மூன்று வருட மர்மத்துக்கு விடை தேடும் தென்கொரியா! மூன்று வருடங்களுக்கு முன் 304 பேருடன் மூழ்கிய தென்கொரியக் கப்பலை அப்புறப்படுத்தும் முயற்சியில் மீட்புக் குழுவினர் இறங்கியுள்ளனர். ‘செவோல்’ என்ற இந்தக் கப்பல் மூன்று வருடங்களுக்கு முன், நூற்றுக்கணக்கான உயர் வகுப்பு பாடசாலை மாணவர்களுடன் தென்மேற்குக் கடலில் மூழ்கியது. அளவுக்கதிகமானோரை ஏற்றியமையாலும், வேகமாகப் பயணித்தபடியே திரும்ப முயற்சித்ததாலுமே இந்த விபத்து நிகழ்ந்தது என்று கூறப்படுகிறது. இதில் 304 பேர் கொல்லப்பட்டதுடன் ஒன்பது […]
உலக செய்திகள்
சற்றுமுன் பிரிட்டிஷ் பாராளுமன்ற சுற்றியுள்ள பகுதியில் தாக்குதல்.பெண் ஒருவர் பலி!
சற்றுமுன் பிரிட்டிஷ் பாராளுமன்ற சுற்றியுள்ள பகுதியில் தாக்குதல்.பெண் ஒருவர் பலி! சற்றுமுன்பிரிட்டிஷ் பாராளுமன்ற சுற்றியுள்ள பகுதியில் தாக்குதல்.பெண் ஒருவர் பலி, பலர் படுகாயம் அடைந்தனர் .இந்தத் தாக்குதலை தீவிரவாத தாக்குதல் என லண்டன் போலீசார் சந்தேகிக்கின்றனர்,எனினும் அவர்கள் இன்னும் உறுதிப்படுத்தவில்லை என்பது குறிப்பிடத்தக்கது. மேலும் நாடாளுமன்ற வளாகத்தில் போலீசார் ஒருவர் கத்தியால் குத்தப்பட்டுள்ளார் என்பதும் தெரிய வருகிறது. தாக்குதலாளி நோக்கி துப்பாக்கியால் சுட்டனர் இதனால் காயமடைந்த தாக்குதலாளியை மருத்துவமனைக்கு கொண்டுசென்றனர் என்பதும் தெரிய […]
(திருத்தம்) உலகின் முதலாவது மகிழ்ச்சியான நாடக நோர்வே தெரிவு!
(திருத்தம்) உலகின் முதலாவது மகிழ்ச்சியான நாடக நோர்வே தெரிவு! ஐக்கிய நாடுகள் சபையின் நிலையான அபிவிருத்தி தீர்வுகள் பிணையம் தனது 2017 ஆம் ஆண்டின் அறிக்கையை போன புதன்கிழமை வெளியிட்டது.அதன்படி உலகின் மகிழ்ச்சியான நாடுகளின் பட்டியலில் நோர்வே முதலாவது இடத்தைப் பிடித்துக்கொண்டது. புதிய பட்டியலின் படி நோர்வே முதலாவது இடத்தையும் டென்மார்க் மற்றும் ஐஸ்லாந்து இரண்டாம் மூன்றாம் இடத்தையும் சுவிச்சர்லாந்து நான்காம் இடத்தையும் பிடித்தன. 157 நாடுகளில் நடத்திய ஆய்வின்படி,மக்கள் […]
கார் குண்டு வெடிப்பில் 20-க்கும் மேற்பட்டோர் உயிரிழப்பு !
