அ.தி.மு.க. அம்மா அணியுடன் அ.தி.மு.க. புரட்சித் தலைவி அம்மா அணி இணையக்கூடாது, நாம் தனித்தே செயல்பட்டு நம்முடைய பலத்தை நிரூபிக்க வேண்டும் என சேலத்தில் நடைபெற்ற ஓ.பி.எஸ். ஆதரவாளர்கள் கூட்டத்தில் தீர்மானம் நிறைவேற்றப்பட்டது. அ.தி.மு.க. புரட்சித்தலைவி அம்மா அணியின் ஒருங்கிணைந்த சேலம் மாவட்ட நிர்வாகிகள் ஆலோசனைக் கூட்டம் சேலம் சீலநாயக்கன்பட்டியில் இன்று நடந்தது. கூட்டத்திற்கு மேட்டூர் தொகுதி எம்.எல்.ஏ.செம்மலை தலைமை தாங்கினார். முன்னாள் அமைச்சர் விஜயலட்சுமி பழனிசாமி, முன்னாள் எம்.பி. […]
தமிழ்நாடு செய்திகள்
சசிகலாவுக்கு ஆதரவாக எடப்பாடி பழனிசாமி அணியினர் மாவட்ட செயலாளர்களிடம் பிரமாண பத்திரத்தில் கையெழுத்து
சசிகலாவுக்கு ஆதரவாக எடப்பாடி பழனிசாமி அணியினர் மாவட்ட செயலாளர்களிடம் பிரமாண பத்திரத்தில் கையெழுத்து வாங்கியுள்ளனர். இதனால் இரு அணிகள் பேச்சுவார்த்தை மங்கி வருகிறது. தமிழக முதல்வராக இருந்த ஜெயலலிதாவின் மறைவுக்குப் பிறகு அ.தி.மு.க. இரண்டாக பிளவுபட்டு செயல்படுகிறது. சசிகலாவின் தலைமையை ஏற்க பிடிக்காமல் முன்னாள் முதல்-அமைச்சர் ஓ.பன்னீர்செல்வம் தலைமையில் ஒரு அணி செயல்படுகிறது. 122 எம்.எல்.ஏ.க்கள் ஆதரவுடன் மெஜாரிட்டியை நிரூபித்த சசிகலாவின் ஆதரவு அணி முதல்வர் எடப்பாடி பழனிசாமி தலைமையில் […]
தமிழகத்தில் முழுமையான மதுவிலக்கை உடனடியாக அமல்படுத்த வேண்டும் – தி.மு.க மாவட்ட செயலாளர்கள் கூட்டத்தில் தீர்மானம்
தமிழகத்தில் முழுமையான மதுவிலக்கை உடனடியாக அமல்படுத்த வேண்டும் என்பன உள்ளிட்ட 7 தீர்மானங்கள் தி.மு.க மாவட்ட செயலாளர்கள் கூட்டத்தில் நிறைவேற்றப்பட்டது. தி.மு.க. மாவட்ட செயலாளர்கள் கூட்டம் அண்ணா அறிவாலயத்தில் இன்று காலை 10 மணிக்கு நடந்தது. தி.மு.க செயல் தலைவர் மு.க. ஸ்டாலின் காலை 9.50 மணிக்கு அறிவாலயம் வந்தார். அவரை தொடர்ந்து பொதுச்செயலாளர் பேராசிரியர் அன்பழகன் வந்தார். இதைத்தொடர்ந்து மாவட்ட செயலாளர்கள் கூட்டம் மு.க.ஸ்டாலின் தலைமையில் தொடங்கியது. கூட்டத்தில் […]
கொடநாடு எஸ்டேட் காவலாளி கொலை மர்மம் உரிய விசாரணை நடத்தி உண்மையை கண்டுபிடிக்க வேண்டும் – மு.க.ஸ்டாலின்
