திருவாரூர் அருகே ஓ.என்.ஜி.சி. பணியை தடுத்து நிறுத்திய பொதுமக்கள் புதுக்கோட்டை மாவட்டம் நெடுவாசலில் ஹைட்ரோ கார்பன் திட்டத்தை செயல்படுத்த மத்திய அரசு முயற்சி மேற்கொண்டு வருகிறது. இதற்கு எதிர்ப்பு தெரிவித்து பொதுமக்கள் தொடர்ந்து போராட்டம் நடத்தி வருகிறார்கள். இந்த நிலையில் திருவாரூர் அருகே உள்ள கேக்கரையில் ஓ.என்.ஜி.சி நிறுவனம் ஹைட்ரோ கார்பன் திட்டத்தை செயல்படுத்த முயற்சி செய்வதாக தகவல் பரவியது. இதனால் அதிர்ச்சி அடைந்த அப் பகுதி பொதுமக்கள் ஒன்று […]
தமிழ்நாடு செய்திகள்
ஜெயலலிதா சிகிச்சை பற்றி அவதூறு பிரசாரம்: ஓ.பன்னீர்செல்வத்துக்கு டி.டி.வி.தினகரன் கண்டனம்
ஜெயலலிதா சிகிச்சை பற்றி அவதூறு பிரசாரம்: ஓ.பன்னீர்செல்வத்துக்கு டி.டி.வி.தினகரன் கண்டனம் அ.தி.மு.க. துணை பொதுச் செயலாளர் டி.டி.வி. தினகரன் வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறி இருப்பதாவது:- 3 முறை முதல்- அமைச்சர் இருக்கையில் தன்னை -அமர வைத்த இயக்கம் 4-ம் முறையிலான வாய்ப்பை தனக்கே தரவில்லை என்பதற்காகவே தன்னை வாழவைத்த இயக்கத்தையே அழிப்பதற்கு கழகத்தின் எதிரிகளோடு கூடிச் சேர்ந்து, திரை மறைவில் துரோகச் சதியில் ஈடுபட்ட பன்னீர்செல்வத்தின் மொத்த முகமூடியும் முழுவதுமாக […]
ஆர்.கே.நகரில் ஜெ.தீபா போட்டி இன்று மாலை அறிவிக்கிறார்
ஆர்.கே.நகரில் ஜெ.தீபா போட்டி இன்று மாலை அறிவிக்கிறார் மறைந்த ஜெயலலிதா போட்டியிட்ட ஆர்.கே.நகர் தொகுதியில் போட்டியிடுவேன் என்று அவரது அண்ணன் மகள் ஜெ.தீபா ஏற்கனவே அறிவித்து இருந்தார். ஓ.பன்னீர்செல்வம் தலைமையிலான அணியுடன் சேர்ந்து அவர் அரசியலில் ஈடுபடுவார். அந்த அணி பலமான அணியாக உருவெடுக்கலாம் என்று எதிர்பார்க்கப்பட்டது. ஆனால் எம்.ஜி.ஆர். அம்மா தீபா பேரவை என்ற அமைப்பை தொடங்கி தீபா தனியாக செயல்பட்டு வருகிறார். கடந்த மாதம் 24-ந்தேதி ஜெயலலிதா […]
ஆர்.கே நகர் இடைத்தேர்தலால் தமிழக பட்ஜெட் தாக்கலுக்கு பிரச்சினை இல்லை
ஆர்.கே நகர் இடைத்தேர்தலால் தமிழக பட்ஜெட் தாக்கலுக்கு பிரச்சினை இல்லை தமிழ்நாடு சட்டசபையின் அடுத்த கூட்டத்தை 16-ந் தேதி (வியாழக்கிழமை) காலை 10.30 மணிக்கு தலைமைச் செயலகத்தில் உள்ள சட்டசபை மண்டபத்தில் கூடுகிறது.அன்று காலை 10.30 மணிக்கு 2017-18-ம் ஆண்டுக்கான பட்ஜெட் தாக்கல் செய்யப்படுகிறது. இந்த நிலையில் ஆர்.கே நகர் தொகுதிக்கான இடைத்தேர்தல் தேதி அறிவிக்கபட்டு உள்ளது. அடுத்தமாத ஏப்ரல் 12 ந்தேதி தேர்தல் நடக்கிறது. இன்று இதற்கான அறிவிப்பை […]
முதலமைச்சர் ஜெயலலிதாவின் மரணத்திற்கு நீதி விசாரணை வரும் வரை போராட்டம் தொடரும் – ஓ.பன்னீர்செல்வம்
முதலமைச்சர் ஜெயலலிதாவின் மரணத்திற்கு நீதி விசாரணை வரும் வரை போராட்டம் தொடரும் – ஓ.பன்னீர்செல்வம் முன்னாள் முதலமைச்சர் ஜெயலலிதாவின் மரணத்தில் பல்வேறு சந்தேகங்களும் மர்மங்களும் இருப்பதாக குற்றச்சாட்டு எழுந்துள்ள நிலையில், ஜெயலலிதா மரணம் தொடர்பாக விசாரணை நடத்தக்கோரி ஓ.பன்னீர்செல்வம் அணியினர் இன்று தமிழகம் முழுவதும் உண்ணாவிரத போராட்டத்தில் ஈடுபட்டனர். சென்னை எழும்பூர் ராஜரத்தினம் ஸ்டேடியத்தில் ஓ.பன்னீர்செல்வம் தலைமையில் உண்ணாவிரத போராட்டம் நடைபெற்றது. இதில் திரளாக கலந்துகொண்ட தொண்டர்கள் மற்றும் பொதுமக்களிடையே […]
ஊழல்- மு.க.ஸ்டாலினுக்கு அதிமுக துணைப் பொதுச் செயலாளர் டி.டி.வி.தினரகன் கண்டனம்
