தி.மு.க. எம்.எல்.ஏ.க்கள் தாக்கப்பட்டது குறித்து மு.க. ஸ்டாலின் ஆளுநரிடம் முறையீடு சட்டசபையில் தாக்கப்பட்ட எதிர்க்கட்சி தலைவர் மு.க. ஸ்டாலின் ஆளுநரை சந்தித்தார். அப்போது தி.மு.க. எம்.எல்.ஏ.க்கள் தாக்கப்பட்டது குறித்து முறையீட்டார். தமிழக சட்டசபையில் இன்று முதல்வர் எடப்பானி பழனிச்சாமி அரசின் மீது நம்பிக்கை வாக்கெடுப்பு நடைபெற்றது. எதிர்கட்சிகள் அனைத்தும் ரகசிய வாக்கெடுப்பு நடத்த வேண்டும் என்று கோரிக்கை விடுத்தது. ஆனால் சபாநாயகர் அதை நிராகரித்துவிட்டார். இதனால் சபையில் அமளி ஏற்பட்டது. […]
தமிழ்நாடு செய்திகள்
அதிமுக எம்.எல்.ஏக்களிடம் தனியாக சிக்கியுள்ள 11 ஓ.பி.எஸ். எம்.எல்.ஏக்கள்
அதிமுக எம்.எல்.ஏக்களிடம் தனியாக சிக்கியுள்ள 11 ஓ.பி.எஸ். எம்.எல்.ஏக்கள் சட்டசபைக்குள் தற்போது திமுக, காங்கிரஸ் எம்.எல்.ஏக்கள் யாரும் இல்லை. அதிமுக எம்.எல்.ஏக்களும், ஓ.பி.எஸ் அணியைச் சேர்ந்த 11 பேரும் மட்டுமே உள்ளனர். திமுகவினரையே குண்டுக்கட்டாய் தூக்கிப் போட்டு விட்டது போலீஸ். ஸ்டாலின் உள்ளிட்ட பலரும் தாக்கப்பட்டுள்ளனர். சிலருக்கு ரத்தக் காயமும் ஏற்பட்டுள்ளது. ஸ்டாலின் சட்டை கிழிந்து போய் விட்டது. ஷூ காலால் பலரை மிதித்துள்ளனர். இந்த நிலையில் சட்டசபைக்குள் தற்போது […]
சட்டசபையில் நானும் திமுக எம்எல்ஏக்களும் தாக்கப்பட்டோம் ஆளுநரிடம் புகார் – ஸ்டாலின்
சட்டசபையில் நானும் திமுக எம்எல்ஏக்களும் தாக்கப்பட்டோம் ஆளுநரிடம் புகார் – ஸ்டாலின் சட்டசபையில் நானும் திமுக எம்எல்ஏக்களும் தாக்கப்பட்டோம். எங்களை அடித்து, உதைத்து சட்டசபையில் இருந்து வெளியேற்றினார்கள். இது குறித்து ஆளுநரிடம் நேரில் சந்தித்து புகார் தர உள்ளோம் என எதிர்க் கட்சித் தலைவர் ஸ்டாலின் தெரிவித்துள்ளார். சட்டசபையில் இருந்து சட்டை கிழிக்கப்பட்ட நிலையில் வெளியே வந்த அவர் நிருபர்களிடம் பேசுகையில், ஜனநாகய முறையில் போராட்டம் நடத்திய எங்களை தாக்கியுள்ளனர் […]
சட்டசபைக்குள் மிகப் பெரிய அமளியின்போது குண்டுக்கட்டாக தூக்கி வெளியேற்றப்பட்ட ஸ்டாலின்
