38 பில்லியனா? ஷாக் கொடுத்த மின் கட்டணம்!

பக்கத்தை பகிர்ந்து கொள்ள!

வழக்கமாக வீடுகளுக்கு மின்சார கட்டணம் எவ்வளவு வரும்? அதிகப்பட்சமாக சில ஆயிரங்களுக்குள்தான் .

ஆனால், ஜார்க்கண்ட் மாநிலம் ஜாம்ஷெட்பூரைச் சேர்ந்த குஹாவுக்கு எகிறி இருக்கிறது இக்கட்டணம்.

இதையடுத்து வீட்டில் மின்சாரத்தை திடீரென்று துண்டித்துவிட்டார்கள். ஏன், என்னாச்சு என்று மின்வாரியத்தில் விசாரிக்க சென்ற குஹாவுக்கு ஷாக். ஏனென்றால் கட்டணம் ரூ.38 பில்லியனை கட்டாததால்தான் மின்சாரத்தைத் துண்டித்ததாகக் கூறியுள்ளனர்.

இதுபற்றி குஹா கூறும்போது, ‘மூன்று அறைகள் கொண்ட எனது வீட்டில் 3 ஃபேன்கள், 3 டியூப்லைட் மட்டும்தான் இருக்கிறது. இது விடிய விடிய ஓடினாலும் இவ்வளவு பில் வருமா என்ன? இது வியப்பாக இருக்கிறது. இதை ஏற்க முடியாது’ என்றார்.

இதையடுத்து மின் வாரியத்தில் அவர் புகார் தெரிவித்திருக்கிறார்.

Leave a Comment

Your email address will not be published. Required fields are marked *