இராணுவத்தின் பாலியல் முகாம்களில் தமிழ் பெண்கள் ஸ்ரீலங்கா இராணுவம் தமிழ் பெண்களை பாலியல் அடிமைகளாக தடுத்து வைத்திருந்ததுடன், பாலியல் முகாம்களையும் வைத்திருந்ததாக அதிர்ச்சி அளிக்கும் தகவல்கள் அடங்கிய அறிக்கையொன்று ஐக்கிய நாடுகள் சபையிடம் கையளிக்கப்பட்டுள்ளது. இந்த முகாம்களை நடத்தியது மற்றும் ஸ்ரீலங்காவில் தொடர்ச்சியாக இடம்பெற்றுவரும் பாலியல் வன்கொடுமைகளுடன் தொடர்புடையதாக ஸ்ரீலங்கா இராணுவத்தின் உயர் அதிகாரிகள் உட்பட ஆறு பேரின் விபரங்களையும் இரகசிய அறிக்கையொன்றின் ஊடாக ஐ.ரி.ஜே.பி என்ற சர்வதேச உண்மைக்கும் […]
Author: தமிழ்மாறன்
அரசியலமைப்பு பணிகள் மீள ஆரம்பம் – பிரதமர் ரணில்
அரசியலமைப்பு பணிகள் மீள ஆரம்பம் – பிரதமர் ரணில் இடைநிறுத்தப்பட்டிருந்த புதிய அரசியல் யாப்பு பணிகள் இன்றைய தினம் மீள ஆரம்பிக்கப்படவுள்ளன. இதன்படி அரசியலமைப்பிற்கான பிரதான வழிநடத்தல் குழு பிரதமர் ரணில் விக்கரமசிங்க தலைமையில் இன்று கூடவுள்ளது. புதிய அரசியலமைப்பை தயாரிக்கும் பணிகள் ஆரம்பிக்கும் நோக்கில் முழு நாடாளுமன்றமும் அரசியலமைப்பு நிர்ணயச் சபையாக மாற்றப்பட்டது. இதன்பிரகாரம் அரசியலமைப்பை தயாரிப்பதற்காக பிரதான வழிநடத்தல் குழு நிறுவப்பட்டதோடு அதன் கீழ் 6 உப […]
ஐ.நா.ஆணையாளரின் அறிக்கை மிகக் காட்டமாகவே வெளிவரும்?
ஐ.நா.ஆணையாளரின் அறிக்கை மிகக் காட்டமாகவே வெளிவரும்? ஐக்கிய நாடுகளின் மனித உரிமைப் பேரவையின் இம்முறை நடைபெறும் கூட்டத் தொடரில் ஸ்ரீலங்கா தொடர்பான அறிக்கை மிகக் காட்டமானதாகவும், எச்சரிக்கை மிகுந்ததாகவும் அமையும் என ஜெனிவாத் தகவல்கள் தெரிவிக்கின்றன. ஐ.நா. மனித உரிமைகள் சபையின் 34ஆவது அமர்வு எதிர்வரும் 27ஆம் திகதி ஆரம்பமாகி அடுத்த மாதம் 24ஆம் திகதி வரையில் நடைபெறவுள்ளது. அமர்வின் முதல் நாளில் 27ஆம் திகதி ஐ.நா. மனித உரிமைகள் […]
பிள்ளையான் உள்ளிட்ட நால்வருக்கு தொடர்ந்தும் விளக்கமறியல்
பிள்ளையான் உள்ளிட்ட நால்வருக்கு தொடர்ந்தும் விளக்கமறியல் தமிழ் தேசியக் கூட்டமைப்பின் முன்னாள் நாடாளுமன்ற உறுப்பினர் ஜோசப் பரராஜசிங்கத்தின் படுகொலை தொடர்பில் கைதுசெய்யப்பட்டு விளக்கமறியலில் வைக்கப்பட்டுள்ள கிழக்கு மாகாண முன்னாள் முதலமைச்சரான பிள்ளையான் உள்ளிட்ட நால்வரை, எதிர்வரும் மார்ச் மாதம் 6ஆம் திகதிவரை தொடர்ந்தும் விளக்கமறியலில் வைக்குமாறு மட்டக்களப்பு நீதவான் நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது. குறித்த வழக்கு இன்று (திங்கட்கிழமை) விசாரணைக்கு எடுத்துக்கொள்ளப்பட்டபோது நீதவான் எம்.கணேசராஜா இவ் உத்தரவை பிறப்பித்துள்ளார். கொலைச் சந்தேகநபர்களான […]