கார் குண்டு வெடிப்பில் 20-க்கும் மேற்பட்டோர் உயிரிழப்பு ! ஈராக் நாட்டின் பாக்தாத் நகர் அருகே கார் குண்டு வெடிப்பில் 20க்கும் மேற்பட்டோர் உயிரிழந்தனர். மக்கள் நெருக்கம் அதிகமாக இருந்த கடை வீதியில் நிறுத்தப்பட்டிருந்த கார் வெடித்துச் சிதறியதில் 23 பேர் உயிரிழந்ததாகவும், 45க்கும் மேற்பட்டவர்கள் காயமடைந்துள்ளதாகவும் அறிவிக்கப்பட்டுள்ளது. தாக்குதலுக்குப் பொறுப்பேற்பதாக ஐ.எஸ். தீவிரவாதிகள் அறிவித்துள்ளனர். குண்டு வெடிப்பால் அப்பகுதி முழுவதும் போர்க்களம் போல் காட்சியளித்தது. மொசூல் நகரில் கட்டுப்பாட்டை […]
உலக மனநலிவுக் குறைபாடு தினம் இன்று
உலக மனநலிவுக் குறைபாடு தினம் இன்று ‘டவுண் சிண்ட்ரோம்’ ஒரு நோயல்ல; குறைபாடு. இவர்களை, மனநலக் குறைபாடுள்ள குழந்தைகள் என்றே பெரும்பாலானோர் நினைப்பது தவறு. மரபணு கோளாறால் ஏற்படுகிறது. மருத்துவ ஆலோசனையும், சிகிச்சையும் பெற்றால், அவர்களும் மற்றவர்களைப் போல், ஓரளவு இயல்பாக செயலாற்ற முடியும். தட்டையான முகம், சரிவான நெற்றி, கண்கள் மேல்நோக்கிச் சாய்ந்திருத்தல், தட்டையான சிறிய மூக்கு போன்ற அடையாளங்களுடன் இருப்பர். மேலும் கைவிரல்கள் குட்டையாகவும், கைகளில் மூன்று […]
மனித உரிமைகள் விடயத்தில் முன்னேற்றம் அவசியம் : ஐரோப்பிய ஒன்றியம் வலியுறுத்து
மனித உரிமைகள் விடயத்தில் முன்னேற்றம் அவசியம் : ஐரோப்பிய ஒன்றியம் வலியுறுத்து ஐரோப்பிய ஒன்றியத்திற்கான ஏற்றுமதி சலுகையான ஜீ.எஸ்.பி. பிளஸ் வரிச்சலுகையை பெற்றுக்கொள்ள வேண்டுமாயின் மனித உரிமை நிலைமைகளை மேம்படுத்துவது குறித்து சர்வதேசத்திற்கு வழங்கிய வாக்குறுதிகளை நிறைவேற்றுவதில் காத்திரமான முன்னேற்றங்களை மேற்கொள்ளவேண்டுமென ஐரோப்பிய ஒன்றியம் ஸ்ரீலங்காவிடம் வலியுறுத்தியுள்ளது. ஐரோப்பிய ஒன்றியத்தின் நடவடிக்கைக்குழு ஒன்று நேற்றும், இன்றும் கொழும்பில் நடத்திய இணைக்குழுக் கூட்டத்தின் பின்னர் வெளியிட்டுள்ள அறிக்கையொன்றில், ஸ்ரீலங்கா சித்திரவதை உள்ளிட்ட […]
தீவிரவாதிகளை ஆளில்லா ட்ரோன்கள் மூலம் தாக்கி அழிக்க சி.ஐ.ஏ-வுக்கு அதிபர் டிரம்ப் உத்தரவு
