Sunday , October 19 2025
Home / செய்திகள் / தமிழ்நாடு செய்திகள் (page 73)

தமிழ்நாடு செய்திகள்

டெங்கு கொசு புழு உற்பத்தியாவதற்கு காரணமான பள்ளிகளுக்கு அபராதம்..!

சிவகங்கை மாவட்டம் மானாமதுரை அருகே உள்ள ராஜகம்பீரத்தில் பள்ளி மாணவனுக்கு டெங்கு காய்ச்சல் ஏற்பட்டதால், அவன் படிக்கும் பள்ளிக்குச் சென்று மாவட்ட ஆட்சியர் லதா ஆய்வு மேற்கொண்டார். அப்போது, பள்ளி கட்டிடங்களில் மழை நீர் தேங்கியிருந்ததால், பள்ளி நிர்வாகத்தை எச்சரித்ததுடன், ஒரு லட்சம் ரூபாய் அபராதம் விதிக்க ஊராட்சி ஒன்றிய ஆணையாளருக்கு ஆட்சியர் உத்தரவிட்டார். இதேபோல, நாமக்கல்லில் டெங்கு கொசு புழு உற்பத்தியாவதற்கு வசதியாக தண்ணீர் தேங்கி கிடந்த இரண்டு …

Read More »

நிலவேம்பு குடிநீர் விநியோகம் செய்ய வேண்டாம்: நடிகர் கமல்!

நிலவேம்புக் குடிநீர் அருந்துவதால் மலட்டுத் தன்மை ஏற்படலாம் என்று தகவல்கள் வெளியான நிலையில், நிலவேம்புக் குடிநீர் விநியோகிக்க வேண்டாம் என ரசிகர் மன்றத்தினருக்கு நடிகர் கமல்ஹாசன் வலியுறுத்தியுள்ளார். இதுதொடர்பாக ட்விட்டர் பக்கத்தில் கமல் வெளியிட்டுள்ள பதிவில், சரியான ஆராய்ச்சி முடிவுகள் கிடைக்கும் வரை ரசிகர் மன்றத்தினர் மக்களுக்கு நிலவேம்பு குடிநீர் விநியோகத்தில் ஈடுபட வேண்டாம் எனக் கேட்டுக் கொண்டுள்ளார். அதே நேரத்தில் டெங்கு காய்ச்சல் தடுப்பு நடவடிக்கைகள் தொடர்பான இதர …

Read More »

கிருஷ்ணகிரி அருகே டெங்கு காய்ச்சலுக்கு இளம்பெண் பலி!

கிருஷ்ணகிரி அருகே டெங்கு காய்ச்சலுக்கு இளம் பெண் பலியான சம்பவம் அப்பகுதியில் பெரும் சோகத்தை ஏற்படுத்தி உள்ளது. கிருஷ்ணகிரி மாவட்டம் மிட்டப்பள்ளி கிராமத்தை சேர்ந்தவர் சரத். இவரது மனைவி அஷ்வினி, கடந்த சில வாரங்களாக காய்ச்சலால் பாதிக்கப்பட்டு அரசு மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வந்தார். காய்ச்சல் குணமாகாததால், கடந்த 11-ம் தேதி பெங்களூரில் உள்ள தனியார் மருத்துவமனையில் சிகிச்சைக்காக அனுமதிக்கப்பட்டார். அப்போது பரிசோதனையில் டெங்கு காய்ச்சல் இருப்பதை கண்டறிந்த மருத்துவர்கள் …

Read More »

​இரட்டை இலை விவகாரம்..

இரட்டை இலைச் சின்னம் யாருக்கு என்பதை தீர்மானிப்பதற்கான விசாரணையை வரும் 23ந்தேதி மாலை 3 மணிக்கு தேர்தல் ஆணையம் ஒத்திவைத்துள்ளது. ஜெயலலிதாவின் மறைவுக்கு பின்னர் அதிமுகவில் உருவான அணிகளால் இரட்டை இலை சின்னம் முடக்கி வைக்கப்பட்டது. எதிர் எதிர் துருவங்களாக செயல்பட்ட முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமி அணியினரும், துணை முதலமைச்சர் ஓ.பன்னீர் செல்வம் அணியினரும் ஒன்றாக இணைந்து இரட்டை இலையை மீட்க முயற்சித்து வரும் நிலையில், அதிமுக அம்மா அணியின் …

Read More »

​தமிழகத்தில் டெங்குவை தொடர்ந்து பன்றிக் காய்ச்சல்..!

