சபாநாயகர் மீது நம்பிக்கையில்லா தீர்மான கடிதத்தை பேரவைச் செயலாளரிடம் வழங்கினேன்: ஸ்டாலின் சபாநாயகர் மீது நம்பிக்கையில்லா தீர்மானம் கொண்டு வருவதற்கான கடிதத்தை பேரவைச் செயலாளரிடம் வழங்கியதாக ஸ்டாலின் கூறினார். திமுகவின் செயல் தலைவரும், தமிழக எதிர்க்கட்சித் தலைவருமான மு.க.ஸ்டாலின், தலைமைச் செயலகத்திற்கு இன்று நேரில் சென்று, சபாநாயகர் மீது நம்பிக்கையில்லா தீர்மானம் கொண்டு வருவதற்கான கடிதத்தை பேரவைச் செயலாளரிடம் வழங்கினார். மேலும், அந்தக் கடிதத்தின் பிரதியை சட்டப்பேரவை தலைவரிடமும் வழங்கினார். …
Read More »விவசாயிகளுக்கு வறட்சி நிவாரணமாக ரூ.2247 கோடி அளித்து எடப்பாடி பழனிச்சாமி அறிவிப்பு
விவசாயிகளுக்கு வறட்சி நிவாரணமாக ரூ.2247 கோடி அளித்து எடப்பாடி பழனிச்சாமி அறிவிப்பு விவசாயிகளுக்கு உரிய நிவாரண உதவித் தொகை வழங்கிட, வருவாய் மற்றும் வேளாண் துறைகள் இணைந்து செய்த கணக்கெடுப்புப் பணிகள் தற்போது முடிக்கப்பட்டுள்ளன. இந்த கணக்கெடுப்பின்படி 32,30,191 விவசாயிகளுக்குச் சொந்தமான 50,34,237 ஏக்கர் பரப்பளவில் சாகுபடி செய்யப்பட்ட பயிர்கள் சேதமடைந்துள்ளதால் பயிர் இழப்பு ஏற்பட்டுள்ள விவசாயிகளுக்கு இடு பொருள் நிவாரண உதவித் தொகையாக 2,247 கோடி ரூபாய் வழங்கப்பட …
Read More »தமிழகம் முழுவதும் மார்ச் 1-ம் தேதி டாஸ்மாக் வழிகாட்டி, அறிவிப்புப் பலகைகளில் ஸ்டிக்கர் ஒட்டும் போராட்டம் – அன்புமணி
தமிழகம் முழுவதும் மார்ச் 1-ம் தேதி டாஸ்மாக் வழிகாட்டி, அறிவிப்புப் பலகைகளில் ஸ்டிக்கர் ஒட்டும் போராட்டம் – அன்புமணி தேசிய மற்றும் மாநில நெடுஞ்சாலைகளில் உள்ள மதுக்கடைகள் குறித்த வழிகாட்டி மற்றும் அறிவிப்புப் பலகைகள் மீது உச்ச நீதிமன்றத் தீர்ப்பை விளக்கும் ஸ்டிக்கர்கள் ஒட்டும் போராட்டத்தை தமிழகம் முழுவதும் மார்ச் 1-ம் தேதி நடத்த பாமக முடிவு செய்திருக்கிறது என்று அக்கட்சியின் இளைஞரணித் தலைவர் அன்புமணி கூறியுள்ளார். இது தொடர்பாக …
Read More »தமிழக உள்ளாட்சித் தேர்தல் மே 14-ஆம் தேதிக்குள் முடிக்க தேர்தல் ஆணையத்திற்கு சென்னை ஐகோர்ட் இடைக்கால உத்தரவு
தமிழக உள்ளாட்சித் தேர்தல் மே 14-ஆம் தேதிக்குள் முடிக்க தேர்தல் ஆணையத்திற்கு சென்னை ஐகோர்ட் இடைக்கால உத்தரவு தமிழக உள்ளாட்சித் தேர்தல் மே 14-ஆம் தேதிக்குள் நடத்தி முடிக்க வேண்டும் என்று சென்னை ஐகோர்ட் இடைக்கால உத்தரவு பிறப்பித்துள்ளது. தமிழகத்தில் வரும் மே மாதம் 14-ஆம் தேதிக்குள் உள்ளாட்சித் தேர்தலை நடத்தி முடிக்க வேண்டும் என்று மாநிலத் தேர்தல் ஆணையத்துக்கு சென்னை ஐகோர்ட் உத்தரவிட்டுள்ளது.தமிழக உள்ளாட்சி பிரதிநிதிகளின் பதவிக் காலம் …
Read More »சசிகலா அபராதம் செலுத்தாவிட்டால் மேலும் 13 மாதங்கள் சிறை தண்டனை
சசிகலா அபராதம் செலுத்தாவிட்டால் மேலும் 13 மாதங்கள் சிறை தண்டனை சொத்துக்குவிப்பு வழக்கில் பெங்களூரு, பரப்பன அக்ரஹார சிறையில் தண்டனை அனுபவித்து வரும் சசிகலா, உச்ச நீதிமன்றம் விதித்த ரூ.10 கோடி அபராதத்தை செலுத்தத் தவறினால் அவர் மேலும் 13 மாதங்கள் சிறையில் கழிக்க நேரிடும் என்று சிறை அதிகாரி கிருஷ்ண குமார் அறிக்கை ஒன்றில் தெரிவித்துள்ளார். “சசிகலா நடராஜன் ரூ.10 கோடி அபராதம் செலுத்த உச்ச நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது. …
Read More »அரசுத் திட்டங்களுக்கு குற்றவாளியான ஜெயலலிதாவின் பெயரைச் சூட்டக்கூடாது: ராமதாஸ்
