முக்கிய செய்திகள்

Head News

புலிகளில் கவனம் செலுத்தியதால் குப்பையில் கவனம் செலுத்தவில்லை – மகிந்த சொல்கிறார்

யுத்தம் தொடர்பில் அதிக கவனம் செலுத்தியமையினாலேயே மீதொட்டமுல்ல குப்பை மேட்டை அப்புறப்படுத்தும் நடவடிக்கைகளில் அதிக கவனத்தினைச் செலுத்த முடியவில்லை என முன்னாள் ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷ தெரிவித்துள்ளார். அநுராதபுரம் ஸ்ரீமகா விஹாரையில் வழிபாடுகளில் ஈடுபட்ட பின்னர் ஊடகவியலாளர்கள் எழுப்பிய கேள்விக்கு பதிலளிக்கும் போதே அவர் இதனைக் குறிப்பிட்டுள்ளார். இது குறித்து அவர் மேலும் தெரிவிக்கையில், “நாம் நாட்டினது பிரதானமான பிரச்சினையிலேயே அதிக கவனத்தினைச் செலுத்தியிருந்தோம். அதன்படி யுத்தத்தினையும் நிறைவுக்கு கொண்டுவந்திருந்தோம். […]

மீத்தொட்டமுல்லை குப்பை மேடு அனர்த்தம் உடனடியாக 60 வீடுகளைப் பெற்றுக்கொடுக்க ஜனாதிபதி பணிப்பு

மீத்தொட்டமுல்லை குப்பை மேடு சரிந்து விழுந்து ஏற்பட்ட அனர்த்தம் தொடர்பில் சலுகை அளிப்பது தொடர்பில் நேற்று இடம்பெற்ற முன்னேற்றக் கூட்டத்தில் எடுக்கப்பட்ட முடிவுகளின் அடிப்படையில், முழுமையாக பாதிக்கப்பட்ட 60 வீடுகளில் வசிக்கும் வீட்டு உரிமையாளர்களுக்காக வீடுகளை பெற்றுக் கொடுப்பதற்கு ஜனாதிபதி மற்றும் பிரதமர் ஆகியோரின் ஆலோசனையின் பெயரில் நடவடிக்கை மேற்கொள்ளப்பட்வுள்ளது. வீட்டு உரிமையாளர்களுக்கு வீட்டு உபகரணங்களைக் கொள்வனவு செய்வதற்காக இரண்டரை இலட்சம் ரூபாவும் அவற்றை கொண்டு செல்வதற்காக 10, 000 […]

மோடி இலங்கை வருவதை உறுதிப்படுத்தினார் மைத்திரி!

மே மாதம் நடைபெறவுள்ள வெசாக்தின ஆரம்ப நிகழ்வில் இந்தியப் பிரதமர் மோடியும், இறுதிநாள் நிகழ்வில் நேபாள ஜனாதிபதியும் கலந்துகொள்கிறார்கள் என்பதை ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன நேற்று நடைபெற்ற ஊடகப் பிரதானிகளுடனான சந்திப்பில் உறுதிப்படுத்தியுள்ளார். ஜனாதிபதி தலைமையில் நேற்று நடைபெற்ற சந்திப்பில் தெரிவிக்கப்பட்ட மற்றும் சில விடயங்கள் வருமாறு:- * குருநாகல், அநுராதபுரம், புத்தளம், திருகோணமலை, வவுனியா ஆகிய இடங்களில் ஆசிய அபிவிருத்தி வங்கி மற்றும் வெளிநாட்டு உதவி நிறுவனங்களின் உதவியுடன் […]