டெங்கு காய்ச்சலை தொடர்ந்து தற்பொழுது தமிழகத்தில் பன்றிக் காய்சலுக்கு ஒருவர் பலியான சம்பவம் மக்களிடையே அச்சத்தை ஏற்படுத்தியுள்ளது. கிருஷ்ணகிரி அருகே சின்ன தாளப்பள்ளி கிராமத்தை சேர்ந்தவர் முனிராஜ். இவர் அங்குள்ள தனியார் ஆலையில் எலட்ரீசியனாக வேலை செய்து வந்தார். கடந்த 2 வாரமாக தொடர் காய்ச்சல் மற்றும் சளித்தொல்லையால் முனிராஜ் அவதியுற்று வந்தார். இதனையடுத்து கிருஷ்ணகிரி மற்றும் பெங்களூருவில் உள்ள தனியார் மருத்துவமனைகளில் அவருக்கு சிகிச்சை அளிக்கப்பட்டது. ஆனால் காய்ச்சல் …

Read More »

தன்னை காவி என்று சொன்னவர்களுக்கு கமல் கொடுத்த பதிலடி

கமல்ஹாசன் தற்போது தீவிர அரசியலில் இறங்கிவிட்டார். எந்த ஒரு கேள்விக்கும் உடனே பதில் அளிக்கின்றார், இவருக்கு சமீப நாட்களாக கொஞ்சம் உடல்நலம் முடியாமல் ஓய்வில் இருக்கின்றார். இந்நிலையில் பிரபல வார இதழ் ஒன்றில் கேள்வியும் நானே, பதிலும் நானே என்ற பகுதியில் ‘பலரும் டெல்லி சொல்லும் உடையை நான் அணிந்திருக்கிறேன் என்று கேட்கிறார்கள். மேலும், கறுப்ப்கறுப்பு சட்டையை நீ போட்டுக்க. இப்போதைக்கு இதுவா நடிச்சிக்க’ என்று டெல்லியிலிருந்து சொல்கிறார்களாம். காந்தியைக்கூட …

Read More »

உடல் எடை குறைக்கும் அறுவை சிகிச்சையால் பெண் உயிரிழப்பு …

உடல் எடையை குறைப்பதற்காக அறுவை சிகிச்சை செய்த பெண் உயிரிழந்துள்ளார். திருவண்ணாமலையை சேர்ந்த வளர்மதி(46) என்ற பெண்ணுக்கு நேற்று இரவு அறுவை சிகிச்சை நடைபெற்றது. கிழ்பாக்கம் தனியார் மருத்துவமனையில் பெண் உயிரிழந்தது தொடர்பாக அவரது கணவர் போலீசார் புகார் அளித்துள்ளார். கணவர் அழகேசன் அளித்த புகாரை அடுத்து கிழ்பாக்கம் போலீசார் வழக்கு பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர். 150 கிலோ எடையை குறைக்க ஆகஸ்ட் 23-ம் தேதி கீழ்பாக்கம் …

Read More »

திராவிட முன்னேற்ற கழகத்தின் பக்கம் சாய்கிறதா நடிகர் சங்கம்?

ஜிஎஸ்டி வரி விதிப்பு போன்று சினிமா துறைக்கு பிரச்சனை ஏற்படும் போது தன்னை மட்டுமல்ல திமுக சட்டமன்ற உறுப்பினர் வாகை சந்திரசேகரையும் அழைக்க வேண்டும் என நடிகர் சங்கத்தின் துணை தலைவர் கருணாஸ் தெரிவித்துள்ளது சலசலப்பை ஏற்படுத்தியுள்ளது. நடிகர் சங்க பொதுக்குழுக் கூட்டத்தில் அச்சங்கத்தின் துணை தலைவர் நடிகர் கருணாஸ் பேசினார். அப்போது, தான் சட்டமன்ற உறுப்பினர் ஆனதற்கும், அத்தகைய மாயை நடந்ததற்கும் காரணம் தான் நடிகர் சங்கத்தின் துணை …

Read More »

தமிழக அரசு மீது தமிழிசை சவுந்தர்ராஜன் குற்றச்சாட்டு!

டெங்கு காய்ச்சலை தடுக்க அரசு மேற்கொண்டு வரும் நடவடிக்கை போதுமானதாக இல்லை என, பாஜக மாநில தலைவர் தமிழிசை சவுந்தர்ராஜன் புகார் தெரிவித்துள்ளார். சென்னை கீழ்ப்பாக்கம் அருகே நிலவேம்பு குடிநீர் திட்டத்தை தொடங்கி வைத்த அவர் பின்னர் செய்தியாளர்களை சந்தித்தார். அப்போது, டெங்கு காய்ச்சலை கட்டுப்படுத்த போர்க்கால நடவடிக்கைகள் எடுக்கப்பட வேண்டும் எனவும், முதல்வரின் மருத்துவ காப்பீடு திட்டத்தில் டெங்கு காய்ச்சலும் சேர்க்கப்பட வேண்டும் என்றும் கூறினார். கேரள அரசு …

Read More »

கணவர் நடராஜனுடன் சசிகலா இரண்டாவது நாளாக சந்திப்பு!

சென்னை குளோபல் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ள தனது கணவர் நடராஜனை, அதிமுக அம்மா அணியின் பொதுச் செயலாளர் சசிகலா இரண்டாவது நாளாக சந்தித்தார். சசிகலாவின் கணவர் நடராஜன் கல்லீரல், சிறுநீரகம் பாதிப்பு காரணமாக சென்னை குளோபல் மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வருகிறார். இந்நிலையில் கணவரின் உடல் நிலை கருதி சசிகலாவிற்கு 5 நாள் பரோல் வழங்கப்பட்டது. இதையடுத்து, நேற்று முன்தினம் பரப்பன அக்ரஹார சிறையிலிருந்து வெளியே வந்த அவர் நேற்று குளோபல் …

Read More »