ஆப்கானிஸ்தானில் பனிச்சரிவில் சிக்கி இதுவரை 100-க்கும் மேற்பட்டோர் பலி ஆப்கானிஸ்தானில் பனிச்சரிவில் சிக்கி இதுவரை 100-க்கும் மேற்பட்டோர் பலியாகி உள்ளனர். இன்னும் ஏராளமானோர் பனிக்கட்டிக்குள் சிக்கி தவிக்கின்றனர். ஆப்கானிஸ்தானில் கடந்த 3 நாட்களாக கடும் பனிப்பொழிவு ஏற்பட்டுள்ளது. இதில் மிகவும் உள்ளடங்கிய பகுதியான நூரிஸ்தான் மாகாணம் கடுமையாக பாதிக்கப்பட்டுள்ளது. இங்கு தொடர்ந்து பனிச் சரிவுகள் ஏற்படுகின்றன. அதன் இடிபாடுகள் வீடுகளின் மீது சரிகின்றன. இதனால் வீடுகள் பனிக்கட்டிக்குள் மூழ்கி கிடக்கின்றன. […]
உலக செய்திகள்
சீனாவில் உள்ள மசாஜ் பார்லரில் ஏற்பட்ட தீ விபத்தில் 18 பேர் உடல் கருகி பலி
சீனாவில் உள்ள மசாஜ் பார்லரில் ஏற்பட்ட தீ விபத்தில் 18 பேர் உடல் கருகி பலி சீனாவில் ஷிஜியாங் மாகாணம் தியான்டை பகுதியில் உள்ள ஷுஸிங்டாக் என்ற இடத்தில் ஒரு மசாஜ் பார்லரில் ஏற்பட்ட தீ விபத்தில் தீ விபத்தில் 18 பேர் உடல் கருகி பலியாகினர். சீனாவில் ஷிஜியாங் மாகாணம் தியான்டை பகுதியில் உள்ள ஷுஸிங்டாக் என்ற இடத்தில் ஒரு மசாஜ் பார்லர் உள்ளது. நேற்று மாலை […]
அமெரிக்க அதிபர் பதவியில் இருந்து விலகிய பராக் ஒபாமா புது வீட்டில் !
அமெரிக்க அதிபர் பதவியில் இருந்து விலகிய பராக் ஒபாமா புது வீட்டில் ! அமெரிக்க அதிபர் பதவியில் இருந்து விலகிய பராக் ஒபாமா தற்போது புது வீட்டில் வாடகைக்கு குடியேறி உள்ளார். அமெரிக்க அதிபர் பதவியில் இருந்து கடந்த ஜனவரி மாதம் 20-ந்தேதி பராக் ஒபாமா விலகினார். அவருக்கு பிறகு டொனால்டு டிரம்ப் அதிபராக பதவி ஏற்றுள்ளார். அதை தொடர்ந்து கடந்த 8 ஆண்டுகளாக வெள்ளை மாளிகையில் தங்கியிருந்த ஒபாமா […]
ஏமனில் பழங்குடியினருக்கும் அல்கொய்தா இயக்கத்தினருக்கும் இடையே தாக்குதலில் அல்கொய்தா இயக்கத்தினர் 13 பேர் பலி
ஏமனில் பழங்குடியினருக்கும் அல்கொய்தா இயக்கத்தினருக்கும் இடையே தாக்குதலில் அல்கொய்தா இயக்கத்தினர் 13 பேர் பலி ஏமனில் பழங்குடியினருக்கும் அல்கொய்தா இயக்கத்தினருக்கும் இடையே நடைபெற்ற தாக்குதலில் அல்கொய்தா இயக்கத்தினர் 13 பேர் பலியாகினர். ஏமனில் அரசு படைகளுக்கும், ஷியா பிரிவு கிளர்ச்சியாளர்களுக்கும் இடையே கடந்த 2 ஆண்டுகளாக கடுமையான மோதல்கள் நடந்து வருகின்றன. இந்த சண்டையை பயன்படுத்தி, அங்கு அல்கொய்தா இயக்கத்தினர் கால்பதித்து வருகின்றனர். அவர்கள், ஆங்காங்கே ஆதிக்கம் செலுத்தியும் வருகின்றனர். […]
அமெரிக்காவிற்குள் நுழையும் மக்களை மிக கவனமாக சோதிக்க டிரம்ப் உத்தரவு
அமெரிக்காவிற்குள் நுழையும் மக்களை மிக கவனமாக சோதிக்க டிரம்ப் உத்தரவு ஏழு பெரும்பான்மை முஸ்லிம் நாடுகளில் உள்ள மக்கள், அமெரிக்காவிற்குள் நுழைய விதிக்கப்பட்ட தடையின் இடைநீக்கம் தொடர்வதால், அமெரிக்காவிற்குள் நுழையும் மக்களை மிக கவனமாக சோதிக்கும்படி எல்லை அதிகாரிகளுக்கு உத்தரவிட்டுள்ளதாக அதிபர் டிரம்ப் தெரிவித்துள்ளார். தடையை இடைநீக்கம் செய்த நீதிமன்றங்கள் அமெரிக்காவின் எல்லைகளை பத்திரப்படுத்துவதை கடினமாக்குகிறது என்றும், இந்த தீர்ப்பை வழங்கிய நீதிபதி நாட்டை ஆபத்தில் தள்ளுவதாகவும் அவர் குற்றம் […]