ஊழல்- மு.க.ஸ்டாலினுக்கு அதிமுக துணைப் பொதுச் செயலாளர் டி.டி.வி.தினரகன் கண்டனம் அ.தி.மு.க துணைப்பொதுசெயலாளர் தினகரன் இன்று வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறி இருப்பதாவது:- , ‘குற்றவாளிகளால் நடத்தப்படும் அரசு’ என்று குற்றவாளிக் கூடாரத்தின் செயல் தலைவர் மு.க.ஸ்டாலின் தொடர்ந்து விமர்சித்து வருகிறார். விஞ்ஞானத் திருடர்கள் என்று அப்போதைய நீதியரசர் சர்க்காரியாவால் விளிக்கப்பட்டவர்கள் யார் என்பதும்; எங்கே அந்த சர்க்காரியா விசாரணை அறிக்கை வழக்காக மாறிவிடுமோ என்று அஞ்சி அப்போதைய பிரதமர் இந்திரா […]
இலங்கை கடற்படையால் தமிழக மீனவர் சுட்டுக் கொல்லப்பட்டதைக் கண்டித்து ஆர்ப்பாட்டம் – தொல்.திருமாவளவன்
இலங்கை கடற்படையால் தமிழக மீனவர் சுட்டுக் கொல்லப்பட்டதைக் கண்டித்து ஆர்ப்பாட்டம் – தொல்.திருமாவளவன் இலங்கை கடற்படையால் தமிழக மீனவர் சுட்டுக்கொல்லப்பட்டதைக் கண்டித்து விடுதலை சிறுத்தை கட்சி தலைவர் தொல்.திருமாவளவன் தலைமையில் ஆர்ப்பாட்டம் நடைபெற்றது. விடுதலை சிறுத்தை கட்சி மத்திய சென்னை மாவட்டம் சார்பில் சென்னை கலெக்டர் அலுவலகம் அருகே கண்டன ஆர்ப்பாட்டம் இன்று நடந்தது. இலங்கை மீதான போர் குற்ற விசாரணைக்கு இந்திய அரசு துணை போக கூடாது என்பதை […]
உண்மையான அ.தி.மு.க. நாங்கள் தான் என்பது விரைவில் தெரிய வரும் – நத்தம் விசுவநாதன்
உண்மையான அ.தி.மு.க. நாங்கள் தான் என்பது விரைவில் தெரிய வரும் – நத்தம் விசுவநாதன் உண்மையான அ.தி.மு.க. நாங்கள்தான் என்பது விரைவில் தெரிய வரும் என்று திண்டுக்கல்லில் நடந்த போராட்டத்தில் முன்னாள் அமைச்சர் நத்தம் விசுவநாதன் பேசினார். மறைந்த முதல்வர் ஜெயலலிதா மரணத்தில் உள்ள சந்தேகங்களை நிவர்த்தி செய்ய நீதி விசாரணை நடத்த வேண்டும் என வலியுறுத்தி தமிழகம் முழுவதும் ஓ.பன்னீர்செல்வம் ஆதரவாளர்கள் மாவட்ட தலைநகரங்களில் உண்ணாவிரத போராட்டம் நடத்தி […]
கம்ப்யூட்டர் மூலம் விடைத்தாள்கள் திருத்தும் புதிய திட்டம் – சென்னை எம்.ஜி.ஆர். மருத்துவ பல்கலைக்கழகத்தில் அறிமுகம்
கம்ப்யூட்டர் மூலம் விடைத்தாள்கள் திருத்தும் புதிய திட்டம் – சென்னை எம்.ஜி.ஆர். மருத்துவ பல்கலைக்கழகத்தில் அறிமுகம் கம்ப்யூட்டர் மூலம் விடைத்தாள்கள் திருத்தும் புதிய திட்டம் பரீட்சார்த்த முறையில் எம்.ஜி.ஆர். மருத்துவ பல்கலைக்கழகத்தில் அறிமுகம் செய்யப்பட்டுள்ளது. சென்னை கிண்டியில் உள்ள தமிழ்நாடு டாக்டர் எம்.ஜி.ஆர். மருத்துவ பல்கலைக்கழகம் காலத்திற்கேற்ப புதிய மாற்றங்களை செயல் படுத்தி வருகிறது. இந்த மருத்துவ பல்கலை கழகத்தில் பல் மருத்துவம் மற்றும் எம்.சி.எச்., டி.எம். போன்ற பட்ட […]
தமிழக மீனவர்களை காக்க தொடர்ந்து அ.தி.மு.க போராடும்- டிடிவி தினகரன்
தமிழக மீனவர்களை காக்க தொடர்ந்து அ.தி.மு.க போராடும்- டிடிவி தினகரன் இந்திய கடல் எல்லையில் ஆதம்பாலம் பகுதியில் மீன்பிடித்த தமிழக மீனவர்கள் மீது இலங்கை கடற்படையினர் சரமாரியாக துப்பாக்கிச்சூடு நடத்தினர். இதில் பிரிட்ஜோ என்ற மீனவர் கழுத்தி குண்டு பாந்து சம்பவ இடத்தில் உயிரிழந்துள்ளார். மேலும் சரோன் என்ற மீனவர் படுகாயமடைந்துள்ளார். இதுகுறித்து கருத்து தெரிவித்துள்ள அதிமுக துணை பொதுச்செயலாளர் டிடிவி தினகரன், தமிழக மீனவர்கள் மீது தொடர்ந்து தாக்குதல் […]





