Saturday , June 28 2025
Home / தமிழ்மாறன் (page 29)

தமிழ்மாறன்

கிழக்கு மாகாண சபையை தமிழ் மக்கள் கைப்பற்றவேண்டும்: கருணா

அனைத்து தமிழ் மக்களும் அணிதிரண்டு கிழக்கு மாகாண சபையைக் கைப்பற்றவேண்டும் என தமிழர் ஜக்கிய சுதந்திர முன்னணியின் தலைவர் கருணா தெரிவித்தார். தமிழர் ஜக்கிய சுதந்திர முன்னணிக் கட்சியின் மத்திய குழுக் கூட்டம் நேற்று (சனிக்கிழமை) மட்டக்களப்பு கல்லடியில் உள்ள கட்சித் தலைமையத்தில் இடம்பெற்றது. இதன் போது ஊடகங்களுக்குக் கருத்து தெரிவிக்கையிலேயே கருணா இவ்வாறு தெரிவித்தார். இது குறித்து அவர் மேலும் தெரிவிக்கையில், ”தமிழ் மக்கள் அரசியல் விழிப்படையவேண்டும். எங்களுடைய …

Read More »

பளை பிரதேசக் காடுகளில் ஆபத்தான வெடிபொருட்கள்!

கிளிநொச்சி, பச்சிலைப்பள்ளி பிரதேச செயலக பிரிவிலுள்ள காடுகளில் ஆபத்தான வெடிபொருட்கள் காணப்படுவதாக வன வளப் பாதுகாப்பு அதிகாரிகள் தெரிவித்துள்ளனர். தங்களது பிரதேச எல்லைக்குட்பட்ட காடுகளில் பரிசோதனைக்காகச் சென்ற போதே அங்கு ஆபத்தான வெடிபொருட்கள் காணப்படுவதனை அவதானித்துள்ளனர். குறித்த பகுதிகளில் வெடிக்காத நிலையில் காணப்படும் வெடிபொருட்கள் மனிதர்களுக்கும், விலங்குகளுக்கும் எவ்வேளையிலும் ஆபத்தை ஏற்படுத்தலாம் எனவும் அவர்கள் தெரிவித்துள்ளனர். எனவே உரிய தரப்பினர் இவற்றை அடையாளம் கண்டு, அவற்றை அகற்றுவதற்கான நடவடிக்கைகளை எடுக்கவேண்டும் …

Read More »

யுத்தம் முடிவடைந்தும் மக்கள் பின்தங்கிய நிலையிலேயே உள்ளனர்: மகேஸ்வரன்

மட்டு.மாவட்டத்தில் யுத்தத்தினால் பாதிக்கப்பட்ட பிரதேசங்கள் எவ்வித அபிருத்தியும் அடையாது இன்னமும் பின்தங்கிய நிலையிலேயே உள்ளது என ஜக்கிய தேசிய கட்சி மட்டு.அமைப்பாளர் வி.மகேஸ்வரன் தெரிவித்தார். ஜக்கிய தேசிய கட்சியின் மட்டக்களப்பு மாவட்ட தலைமைக் காரியாலயம் கல்லடியில் இன்று (ஞாயிற்றுக்கிழமை) திறந்து வைக்கப்பட்டது. இந்நிகழ்வில் கலந்து கொண்டு உரையாற்றுகையிலேயே இதனைத் தெரிவித்தார். இது குறித்து அவர் மேலும் தெரிவிக்கையில், ”இந்த மாவட்டத்தில் யுத்தத்தினால் பாதிக்கப்பட்ட மக்களின் பிரதேசங்கள் எவ்வித அபிருத்தியும் அடையாது …

Read More »