கொடநாடு எஸ்டேட் காவலாளி கொலை மர்மம் பற்றி உரிய விசாரணை நடத்தி உண்மையை மக்களுக்கு தெரிவிக்க வேண்டும் என மு.க.ஸ்டாலின் தெரிவித்துள்ளார். தி.மு.க. மாவட்ட செயலாளர்கள் கூட்டம் முடிந்ததும் அறிவாலயத்தில் மு.க.ஸ்டாலின் நிருபர்களுக்கு பேட்டி அளித்தார். அப்போது அவர் கூறியதாவது:- சட்டமன்ற உறுப்பினராக கலைஞர் 60 ஆண்டுகள் பணியாற்றியதையொட்டி அவருக்கு பாராட்டு தெரிவித்தும் மற்றும் பல்வேறு தீர்மானங்களும் நிறைவேற்றப்பட்டன. தமிழ்நாட்டில் வறட்சியால் விவசாயிகள் தற்கொலை செய்யவில்லை என்று உச்சநீதிமன்றத்தில் தமிழக […]
மறைந்த முதல்-அமைச்சர் ஜெயலலிதாவுக்கு சொந்தமான கொடநாடு எஸ்டேட் பங்களா காவலாளி கொலை – கேரளாவில் ஒருவர் கைது
மறைந்த முதல்-அமைச்சர் ஜெயலலிதாவுக்கு சொந்தமான கொடநாடு எஸ்டேட்டில் கடந்த 24-ந்தேதி நடந்த கொலை- கொள்ளை சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. கொடநாடு எஸ்டேட்டிற் குள் 2 கார்களில் நுழைந்த முகமூடி கொள்ளையர்கள் 10-வது நுழைவு வாயிலில் பாதுகாப்பில் ஈடுபட்டிருந்த காவலாளி ஓம்பகதூரை படுகொலை செய்தனர். அவரது அலறல் சத்தம் கேட்டு ஓடிவந்த மற்றொரு காவலாளி கிருஷ்ண பகதூரை சரமாரியாக வெட்டிய அந்த கும்பல் ஜெயலலிதாவின் அறைக்குள் ஜன்னல் கண்ணாடியை உடைத்து […]
டி.டி.வி. தினகரன் கைதை தொடர்ந்து மேலும் பல பெரிய தவறுகள் வெளிவரும் – மத்திய மந்திரி பொன்.ராதாகிருஷ்ணன் பேட்டி
டி.டி.வி. தினகரன் தேர்தல் கமிஷனுக்கு லஞ்சம் கொடுக்க முயன்றதாக டெல்லியில் போலீசார் அவரை கைது செய்தனர். கைதை தொடர்ந்து மேலும் பெரிய தவறுகள் வெளிவரும் என்று பொன். ராதாகிருஷ்ணன் கூறினார். நாகர்கோவிலில் இன்று மத்திய மந்திரி பொன்.ராதாகிருஷ்ணன் நிருபர்களிடம் கூறியதாவது:- டி.டி.வி. தினகரன் தேர்தல் கமிஷனுக்கு லஞ்சம் கொடுக்க முயன்றதாக டெல்லியில் போலீசார் அவரை கைது செய்து உள்ளனர். அது தான் உச்சம் என்று சொல்ல முடியாது. மேலும் இது […]
விவசாயிகளுக்கு ஆதரவான முழு அடைப்பு போராட்டம் வெற்றி – கோரிக்கைகள் நிறைவேறும்வரை ஒன்றிணைந்து போராடுவோம் – மு.க.ஸ்டாலின்
விவசாயிகளுக்கு ஆதரவான முழு அடைப்பு போராட்டம் வெற்றி பெற்றதையடுத்து தி.மு.க. செயல்தலைவர் மு.க.ஸ்டாலின் கோரிக்கைகள் நிறைவேறும்வரை ஒன்றிணைந்து போராடுவோம் என்று தொண்டர்களுக்கு கடிதம் எழுதியுள்ளார்,. தி.மு.க. செயல்தலைவர் மு.க.ஸ்டாலின் தொண்டர்களுக்கு எழுதிய கடிதத்தில் கூறியிருப்பதாவது:- மத்திய மாநில அரசுகளால் தொடர்ந்து வஞ்சிக்கப்படும் விவசாயப் பெருங்குடி மக்களை பாதுகாத்து அவர்களின் உரிமைகளை மீட்க வேண்டும் என்ற பொதுநல நோக்கத்தில் நடத்தப்பட்ட அனைத்து கட்சி கூட்டத்தில் மூலம் தி.மு.க. முன்னெடுத்த முழு அடைப்புப் […]