சட்டசபைக்குள் மிகப் பெரிய அமளியின்போது குண்டுக்கட்டாக தூக்கி வெளியேற்றப்பட்ட ஸ்டாலின் சட்டசபைக்குள் நடந்த மிகப் பெரிய அமளியின்போது குண்டுக்கட்டாக தூக்கி வெளியேற்றப்பட்ட ஸ்டாலின் தனது சட்டை கிழிந்த நிலையில் வெளியே வந்தார். சட்டசபை வளாகத்திற்குள் பேட்டி கொடுத்த அவர் பின்னர் கார் மூலமாக ஆளுநர் மாளிகைக்குப் புறப்பட்டார். வெளியே மக்கள் கூடியிருந்ததைப் பார்த்த அவர் காரை விட்டு டக்கென இறங்கினார். பின்னர் கிழிந்த சட்டையை திறந்து காட்டியபடி மக்களிடம், உள்ளே […]
நம்பிக்கை வாக்கெடுப்பில் முதல்வர் எடப்பாடி பழனிச்சாமி பெரும்பான்மையை நிரூபித்து வெற்றி – சபாநாயகர் அறிவிப்பு
நம்பிக்கை வாக்கெடுப்பில் முதல்வர் எடப்பாடி பழனிச்சாமி பெரும்பான்மையை நிரூபித்து வெற்றி – சபாநாயகர் அறிவிப்பு சட்டசபையில் நம்பிக்கை வாக்கெடுப்பில் முதல்வர் எடப்பாடி பழனிச்சாமி பெரும்பான்மையை நிரூபித்து வெற்றி பெற்றதாக சபாநாயகர் அறிவித்துள்ளார். தமிழக சட்டசபையில் எதிர்க்கட்சிகள் இல்லாமல் இன்று நடைபெற்ற நம்பிக்கை வாக்கெடுப்பில் முதல்வர் எடப்பாடி பழனிச்சாமி வெற்றி பெற்றதாக சபாநாயகர் அறிவித்துள்ளார். முதல்வராக பதவியேற்ற எடப்பாடி பழனிச்சாமி இன்று காலை சட்டசபையில் நம்பிக்கை கோரும் தீர்மானத்தை முன்மொழிந்தார். ஆனால் […]
திமுக எம்.எல்.ஏ.க்கள் குண்டுக்கட்டாக வெளியேற்றம் !
திமுக எம்.எல்.ஏ.க்கள் குண்டுக்கட்டாக வெளியேற்றம் ! சபை ஒத்தி வைக்கப்பட்ட இடைவெளியில், ஒவ்வொரு திமுக எம்.எல்.ஏக்களாக குண்டுகட்டாக காவலர்கள் வெளியேற்றனர். இதை கண்டித்து மு.க.ஸ்டாலின் தரையில் அமர்ந்து தர்ணாவில் ஈடுபட்டார். அப்போது தாக்கப்பட்டார். நம்பிக்கை வாக்கெடுப்புக்கு திமுகவினர் இடையூறு செய்ததாக குற்றம்சாட்டி அக்கட்சி எம்.எல்.ஏக்களை கூண்டோடு வெளியேற்ற சபாநாயகர் உத்தரவிட்டார். ஆனால் வெளியேற மறுத்த திமுகவினரால் தள்ளுமுள்ளு ஏற்பட்டது. இதையடுத்து சபையை ஒத்தி வைத்துவிட்டு படிப்படியாக அவர்கள் வெளியேற்றப்பட்டனர். எடப்பாடி […]
தி.மு.க.வினரை வெளியேற்ற முடியாமல் சட்டப்பேரவை 3 மணி வரை ஒத்திவைப்பு
தி.மு.க.வினரை வெளியேற்ற முடியாமல் சட்டப்பேரவை 3 மணி வரை ஒத்திவைப்பு அவை நடவடிக்கைகளுக்கு குந்தகம் விளைவித்ததால் பேரவையிலிருந்து திமுகவினரை வெளியேற்ற வேண்டும் என்று சபாநாயகர் உத்தரவிட்டார். திமுகவினரை வெளியேற்ற முடியாமல் அவைக்காவலர்கள் திணறினர். மீண்டும் அமளி ஏற்பட்டதால் சட்டப்பேரவை 3 மணி வரை ஒத்திவைக்கப்பட்டது. சட்டப்பேரவையில் இன்று பலத்த அமளிக்கிடையே நம்பிக்கை வாக்கெடுப்பு தீர்மானத்தை எடப்பாடி பழனிசாமி முன்மொழிந்தார். ரகசிய வாக்கெடுப்பு நடத்த வேண்டும் என்று பன்னீர்செல்வம் அணி எம்.எல்.ஏக்கள் […]