ஹஜ் யாத்திரிகர்கள் விடுமுறை பெறுவதில் இருந்த சிக்கலுக்கு தீர்வு: நஸீர் அஹமட்

கிழக்கு மாகாண ஆசிரியர்கள் மற்றும் அரச உத்தியோகத்தர்கள் ஹஜ் யாத்திரை செல்வதற்காக விடுமுறை பெறுவதில் இருந்த சிக்கலுக்கு தீர்வு காணப்பட்டுள்ளதாக கிழக்கு மாகாண முதலமைச்சர் செய்னுலாப்தீன் நஸீர் அஹமட் இன்று (ஞாயிற்றுக்கிழமை) தெரிவித்தார். இது தொடர்பாக கிழக்கு மாகாண ஆளுநர் ரோஹித்த போகொல்லாகமவுடன் தான் பிரத்தியேகமான பேச்சுவார்த்தை நடத்தியதன் பயனாக இந்த விவகாரத்திற்கு சுமுகமான தீர்வைக் காண ஆளுநர் உறுதியளித்துள்ளதாக முதலமைச்சர் மேலும் தெரிவித்தார். கிழக்கு மாகாண ஆசிரியர்கள் மற்றும் …

Read More »

நீதியின் அடிப்படையிலேயே உரிமைகளைப் பெற வேண்டும்: இரா.சம்பந்தன்

தமிழர்கள் ஆகிய நாம் அநீதியாக எதையும் கேட்காது நீதியின் அடிப்படையில் எமது உரிமைகளைப் பெற்றுக்கொள்ள வேண்டும் என தமிழ் தேசிய கூட்டமைப்பின் தலைவரும், எதிர்க்கட்சி தலைவருமான இரா.சம்பந்தன் வேண்டுகோள் விடுத்துள்ளார். யாழ். ரில்கோ விருந்தினர் விடுதியில் இடம்பெற்ற தமிழாராய்ச்சி மாநாட்டின் இரண்டாம் நாள் நிகழ்வில் அதிதியாக கலந்துகொண்டு உரையாற்றும் போதே இதனைக் குறிப்பிட்டுள்ளார். இது குறித்து அவர் மேலும் தெரிவிக்கையில், “நாம் அனைவரும் தமிழர்கள் என்ற வகையில் ஒரு குடும்பத்தினைச் …

Read More »

மக்கள் சுதந்திரமாக செயற்படும் நிலைமையினை நல்லாட்சியே உருவாக்கியது: ரணில்

கடந்த காலங்களைப் போல் அல்லாது தற்போது மக்கள் சுதந்திரமாக செயல்படும் நிலையை உருவாக்கியது நல்லாட்சி அரசாங்கமே என பிரதமர் ரணில் விக்கிரமசிங்க தெரிவித்தார். ஹற்றன் நகரில் பிரதமர் ரணில் விக்ரமசிங்கவின் அரசியல் பிரவேசத்தின் 40 ஆண்டு நாடாளுமன்ற நிறைவையொட்டி இடம்பெற்ற வரவேற்பு நிகழ்வில் கலந்து கொண்டு உரையாற்றுகையிலேயே இதனைத் தெரிவித்தார். இது குறித்து அவர் மேலும் தெரிவிக்கையில், ”இந்த நாட்டில் நாம் அனைவரும் ஒன்றினணந்து நாட்டின் ஜனாதிபதியான மைத்திரிபால சிறிசேனவை …

Read More »

2050-ம் ஆண்டில் கண் பார்வையற்றோர் எண்ணிக்கை 11½ கோடியாக உயரும்: ஆய்வில் தகவல்

2050-ம் ஆண்டு சர்வதேச அளவில் கண் பார்வையற்றோரின் எண்ணிக்கை 11 கோடியே 50 லட்சம் ஆக அதிகரிக்கும் என்று ஆய்வில் தெரியவந்துள்ளது. சர்வதேச அளவில் தற்போது 3 கோடியே 60 லட்சம் கண் பார்வையற்றோர் உள்ளனர். இந்த நிலையில் 2050-ம் ஆண்டில் அவர்களது எண்ணிக்கை 11 கோடியே 50 லட்சம் ஆக உயரும் அபாயம் உள்ளது. இங்கிலாந்தில் உள்ள ஏஞ்சிலியா ருக்சின் பல்கலைக் கழகத்தை சேர்ந்த நிபுணர்கள் சர்வதேச அளவில் …