அரசுத் திட்டங்களுக்கு குற்றவாளியான ஜெயலலிதாவின் பெயரைச் சூட்டக்கூடாது: ராமதாஸ் “அரசுத் திட்டங்களுக்கு குற்றவாளியான ஜெயலலிதாவின் பெயரைச் சூட்டுவதை ஏற்றுக்கொள்ள முடியாது. அம்மா உணவகம், அம்மா குடிநீர், அம்மா மருந்தகம் உள்ளிட்ட திட்டங்களின் பெயர்கள் மாற்றப்பட்டு அரசின் பெயரில் செயல்படுத்தப்பட வேண்டும்” என்று பாமக நிறுவனர் ராமதாஸ் கூறியுள்ளார். இது தொடர்பாக அவர் செவ்வாய்க்கிழமை வெளியிட்ட அறிக்கையில், “தமிழகத்தின் புதிய முதல்வராக கடந்த வாரம் பொறுப்பேற்றுக் கொண்ட எடப்பாடி பழனிச்சாமி, நேற்று …
Read More »சசிகலாவின் பினாமி முதல்வர் எடப்பாடி – தி.மு.க. செயல் தலைவர் மு.க. ஸ்டாலின்
சசிகலாவின் பினாமி முதல்வர் எடப்பாடி – தி.மு.க. செயல் தலைவர் மு.க. ஸ்டாலின் சசிகலாவின் பினாமி முதல்வர் எடப்பாடி, பெண்களை பாதுகாக்க முன்வர வேண்டும் என்று திமுக செயல் தலைவர் மு.க. ஸ்டாலின் சாடினார். பெண்கள், குழந்தைகளை பாதுகாப்பதற்கான திட்டங்கள் ஏதும் அதிமுக அரசு எடுக்கவில்லை. பினாமி முதல்வர் எடப்பாடி பழனிச்சாமி, பெண்களைக் காக்க முன்வர வேண்டும் என்று திமுக செயல் தலைவர் மு.க.ஸ்டாலின் கூறியுள்ளார். எண்ணூர் சுனாமி குடியிருப்பைச் …
Read More »நம்பிக்கை வாக்கெடுப்பின் போது நடந்த சம்பவங்கள் – ஆளுநரிடம் ஜமாலுதீன் அறிக்கை
நம்பிக்கை வாக்கெடுப்பின்போது நடந்த சம்பவங்கள் – ஆளுநரிடம் ஜமாலுதீன் அறிக்கை தமிழக சட்டசபையில் நம்பிக்கை வாக்கெடுப்பின்போது நடந்த சம்பவங்கள் குறித்து ஆளுநரிடம் சட்டப்பேரவை செயலாளர் ஜமாலுதீன் அறிக்கை அளித்துள்ளார். தமிழக சட்டசபையில் முதலமைச்சர் எடப்பாடி பழனிச்சாமி சனிக்கிழமையன்று அரசின் மீது நம்பிக்கை தீர்மானம் கொண்டு வந்தார். அப்போது ரகசிய வாக்கெடுப்பு கோரி தி.மு.க. உறுப்பினர்கள் கடும் அமளியில் ஈடுபட்டனர். சபாநாயகரின் மைக் உடைக்கப்பட்டது. மேஜை தள்ளிவிடப்பட்டது. இருக்கைகள் சேதப்படுத்தப்பட்டன. இதன் …
Read More »தலைமைச்செயலகத்தில் முதல்வராக எடப்பாடி பழனிச்சாமி பொறுப்பேற்பு
தலைமைச்செயலகத்தில் முதல்வராக எடப்பாடி பழனிச்சாமி பொறுப்பேற்பு ஜெயலலிதா பயன்படுத்திய அறைக்கு சென்று முதல்வர் எடப்பாடி பழனிச்சாமி பொறுப்பேற்றுக் கொண்டார். தமிழக முதல்வராக தலைமைச் செயலகத்தில் எடப்பாடி பழனிச்சாமி முறைப்படி பொறுப்பேற்றுக் கொண்டார். தலைமைச் செயலகத்தில் முன்னாள் முதல்வர் ஜெயலலிதா பயன்படுத்திய அறைக்கு சென்ற பழனிச்சாமி, அவரது உருவ படத்துக்கு மலர் தூவி மரியாதை செலுத்தினார். பின்னர், ஜெயலலிதா அறையில் பழனிச்சமி முதலமைச்சராக பொறுப்பேற்றுக் கொண்டார். ஜெயலலிதா அறையை ஜெயலலிதா நாற்காலியையும் …
Read More »மக்களிடம் எதிர்ப்பு அலைவீசுவதால் இடைத்தேர்தலை நடத்தினால், வெற்றி பெற இயலுமா? அ.தி.மு.க. மூத்த தலைவர்கள்
மக்களிடம் எதிர்ப்பு அலைவீசுவதால் இடைத்தேர்தலை நடத்தினால், வெற்றி பெற இயலுமா? அ.தி.மு.க. மூத்த தலைவர்கள் மக்களிடம் எதிர்ப்பு அலைவீசுவதால் இடைத்தேர்தலை நடத்தினால், வெற்றி பெற இயலுமா என்று அ.தி.மு.க. மூத்த தலைவர்கள் யோசிக்கிறார்கள். அ.தி.மு.க. எம்.எல்.ஏ.க்கள் 134 பேரில் எடப்பாடி பழனிச்சாமி தலைமையிலான அணியில் 122 பேர் உள்ளனர். ஓ.பன்னீர்செல்வம் தலைமையிலான அ.தி.மு.க. அணியில் 11 எம்.எல்.ஏ.க்கள் இருக்கிறார்கள். தமிழக சட்டசபையில் நேற்று முன்தினம் எடப்பாடி பழனிச்சாமி தலைமையிலான அரசு …
Read More »