இப்படியே சென்றால் இராணுவப் புரட்சிதான்! – அரசுக்கு டியூ எச்சரிக்கை

இந்த அரசு இப்படியே பயணித்துக்கொண்டிருந்தால் இந்த நாட்டில் இளைஞர்களின் புரட்சி அல்லது இராணுவப் புரட்சி ஏற்படும் என்று முன்னாள் அமைச்சர் டியூ குணசேகர எச்சரித்துள்ளார். இது தொடர்பில் அவர் மேலும் கூறியுள்ளதாவது:- “மஹிந்தவின் ஆட்சியைக் கவிழ்த்து நல்லாட்சி என்று சொல்லப்படும் இந்த ஆட்சி உருவானது. மஹிந்தவின் ஆட்சியில் காணப்பட்ட பல பிரச்சினைகளுக்கு இந்த அரசு தீர்வாக இருக்கும் என்று இந்த நாட்டு மக்கள் எதிர்பார்த்தனர். ஆட்சிப்பீடமேறி இரண்டு வருடங்கள் ஆகின்றன. […]

பிரான்ஸ் தாக்குதலில் போலீசார் ஒருவர் மரணம்.

சற்றுமுன் பிரான்சில் சேம்ப்ஸ் எலிஸஸ்ல் நடந்த துப்பாக்கிச்சூட்டுச் சம்பவத்தில் போலீசார் ஒருவர் மரணம்அடைந்ததுடன் மற்றுமொரு போலீசார் காயமடைந்தார். துப்பாக்கிச்சூட்டு நடத்திய தாக்குதலாளியை போலீசார் சுட்டுக்கொன்றனர்.துப்பாக்கிச்சூடு நடந்த நகரை முழுமையாக போலீசார் தங்கள் கட்டுப்பாட்டுக்குள் கொண்டுவந்தனர். பிரான்சில் அதிபர் தேர்தல் நடைபெறப்போகும் சமயத்தில் நடந்த இத்தாக்குதல் மிகவும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. இத் தாக்குதலைப்பற்றி மேலும் விபரங்கள் அறிய உங்கள் தமிழருவியின் செய்திகளோடு இணைந்திருங்கள்.

இடைக்கால அறிக்கை இரண்டு வாரத்தில் அமைச்சரவைக்கு சமர்ப்பிக்கப்படும்

அரசியல் யாப்பின் வழிகாட்டல் குழுவின் இடைக்கால அறிக்கை இன்னமும் இரண்டு வார காலங்களில் அமைச்சரவைக்கு சமர்ப்பிக்கப்படும் என ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன குறிப்பிட்டுள்ளார். அந்த அறிக்கை கிடைக்கப்பெற்றதும் திருத்தங்களை மேற்கொள்வதா அல்லது அதனை அவ்வாறே அமல்படுத்துவதா என்பது குறித்து தீர்மானம் எடுக்கவுள்ளதாகவும் ஜனாதிபதி தெரிவித்துள்ளார். ஜனாதிபதி செயலகத்தில் ஊடகப் பிரதானிகள் மற்றும் பத்திரிகை ஆசிரியர்களுக்கும் ஜனாதிபதிக்கும் இடையிலான இன்றைய சந்திப்பின் போது, ஸ்ரீலங்காவின் அரசியல் யாப்பு உருவாக்க நடைமுறையானது, தற்போது […]

வடக்கு- கிழக்கு மக்களின் கோரிக்கைகளை நல்லாட்சி அரசு செவிமடுக்க வேண்டும்: வியாழேந்திரன்

தமது குடியிருப்பு மற்றும் வாழ்வாதார காணிகளுக்காக வீதியில் போராடிவரும் வடக்கு- கிழக்கு மக்களின் கோரிக்கைகளை நல்லாட்சி அரசாங்கம் செவிமடுக்க வேண்டும் என தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் மட்டக்களப்பு மாவட்ட நாடாளுமன்ற உறுப்பினரும் பிரதேச அபிவிருத்தி ஒருங்கிணைப்புக்குழு இணைத் தலைவர்களில் ஒருவருமான எஸ். வியாழேந்திரன் தெரிவித்துள்ளார். யுத்தத்திற்கு பின்னரான மட்டக்களப்பு மக்களின் வாழ்வாதார மற்றும் குடியிருப்பு நிலங்கள் தொடர்பான விபரங்கள் தொடர்பில், அவர் இன்று (வியாழக்கிழமை) வெளியிட்டுள்ள அறிக்கையிலேயே இவ்வாறு குறிப்பிட்டுள்ளார். […]