தீவிரவாதிகளை ஆளில்லா ட்ரோன்கள் மூலம் தாக்கி அழிக்க சி.ஐ.ஏ-வுக்கு அதிபர் டிரம்ப் உத்தரவு சந்தேகத்திற்குரிய தீவிரவாதிகள் மீது ட்ரோன்கள் (ஆளில்லா விமானங்கள்) மூலமாக தாக்குதல் நடத்தி அழிக்க அமெரிக்க புலனாய்வு அமைப்பான சி.ஐ.ஏ-க்கு அதிபர் டிரம்ப் அனுமதி அளித்துள்ளதாக தகவல்கள் வெளியாகியுள்ளது. அமெரிக்க அதிபராக டிரம் பொறுப்பேற்ற பின்னர் அந்நாட்டு பாதுகாப்பு துறையை மறுகட்டமைப்பு செய்து வருகிறார். இந்நிலையில், தீவிரவாத தாக்குதல்களில் சந்தேகப்படும்படியான தீவிரவாதிகள் மீது ட்ரோன்கள்-களை (ஆளில்லா விமானங்கள்) […]
உலகின் தலைசிறந்த நகரமாக ஆஸ்திரியாவின் வியன்னா நகரம் தேர்வு
உலகின் தலைசிறந்த நகரமாக ஆஸ்திரியாவின் வியன்னா நகரம் தேர்வு உலகின் தலைசிறந்த நகரமாக ஆஸ்திரியாவின் வியன்னா நகரம் தேர்வு செய்யப்பட்டுள்ளது. மெர்சர் என்ற நிறுவனம் உலகின் தலைசிறந்த நகரங்கள் குறித்த ஆய்வை சமீபத்தில் மேற்கொண்டது. மொத்தம் 231 நகரங்களை வைத்து மெர்சர் நிறுவனம் நடத்திய ஆய்வில் ஆஸ்திரியாவின் வியன்னா நகரம் உலகின் தலைசிறந்த நகரமாக தேர்வு செய்யப்பட்டுள்ளது. இந்தப் பட்டியலில் 2-வது இடத்தை சுவிட்சர்லாந்தின் ஜுரிச் நகரமும், 3-வது இடத்தை […]
பிரான்ஸ் தலைநகர் பாரீஸ் நகரில் எலிகளை ஒழிக்க மாநகராட்சி ரூ.150 கோடி ஒதுக்கீடு
பிரான்ஸ் தலைநகர் பாரீஸ் நகரில் எலிகளை ஒழிக்க மாநகராட்சி ரூ.150 கோடி ஒதுக்கீடு பிரான்ஸ் தலைநகர் பாரீசில் தொல்லை தரும் எலிகளை ஒழிக்க மாநகராட்சி ரூ.150 கோடி ஒதுக்கி நடைமுறைப்படுத்தி வருகிறது. இந்தியாவில் மட்டுமின்றி உலகம் முழுவதும் எலிகளின் தொல்லை அதிக அளவில் உள்ளது. அவற்றை ஒழிக்க தீவிர நடவடிக்கை மேற்கொண்டு வருகின்றன. பிரான்ஸ் தலைநகர் பாரீசில் தொல்லை தரும் எலிகளை ஒழிக்க மாநகராட்சி ரூ.150 கோடி ஒதுக்கி நடைமுறைப்படுத்தி […]
ஐ.எஸ் தீவிரவாதிகளின் கட்டுப்பாட்டில் இருந்த முக்கிய நகரை கைப்பற்றிய துருக்கி அரசின் ஆதரவு கிளர்ச்சியாளர்கள்
ஐ.எஸ் தீவிரவாதிகளின் கட்டுப்பாட்டில் இருந்த முக்கிய நகரை கைப்பற்றிய துருக்கி அரசின் ஆதரவு கிளர்ச்சியாளர்கள் சிரியாவின் தெற்கு பகுதியில் உள்ள ஐ.எஸ் தீவிரவாதிகளின் கட்டுப்பாட்டில் இருந்த முக்கிய நகரை துருக்கி அரசின் ஆதரவு பெற்ற சிரிய கிளர்ச்சியாளர்கள் கைப்பற்றியுள்ளதாக துருக்கி அதிபர் தெரிவித்துள்ளார். சிரியாவில் ஆளும் பஷார் அல் ஆஸாத் அரசுக்கு எதிராக கிளர்ச்சியாளர்கள் போராட்டத்தில் ஈடுபட்டு வருகின்றனர். கிளர்ச்சியாளர்களுக்கு துருக்கி உள்ளிட்ட சில நாடுகள் ஆதரவை அளித்து வருகின்றன. […]