ஆப்கானிஸ்தானில் 8 போலீசாரை உடன் பணி புரியும் போலீசாரே சுட்டுக் கொலை
ஆப்கானிஸ்தானில் 8 போலீசாரை உடன் பணி புரியும் போலீசாரே சுட்டுக் கொலை ஆப்கானிஸ்தானில் ஒரே குடும்பத்தை சேர்ந்த 8 போலீசாரை உடன் பணி புரியும் போலீசாரே சுட்டுக் கொன்றனர். ஆப்கானிஸ்தானில் பர்யாப் மாகாணம் அல்மார் மாவட்டத்தில் சோதனை சாவடி உள்ளது. நேற்று அதன் அருகே 8 பேர் சுட்டுக் கொல்லப்பட்டு பிணமாக கிடந்தனர். இதனால் அங்கு பதட்டம் ஏற்பட்டது. பிணத்தைக் கைப்பற்றி, போலீசார் விசாரணை நடத்தினர். அதில் கொல்லப்பட்ட அனைவரும் […]
ரஷியாவுக்கு கடும் கண்டனம் – அமெரிக்க தூதர் நிக்கி ஹாலி பேச்சு
ரஷியாவுக்கு கடும் கண்டனம் – அமெரிக்க தூதர் நிக்கி ஹாலி பேச்சு ஐ.நா. பாதுகாப்பு கவுன்சிலில் அமெரிக்க தூதர் நிக்கி ஹாலி கன்னிப்பேச்சு பேசினார். அவர் உக்ரைன் விவகாரத்தில் ரஷியாவுக்கு கடும் கண்டனம் தெரிவித்தார். உக்ரைன் நாட்டில் கிரிமியா தீபகற்ப பகுதி, பொது வாக்கெடுப்பு நடத்தி ரஷியாவுடன் இணைந்து விட்டது. இதே போன்று உக்ரைனின் கிழக்கு பகுதியில் வசிக்கிற ரஷிய ஆதரவு கிளர்ச்சியாளர்கள், தனி நாடு கோரிக்கையை எழுப்பி கிளர்ச்சியில் […]
அமெரிக்காவிற்குள் நுழைய தடை விதிக்கப்பட்டுள்ளதை தொடர்ந்து ஒரு லட்சத்திற்கும் அதிகமான விசாக்கள் ரத்து
அமெரிக்காவிற்குள் நுழைய தடை விதிக்கப்பட்டுள்ளதை தொடர்ந்து ஒரு லட்சத்திற்கும் அதிகமான விசாக்கள் ரத்து ஏழு நாடுகளை சேர்ந்தவர்கள் அமெரிக்காவிற்குள் நுழைய தடை விதித்து அமெரிக்க அதிபர் டொனால்ட் டிரம்ப் புதிய உத்தரவில் கையெழுத்திட்டார். இதனை தெடர்ந்து ஒரு லட்சத்திற்கும் அதிகமான விசாக்கள் ரத்து செய்யப்பட்டுள்ளது. ஏழு இஸ்லாம் நாடுகளை சேர்ந்தவர்கள் அமெரிக்காவிற்குள் நுழைய தடை விதிக்கப்பட்டுள்ளதை தொடர்ந்து ஒரு லட்சத்திற்கும் அதிகமான விசாக்கள் ரத்து செய்யப்பட்டுள்ளதாக அரசு வழக்கறிஞர் தெரிவித்துள்ளார். […]
அதிபர் டொனால்ட் டிரம்பின் நிர்வாக ஆணைக்கு நாடு முழுவதும் தற்காலிக தடை
அதிபர் டொனால்ட் டிரம்பின் நிர்வாக ஆணைக்கு நாடு முழுவதும் தற்காலிக தடை பெரும்பாலும் முஸ்லீம்கள் வாழும் 7 நாடுகளிலிருந்து அமெரிக்காவுக்கு பயணம் மேற்கொள்வதை தடை செய்கின்ற அதிபர் டொனால்ட் டிரம்பின் நிர்வாக ஆணைக்கு, சியாட்டல் நீதிபதி ஒருவர் அமெரிக்கா முழுவதும் தற்காலிக தடை விதித்திருக்கிறார், டிரம்பின் நிர்வாக ஆணைக்கு சவால் விடுப்பதற்கு அமெரிக்க மாகாணங்களுக்கு சட்ட முகாந்திரம் இல்லை என்று அரசு வழங்கறிஞர்கள் வாதிட்ட நிலையிலும், பெடரல் நீதிபதி ஜேம்ஸ் […]
அமெரிக்கா புதிய தடை நடவடிக்கை – இரான் பதிலடி உறுதி
அமெரிக்கா புதிய தடை நடவடிக்கை – இரான் பதிலடி உறுதி அமெரிக்கா விதித்துள்ள புதிய தடை நடவடிக்கைகளை கண்டித்துள்ளதோடு, இதற்கு பதிலடி நடவடிக்கையை தானும் எடுக்கப் போவதாக இரான் உறுதி அளித்திருக்கிறது. ஞாயிற்றுக்கிழமை இரான் மேற்கொண்ட பேலிஸ்டிக் ஏவுகணை சோதனைக்கும், பயங்கரவாதத்துக்கு தெஹ்ரானின் தொடர்ந்து அளிக்கும் ஆதரவு என்று அமெரிக்கா விவரித்திருக்கும் நடவடிக்கைக்கும் பதிலடியாக இந்த தடைகளை விதித்திருப்பதாக அமெரிக்கா கூறுகிறது. அமெரிக்காவின் அச்சுறுத்தல்களை பற்றி கவலையில்லை : இரான் […]