அரசாங்கம் இணங்கினால் மக்களது காணிகளிலிருந்து வெளியேற தயார்: இராணுவம்

இடமாற்றத்திற்கான செலவை அரசாங்கம் ஏற்றுக்கொள்ளும் பட்சத்தில், மக்களது காணிகளிலிருந்து உடனடியாக வெளியேற தயார் என இராணுவத்தினர் உறுதியளித்துள்ளதாக தமிழ்த் தேசிய கூட்டமைப்பின் நாடாளுமன்ற உறுப்பினர் எம்.ஏ.சுமந்திரன் தெரிவித்துள்ளார். வடக்கு, கிழக்கு மாகாணங்களில் படையினர் வசமுள்ள பொதுமக்களது காணிகள் குறித்து ஆராய்ந்துவரும் நாடாளுமன்ற உறுப்பினர்கள் குழுவினருக்கும் படையினருக்கும் இடையில் இன்று (வியாழக்கிழமை) கிளிநொச்சி மாவட்ட செலயகத்தில் நடைபெற்ற பேச்சுவார்த்தையை தொடர்ந்து, ஊடகங்களுக்கு கருத்து தெரிவிக்கையிலேயே சுமந்திரன் இவ்வாறு குறிப்பிட்டுள்ளார். அங்கு தொடர்ந்து […]

மீதொட்டமுல்ல பிரச்சினைக்கு அரசே பொறுப்புக்கூற வேண்டும்! – மஹிந்த அணி திட்டவட்டம்

“மீதொட்டமுல்ல குப்பைமேட்டுப் பிரச்சினைக்கு அரசே பொறுப்புகூற வேண்டும். அனர்த்தம் என்ற போர்வைக்குள் இதனைத் தள்ளிவிடாமல் முறையான தீர்வை முன்வைக்க வேண்டும்.” – இவ்வாறு மஹிந்த அணியான பொது எதிரணியின் தலைவரும் நாடாளுமன்ற உறுப்பினருமான தினேஷ் குணவர்தன தெரிவித்தார். பொரளை என்.எம்.பெரேரா கேந்திர நிலையத்தில் நேற்று நடைபெற்ற ஊடகவியலாளர் சந்திப்பில் கலந்துகொண்டு உரையாற்றியபோதே அவர் மேற்கண்டவாறு கூறினார். அவர் மேலும் தெரிவித்ததாவது:- “குப்பைமேடு சரிந்து விழுந்து அதிகளவானோர் உயிரிழந்த சம்பவம் இலங்கையிலேயே […]

காணிப் பிரச்சினையைத் தீர்ப்போர் எங்களையும் திரும்பிப் பாருங்கள்! – காணாமல் ஆக்கப்பட்டவர்களின் உறவுகள்

“காணிப் பிரச்சினைக்குத் தீர்வு காண முயற்சிக்கும் நீங்கள், காணாமல் ஆக்கப்பட்டவர்களின் பிரச்சினைக்கும் தீர்வைப் பெற்றுத் தர முயற்சியுங்கள்.” – இவ்வாறு காணாமல் ஆக்கப்பட்டவர்களின் உறவுகள் உருக்கமாக வேண்டுகோள் முன்வைத்துள்ளனர். காணாமல் ஆக்கப்பட்டவர்களை வெளிப்படுத்தவும், விடுவிக்கவும் வலியுறுத்தி அவர்களின் உறவுகள் தமிழர் தாயகமான வடக்கிலும், கிழக்கிலும் தொடர் போராட்டங்களை முன்னெடுக்கின்றனர். அந்தப் போராட்டங்கள் இரு மாதங்களை எட்டவுள்ள நிலையில் இதுவரை எந்தவிதமான தீர்வுகளும் அவர்களுக்கு வழங்கப்படவில்லை. “இராணுவம் கையகப்படுத்தியுள்ள காணிகளை விடுவிப்பதற்காக […]