காலம் கனியும் போது கட்டாயம் திருமணம் நடக்கும் ; ராகுல் காந்தி

பக்கத்தை பகிர்ந்து கொள்ள!

தனக்கு எப்போது திருமணம் நடக்க வேண்டும் என்று விதி இருக்கிறதோ அப்போது நடக்கும் என காங்கிரஸ் துணைத் தலைவர் ராகுல் காந்தி தெரிவித்துள்ளார்.
காங்கிரஸ் துணைத்தலைவர் ராகுல் காந்திக்கு தற்போது 47 வயது ஆகும் நிலையில், அவர் இன்னும் திருமணம் செய்து கொள்ளவில்லை.

இந்நிலையில், டெல்லியில் நேற்று ஒரு நிகழ்ச்சியில் பங்கேற்ற ராகுல் காந்தியிடம் அவரது திருமணம் பற்றி கேட்கப்பட்டது.

அதற்கு பதிலளித்த அவர், தான் விதியின் மீது நம்பிக்கை உள்ளவன் என்றும், எப்போது திருமணம் நடக்க வேண்டும் என்று விதி இருக்கிறதோ அப்போது நடக்கும் எனவும் பதிலளித்தார். மேலும், தமது வாழ்க்கையில் விளையாட்டுக்கு முக்கிய இடம் உண்டு என்றும் ராகுல் தெரிவித்தார்.

Leave a Comment

Your email address will not be published. Required fields are marked *