தமிழ்நாடு செய்திகள்

டிடிவி தினகரனின் மாஸ்டர் தான் ஸ்டாலின்

டிடிவி தினகரனும் திமுகவும் மறைமுகமாக இணைந்து செயல்பட்டு வருவதாக கடந்த சில நாட்களாக அதிமுக தலைவர்கள் குற்றஞ்சாட்டி வருகின்றனர். இந்த குற்றச்சாட்டை அவ்வப்போது தினகரனும் மறுத்து வருகிறார். இந்த நிலையில் டிடிவி தினகரனின் மாஸ்டரே திமுக செயல் தலைவரான மு.க.ஸ்டாலின் தான் என்று அமைச்சர் ஜெயகுமார் கூறியுள்ளார். இன்று செய்தியாளர்களை சந்தித்த அமைச்சர் ஜெயகுமார் இதுகுறித்து மேலும் கூறியதாவது: தகுதி நீக்கம் செய்யப்பட்ட 18 எம்.எல்.ஏக்களை சபரிமலையின் 18 படிகள் என்று கூறியுள்ளார் தினகரன். இவரென்ன […]

நடிகர் ரஜினி தமிழ்ச்சமூகத்தின் எதிரி! சீமான் பரபரப்பு குற்றச்சாட்டு…

நடிகரும், ஆன்மிக அரசியலை முன்னெடுக்கப்போவதாக அறிவித்துள்ள ரஜினிகாந்த் தமிழ்ச்சமூகத்தின் எதிரி ; விரோதி என ரஜினியை மிக காட்டமாக விமர்சித்துள்ளார் நாம் தமிழர் கட்சியின் தலைமை ஒருங்கிணைப்பாளர் சீமான். தூத்துக்குடியில் ஸ்டெர்லைட் ஆலைக்கு எதிராக போராடிய பொதுமக்கள் மீது காவல்துறை துப்பாக்கிச்சூடு நடத்தியதில் சுமார் 13 அப்பாவி பொதுமக்கள் உயிரிழந்தனர். ஏராளமானோர் பாதிக்கப்பட்டுள்ளனர். பாதிக்கப்பட்ட மக்களை அரசியல் கட்சி தலைவர்கள் நேரில் சந்தித்து ஆறுதல் தெரிவித்துவரக்கூடிய சூழலில், தூத்துக்குடி மக்களை […]

எஸ்.வி.சேகரை பாஜகவிலிருந்து ஒதுக்கி வைத்துள்ளோம்

பெண் பத்திரிக்கையாளர்களை கொச்சைப்படுத்தும் வகையில் முகநூலில் பதிவு வெளியிட்ட விவகாரத்தில் அவர் மீது வழக்கு பதிவு செய்யப்பட்டது. ஆனால் அவரை காவல்துறையினர் கைது செய்யவில்லை. சென்னை உயர் நீதிமன்றத்தில் எஸ்.வி.சேகரின் முன்ஜாமீன் மனு தள்ளுபடி செய்யப்பட்டு அவரை கைது செய்ய எந்த தடையும் இல்லை என்று நீதிமன்றம் அறிவித்தது. பின்னர் முன் ஜாமின் கோரி உச்ச நீதிமன்றத்தில் மனு தாக்கல் செய்தார். முன் ஜாமீன் வழங்க முடியாது என உச்ச […]

நீட் தேர்வினால் மட்டும்தான் தற்கொலையா ?

நீட் தேர்வினால் தமிழகத்திலும் வட இந்தியாவிலும் மாணவர்கள் தற்கொலை செய்து கொண்டது குறித்து செய்தியாள்ரகள் கேட்ட கேள்விக்கு பதிலளித்த மத்திய பாதுகாப்பு துறை அமைச்சர் நிர்மலா சீதாராமன், ‘இந்த தற்கொலைகள் நீட் தேர்வினால்தான் ஏற்பட்டதா? என்பது குறித்து யோசிக்க வேண்டும் என்று கூறினார். இதுகுறித்து மேலும் அவர் கூறியதாவது: தற்கொலை செய்து கொண்டவர்கள் தமிழகத்தவர்களா? வட இந்தியர்களா? என்று நான் பிரித்து பார்ப்பதில்லை. ஒரு பரிட்சை எழுதுகிறோம். எதிர்பாராத வகையில் […]

குறுவை சாகுபடிக்காக தண்ணீர் திறக்க இயலாது: முதல்வர் பழனிசாமி திட்டவட்டம்

சட்டப்பேரவையில் 110 விதியின் கீழ் இன்று அறிவிப்புகளை வெளியிட்டு பேசிய முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமி, மேட்டூர் அணையில் தற்போது 39.42 அடி தண்ணீர் மட்டுமே இருப்பதால் வரும் 12ந்தேதி மேட்டூர் அணையிலிருந்து குறுவை சாகுபடிக்காக நீர் திறக்க வாய்ப்பு இல்லை என்று கூறினார். தமிழகத்தில் இந்த ஆண்டும் குறுவை சாகுபடி தொகுப்புத் திட்டம் செயல்படுத்தப்படும் என்றும் கூறினார். டெல்டா மாவட்டங்களில் குறுவை சாகுபடியை மேற்கொள்ளும் விவசாயிகளுக்கு உதவுவதற்காக அரசு செய்யும் […]