அதிமுக எம்எல்ஏக்கள் தங்கியிருந்த கூவத்தூர் விடுதி திடீர் மூடல் – நிர்வாகம் அறிவிப்பு
அதிமுக எம்எல்ஏக்கள் தங்கியிருந்த கூவத்தூர் விடுதி திடீர் மூடல் – நிர்வாகம் அறிவிப்பு அதிமுக எம்எல்ஏக்கள் 11 நாட்கள் தங்கியிருந்த கூவத்தூர் விடுதியை சில பராமரிப்புப் பணிகளுக்காக மூடுவதாக நிர்வாகம் அறிவித்துள்ளது. அதிமுக எம்எல்ஏக்களிடம் ஆதரவு பெறுவதற்காக, காஞ்சிபுரம் மாவட்டம் கல்பாக்கம் அடுத்த கூவத்தூரில் உள்ள தனியார் சொகுசு விடுதியில் சசிகலா தரப்பு எம்எல்ஏக் கள் கடந்த 8-ம் தேதி இரவு முதல் பாதுகாப்புடன் தங்க வைக்கப்பட்டனர். அதிமுகவில் நடைபெற்று […]
சட்டப்பேரவையில் நடைபெற்ற வன்முறைகள் கண்டிக்கத்தக்கவை – பாமக நிறுவனர் ராமதாஸ்
சட்டப்பேரவையில் நடைபெற்ற வன்முறைகள் கண்டிக்கத்தக்கவை – பாமக நிறுவனர் ராமதாஸ் சட்டப்பேரவையில் நடைபெற்ற வன்முறைகள் கண்டிக்கத்தக்கவை என்று பாமக நிறுவனர் ராமதாஸ் கூறியுள்ளார். இது தொடர்பாக இன்று அவர் வெளியிட்ட அறிக்கையில், ”முதல்வர் எடப்பாடி பழனிசாமி தலைமையிலான அதிமுக அரசு மீது நம்பிக்கை வாக்கெடுப்பு கோருவதற்காக இன்று கூடிய சட்டப்பேரவையில் நடைபெற்ற வன்முறைகள் கண்டிக்கத்தக்கவையாகும். ஜனநாயகத்தைக் காப்பாற்ற வேண்டிய சட்டப்பேரவை உறுப்பினர்களின் இந்த செயல், அவர்களை வாக்களித்து தேர்ந்தெடுத்த வாக்காளப் […]
எனக்கு நேர்ந்த கொடுமையை எங்குபோய் சொல்வது – சபாநாயகர் வி.பி.தனபால்
எனக்கு நேர்ந்த கொடுமையை எங்குபோய் சொல்வது – சபாநாயகர் வி.பி.தனபால் எதிர்க்கட்சிகளின் அமளி காரணமாக ஒத்திவைக்கப்பட்ட அவை சரியாக 1 மணிக்கு மீண்டும் கூடியது. அவை கூடியபோது பேசிய சபாநாயகர் வி.பி.தனபால், “எனக்கு நேர்ந்த கொடுமையை எங்குபோய் சொல்வது. சட்டப்பேரவை விதிகளுக்கு உட்பட்டுத்தானே நான் அவையை நடத்த முடியும்” என்றார். அவையில் மீண்டும் பேசிய ஸ்டாலின், சட்டப்பேரவையின் பல்வேறு விதிகளை சுட்டிக்காட்டி ரகசிய வாக்கெடுப்பு நடத்த வேண்டும்” என்றார். முன்னதாக, […]