குடிசை மாற்று வாரியத்தில் என்ஜினீயர்களுக்கு பணி நியமன ஆணை: முதல்-அமைச்சர் எடப்பாடி பழனிசாமி
குடிசை மாற்று வாரியத்தில் என்ஜினீயர்களுக்கு பணி நியமன ஆணைகளை முதல்-அமைச்சர் எடப்பாடி பழனிச்சாமி வழங்கினார். தமிழக அரசு வெளியிட்டுள்ள செய்தி குறிப்பில் கூறி இருப்பதாவது:- தமிழ்நாடு குடிசை மாற்று வாரியத்தில் 64 உதவிப் பொறியாளர்கள் மற்றும் 17 இளநிலைப் பொறியாளர்களை தேர்வு செய்யும் பணி அண்ணா பல்கலைக்கழகத்திடம் வழங்கப்பட்டது. அண்ணா பல்கலைக் கழகம், கடந்த 29.01.2017 அன்று எழுத்துத் தேர்வு நடத்தி, அதில் பெற்ற மதிப் பெண்களின் அடிப்படையில் 1:5 […]
சசிகலா பேனர் அகற்றியது வரவேற்கத்தக்கது. அ.தி.மு.க.வின் இரு அணிகளும் இணைவதற்கான இணக்கமான சூழல் – கே.பி.முனுசாமி
சசிகலா பேனர் அகற்றியது வரவேற்கத்தக்கது. அ.தி.மு.க.வின் இரு அணிகளும் இணைவதற்கான இணக்கமான சூழல் உருவாகியுள்ளதால் பேச்சுவார்த்தை தொடங்கும் என்று கே.பி.முனுசாமி கூறினார். அ.தி.மு.க.வின் இரு அணிகளும் இணைவதற்கான அதிகாரபூர்வமான பேச்சுவார்த்தை இன்று பிற்பகலில் தொடங்குகிறது. இதில் ஓ.பி.எஸ். மற்றும் எடப்பாடி அணி சார்பில் தலா 7 பேர் கொண்ட குழுவினர் பங்கேற்று பேசுகிறார்கள். அதிகாரப்பூர்வ பேச்சுவார்த்தை இன்று தொடங்குவதையொட்டி ஓ.பி.எஸ். அணியினர் இன்று காலை ஆலோசனை நடத்தினார்கள். கிரீன்வேஸ் சாலையில் […]
அ.தி.மு.க.வில் இணைப்பு முயற்சி: எடப்பாடி பழனிச்சாமி- ஓ.பி.எஸ். தனித்தனியாக ஆலோசனை
அ.தி.மு.க.வில் பிளவுபட்டுள்ள இரு அணிகளையும் இணைப்பது தொடர்பாக எடப்பாடி பழனிச்சாமி மற்றும் ஓ.பன்னீர் செல்வம் தனது ஆதரவாளர்களுடன் ஆலோசனை நடத்தினர். அ.தி.மு.க.வில் பிளவுபட்டுள்ள இரு அணிகளையும் இணைக்கும் முயற்சி இன்று நடக்கிறது. ஓ . பன்னீர்செல்வம் அணியையும், முதல்-அமைச்சர் எடப்பாடி பழனிச்சாமி அணியையும் இணைக்கும் முதல்கட்ட பேச்சுவார்த்தை அ.தி.மு.க. தலைமை அலுவலகத்தில் இன்று மாலை நடக்கிறது. இந்த நிலையில் இணைப்பு முயற்சி தொடர்பாக முதல்- அமைச்சர் எடப்பாடி பழனிச்சாமி இன்று […]





