Friday , May 17 2024
Home / செய்திகள் / உலக செய்திகள் / கொரோனாவால் பிரித்தானியாவில் தனிமைப்படுத்தப்பட்ட தமிழ் குடும்பம்!

கொரோனாவால் பிரித்தானியாவில் தனிமைப்படுத்தப்பட்ட தமிழ் குடும்பம்!

கொரோனாவால் பிரித்தானியாவில் தனிமைப்படுத்தப்பட்ட தமிழ் குடும்பம்!

பிரித்தானியாவின் சவுத்ஹாலில் தமிழ் குடும்பமொன்று கொரோனா தொற்றினால் பாதிக்கப்பட்டுள்ள நிலையில் அவர்களது வீடு சீல் வைக்கப்பட்டுள்ளதாக தகவல்கள் வெளியாகியுள்ளது.

ராக்ஸி ஓட்டுனர் ஒருவரின் குடும்பமே கொரோனா தொற்றிற்கு இலக்காகியுள்ளதாகவும் கூறப்படுகின்றது.

ராக்ஸி ஓட்டுனர் கொரோன வைரஸ் தொற்றி்கு இலக்காகி, குடும்பமும் பாதிக்கப்பட்டுள்ளது.

அந்த குடும்பத்தின் பிள்ளையொன்று பாடசாலையில் மேற்கொள்ளப்பட்ட பரிசோதனையில் தொற்றிற்கு இலக்காகியிருப்பது தெரியவந்தது.

இதையடுத்து, அந்த குடும்பத்தின் உறுப்பினர்களிடம் நடத்தப்பட்ட சோதனையில், அவர்களும் தொற்றிற்கு இலக்காகியிருந்தமை கண்டுபிடிக்கட்டதாகவும் தகவல்கள் தெரிவிக்கின்றன.

இந்நிலையில் தற்போது அவர்களின் வீடு சீல் வைக்கப்பட்டு, குறித்த குடும்பம் சிகிச்சைக்குட்படுத்தப்பட்டு வருகின்றதாகவும் அறியமுடிகின்றது.

இதேவேளை லண்டன் நகரத்தில் மட்டும் நேற்றையதினம் 13 கொரோனா தொற்றாளர்கள் அடையாளம் காணப்பட்டதாக தெரிவிக்கப்படுகின்றமை குறிப்பிடத்தக்கது.

மேலும் செய்திகள் பார்வையிட லிங்கை கிளிக் செய்யுங்கள்

பயனுள்ள இணைப்புகள் இங்கே

Tamil News
Tamil Technology News
Tamilnadu News
Tamil Serial
World Tamil News

Check Also

பாஜகவில் இணைந்தார் விஜயதரணி l Tamilaruvitv

பாஜகவில் இணைந்தார் விஜயதரணி l Tamilaruvitv