Read More »

விசா விதிகள் தளர்வு: புதிய குடியுரிமை சட்டத்தின் மூலம் படித்த இந்தியர்களுக்கு டிரம்ப் சலுகை

அமெரிக்க அதிபர் டொனால்டு டிரம்ப் ‘எச் 1-பி’ விசா மீதான கட்டுப்பாடுகளை மாற்றி அமைத்ததால், புதிய குடியுரிமை சட்டத்தின் மூலம் படித்த இந்தியர்களுக்கு சலுகைகள் கிடைக்கும். அமெரிக்க அதிபராக டொனால்டு டிரம்ப் பதவி ஏற்ற பிறகு ‘எச்1பி’ விசாவில் அதிரடியாக மாற்றம் கொண்டுவந்தார். அதன் மூலம் அமெரிக்காவுக்கு பணிக்கு செல்வோர் பல கட்டுப்பாடுகளை எதிர்கொள்ள வேண்டியுள்ளது. இந்த நிலையில் ‘ரெய்ஸ்’ என்ற பெயரில் சீரமைக்கப்பட்ட அமெரிக்க புதிய குடியுரிமை சட்டம் …

Read More »

யாழ். வன்முறைகளுக்கு வடக்கு மாகாண சபையும் பொறுப்பு! – தவராசா

யாழ்.நகரில் அண்மைக்காலமாக அதிகரித்து வரும் அசம்பாவிதங்களுக்கு வடக்கு மாகாண சபையும் பொறுப்புக் கூற வேண்டும் என வடக்கு மாகாண சபையின் எதிர்க்கட்சித் தலைவர் சி.தவராசா அறிக்கை ஒன்றின் ஊடாக தெரிவித்துள்ளார். ஒரு சில நபர்களின் வன்முறைச் செயற்பாட்டினை வைத்துக் கொண்டு யாழ்ப்பாண மக்கள் வன்முறையை நோக்கிச் செல்கிறார்கள் என தெற்கில் பிரசாரம் முடுக்கி விடப்பட்டுள்ளதாகவும் அவர் கூறினார். அதே போல் புனர்வாழ்வு பெற்ற ஏறத்தாழ பன்னீராயிரம் முன்னாள் விடுதலைப் புலிப் …

Read More »

அரசாங்கத்தில் புயலை கிளப்பியுள்ள அமைச்சர் ரவி விவகாரம்!

மத்திய வங்கியின் முறிகள் விநியோகத்தில் குற்றஞ்சாட்டப்பட்டுள்ள அர்ஜூன் அலோசியஸிற்கும் வெளிவிவகார அமைச்சர் ரவி கருணாநாயக்கவிற்கும் நெருங்கிய தொடர்புகள் காணப்படுவதாக தெரிவிக்கப்படுகின்றமை, அரசாங்கத்தில் பாரிய சர்ச்சைகளை தோற்றுவித்துள்ளது. இந்நிலையில், இப்பிரச்சினை தொடர்பாக ஜனாதிபதி மைத்திரியின் கவனத்திற்கு கொண்டுசெல்லப்பட்டுள்ளது. அமைச்சர் ரவியை பதவி நீக்குவது அல்லது உரிய நடவடிக்கை எடுப்பது தொடர்பாக, ஸ்ரீலங்கா சுதந்திரக் கட்சியின் சில உறுப்பினர்கள் ஜனாதிபதியுடன் ஆலோசனை நடத்தியதாக தகவல்கள் வெளியாகியுள்ளன. அவ்வாறாறில்லாவிட்டால், அமைச்சருக்கெதிரான நம்பிக்கையில்லா பிரேரணைக்கு ஆதரவளிக்க …

Read More »