அய்யாக்கண்ணு கைது – முதல்வர் பழனிசாமி விளக்கம்

கேள்வி நேரம் முடிந்த பின் பேசிய சட்டமன்ற எதிர்க்கட்சித் துணைத்தலைவர் துரைமுருகன், தலைமைச் செயலகத்தில் சட்டமன்ற எதிர்க்கட்சித்தலைவரை பார்க்க வந்த விவசாய சங்கத்தலைவர் அய்யாக்கண்ணு வரும் வழியிலே தடுத்து நிறுத்தப்பட்டு கைது செய்யப்பட்டதாக பேசினார். இதற்கு பதிலளித்துப் பேசிய தமிழக முதல்வர் எடப்பாடி பழனிச்சாமி, மாதவரம் – அம்பத்தூர் பகுதிகளில் துண்டுச்சீட்டு பிரச்சாரத்தை செய்ய அனுமதியை பெற்றுவிட்டு, அனுமதி பெறாமல் வடபழனி பகுதிகளில் பிரச்சாரம் மேற்கொண்டார் எனவும், அதன் காரணமாகவே […]

கர்நாடக முதல்வருடன் மக்கள் நீதி மய்ய தலைவர் கமல்ஹாசன் சந்திப்பு!

காவிரி மேலாண்மை வாரியம் அமைப்பது தொடர்பான அறிவிப்பை மத்திய அரசு அரசிதழில் வெளியிட்டதை தொடர்ந்து இந்த விவகாரம் முக்கிய கட்டத்தை எட்டியுள்ளது. அதுமட்டுமின்றி கர்நாடகாவில் மதச்சார்பற்ற ஜனதா தளம் மற்றும் காங்கிரஸ் கூட்டணியில் குமாரசாமி தலைமையில் புதிய அரசு பதவியேற்றுள்ளது. இந்நிலையில் மக்கள் நீதி மய்யத்தின் தலைவர் கமல்ஹாசன் கர்நாடக முதல்வர் குமாரசாமியை பெங்களூருவில் இன்று சந்தித்தார். பின்னர் இருவரும் கூட்டாக செய்தியாளர்களை சந்தித்தனர். அப்போது பேசிய கர்நாடக முதல்வர் […]

எஸ்.வி.சேகருக்கு முன்ஜாமீன் இல்லை: உச்சநீதிமன்றம்!

பெண் பத்திரிக்கையாளர்களை குறித்து அவதூறாக சமூக வலைதளத்தில் பதிவிட்டார் எஸ்.வி.சேகர். இதையடுத்து தமிழகம் முழுக்க எஸ்.வி.சேகருக்கு எதிர்ப்பு தெரிவித்தனர். மேலும் அவர் மீது வழக்குப் பதிவு செய்யப்பட்டது. இதையடுத்து எஸ்.வி.சேகரை கைது செய்வதற்கான முயற்சிகள் எடுக்கப்பட்ட நிலையில் முன்ஜாமீன் வழங்க சென்னை உயர்நீதிமன்றம் மறுத்ததால், சில நாட்கள் தலைமறைவாகியிருந்தார் எஸ்.வி.சேகர். அடுத்ததாக உச்ச நீதிமன்றத்தில் எஸ்.வி.சேகர் தரப்பில் மனு தாக்கல் செய்யப்பட்டது. இந்த மனுவை விசாரித்த உச்ச நீதிமன்றம், எஸ்.வி.சேகருக்கு […]

ரஜினிகாந்திடம் அப்படி பேசியதற்கு இதுதான் காரணம்!

நீங்கள் யார்? எங்கிருந்து வருகிறீர்கள்? என்று ரஜினிகாந்தை வேதனைப்படுத்துவதற்காக தான் கேள்வி கேட்கவில்லை என சிகிச்சை பெறும் வாலிபர் விளக்கம் அளித்துள்ளார். தூத்துக்குடி துப்பாக்கி சூட்டில் காயமடைந்த சந்தோஷ் ராஜ் தூத்துக்குடி அரசு ஆஸ்பத்திரியில் அனுமதிக்கப்பட்டு சிகிச்சை பெற்று வருகிறார். அவருடன் மேலும் 46 பேர் சிகிச்சை பெற்று வருகிறார்கள். அவர்களுக்கு ஆறுதல் சொல்ல ரஜினிகாந்த் சென்ற போது தான் அவரைப் பார்த்து “நீங்கள் யார்? எங்கிருந்து வருகிறீர்கள்?” என்று சந்தோஷ் […]

ரஜினியின் முகம் சுழிக்கவைக்கும் செயல்!

ஸ்டெர்லைட் பிரச்சனையில் பாதிக்கபட்ட்வர்களை காண ரஜினி தூத்துக்குடி சென்றுள்ளார்.பின் மருத்துவமனை சென்று பாதிக்கிபட்டவர்களை பார்த்து நலம் விசாரித்துள்ளார் அங்கு அவரை சிலர் வரவேற்றனர் மேலும் பலர் அவருக்கு எதிர்ப்பு தெரிவித்தனர்.ஆகையால் அங்கு கொஞ்ச நேரம் சலசலப்பு ஏற்பட்டது. பின் விமானநிலையத்தில் பேசிய ரஜினி இந்த பிரச்சனை காரணம் சமூக விரோதிகள் பொலிஸை அடித்ததே காரணம் என கூறிய பதில் அனைவரின் முகத்தையும் சுழிக்க வைத்துள்ளது. https://youtu.be/R4jP-zunk_w