமந்தையில் முன்னெடுக்கப்படவுள்ள போராட்டத்திற்கு அனைவரும் ஆதரவு வழங்குங்கள்
போராட்டத்திற்கு அனைவரும் ஆதரவு வழங்குங்கள் வடக்கு-கிழக்கில் உள்ள 8 மாவட்டங்களையும் உள்ளடக்கி குறித்த ஓமந்தையில் எதிர்வரும் 30 ஆம் திகதி முன்னெடுக்கப்படவுள்ள காணாமல் ஆக்கப்பட்டவர்களை கண்டு பிடித்துத் தரக்கோரி முன்னெடுக்கப் படவுள்ள போராட்டத்திற்கு அனைத்து தரப்பினரையும் ஆதரவு வழங்குமாறு மன்னார் மாவட்ட காணாமல் ஆக்கப்பட்ட உறவுகளைத் தேடும் சங்கத்தின் தலைவி மனுவல் உதையச்சந்திரா தெரிவித்தார். மன்னாரில் இன்று செவ்வாய்க்கிழமை (27) மதியம் இடம் பெற்ற ஊடக சந்திப்பின் போதே அவர் வேண்டு கோள் விடுத்தார். அவர் மேலும் கருத்து தெரிவிக்கையில், எதிர்வரும் 30 ஆம் திகதி வெள்ளிக்கிழமை வடக்கு […]
பிரதமர் மாலைத்தீவு பயணம் !
பிரதமர் மாலைத்தீவு பயணம் ! பிரதமர் ரணில் விக்ரமசிங்க எதிர்வரும் செப்டெம்பர் மாதம் 2 ஆம் திகதி மாலைத்தீவுக்கு உத்தியோகபூர்வ விஜயம் ஒன்றை மேற்கொள்ளவுள்ளார். மாலைத்தீவு ஜனாதிபதியின் அழைப்பினை ஏற்றே பிரதமர் இந்த விஜயத்தை மேற்கொள்ளவுள்ளார்.
பேஸ்புக் காதல்- 18 வயது இளைஞன் பலி!
பேஸ்புக் காதல்- 18 வயது இளைஞன் பலி! திருகோணமலை-வான்எல பொலிஸ் பிரிவுக்குட்பட்ட பகுதியில் பேஸ்புக் மூலம் காதலித்து வந்த இளைஞரொருவர் தமது பேஸ்புக் காதலி அனுப்பிய குறுந்தகவல் காரணமாக தூக்கில் தொங்கிய நிலையில் சடலமாக மீட்கப்பட்டுள்ளதாக பொலிஸார் தெரிவித்தனர். குறித்த சம்பவம் நேற்றிரவு (26) இடம்பெற்றுள்ளதாக வான் எல பொலிஸார் தெரிவித்தனர். இவ்வாறு தூக்கில் தொங்கி உயிரிழந்த இளைஞன் அதே பகுதியைச் சேர்ந்த 18 வயதான என். டபிள்யூ. அமில […]