எமது இனத்துக்கான எதிர்கால அடையாளமாக கல்வி மாத்திரமே உள்ளது – பா.டெனிஸ்வரன்
எமது இனத்துக்கான எதிர்கால அடையாளமாக கல்வி மாத்திரமே உள்ளது – பா.டெனிஸ்வரன் எமது இனத்துக்கான எதிர்கால அடையாளமாக கல்வி மாத்திரமே உள்ளது. எனவே வறுமையை காரணமாக காட்டி கல்வியை இழந்துவிடக்கூடாது என்று வடக்கு மாகாண போக்குவரத்து அமைச்சர் பா.டெனிஸ்வரன் தெரிவித்தார். மன்னார் கல்வி வலயத்திற்குட்பட்ட பேசாலை சென் மேரிஸ் வித்தியாலயத்தின் 2017 ஆம் ஆண்டிற்கான வருடாந்த இல்ல மெய்வல்லுனர் திறனாய்வு போட்டிகள் நேற்று (ஞாயிற்றுக்கிழமை) பாடசாலை மைதானத்தில் நடைபெற்றது. இந்நிகழ்வில் […]
போராட்டத்திற்கு ஒத்துழைப்பு தாருங்கள் மக்கள் வேண்டுகோள்
போராட்டத்திற்கு ஒத்துழைப்பு தாருங்கள் மக்கள் வேண்டுகோள் கேப்பாபுலவு மக்களின் தொடர் போராட்டம் தீர்வின்றிய நிலையில் இன்று 21 ஆவது நாளாக முன்னெடுக்கப்பட்டுள்ளது. அந்த வகையில் கோப்பாபுலவு கிராம உத்தியோகத்தர் பிரிவில் பிலவுகுடியிருப்பு என்ற கிராமத்தில் விமானப் படையினரால் கையகப்படுத்தப்பட்டிருந்த 84 குடும்பங்களுக்கு சொந்தமான 20 க்கும் அதிகமான ஏக்கர் காணி அண்மையில் விடுவிக்கப்பட்டிருந்தது. தீர்வின்றிய நிலையில் பல்வேறு அச்சுறுத்தல்களுக்கு மத்தியில் போராடிக்கொண்டிருக்கும் தமக்கு அனைத்து தரப்பினரும் தொடர்ச்சியான ஒத்துழைப்பு வழங்குமாறும், […]
காணாமல் ஆக்கப்பட்டோரின் உறவினர்கள் செல்வம் அடைக்கலநாதனை சந்திப்பு
காணாமல் ஆக்கப்பட்டோரின் உறவினர்கள் செல்வம் அடைக்கலநாதனை சந்திப்பு காணாமல் ஆக்கப்பட்டோரின் உறவினர்கள், வன்னி மாவட்ட நாடாளுமன்ற உறுப்பினரும் குழுக்களின் பிரதி தலைவருமான செல்வம் அடைக்கலநாதனை சந்தித்து கலந்துரையாடியுள்ளனர். வவுனியா சுத்தானந்த இந்து இளைஞர் சங்க மண்டபத்தில் நேற்று (ஞாயிற்றுக்கிழமை) மாலை இடம்பெற்ற இச் சந்திப்பில் காணாமல் ஆக்கப்பட்டோரின் நிலைமைகள் தொடர்பில் அரசுக்கு அழுத்தம் கொடுக்கப்படவேண்டும் எனவும் தமது குடும்ப நிலைமைகள் மற்றும் வாழ்வாதார உதவிகளின் தேவைகள் தொடர்பாகவும் எடுத்துரைத்திருந்ததுடன் தமது […]
கீத் நோயாரின் கடத்தலுடன் கோட்டபாயவுக்கு தொடர்பு
கீத் நோயாரின் கடத்தலுடன் கோட்டபாயவுக்கு தொடர்பு ஊடகவியலாளர் கீத் நோயார் கடத்தப்பட்ட சம்பவத்துடன், முன்னாள் பாதுகாப்புச் செயலாளர் கோட்டபாய ராஜபக்ச தொடர்புபட்டுள்ளதாகஇ குற்றப் புலனாய்வுப் பிரிவினர் தெரிவித்துள்ளனர். குற்றப் புலனாய்வு பிரிவினர் இந்த தகவலை நேற்றைய கல்கிஸை நீதிமன்றத்தில் தெரிவித்துள்ளனர். 2008 ஆம் ஆண்டு மே 22 ஆம் திகதி இரவு கடத்தப்பட்ட கீத் நோயார் தொம்பேயில் உள்ள இராணுவ இரகசிய முகாமுக்கு கொண்டு செல்லப்பட்டு சித்திரவதை செய்யப்பட்டார். எனினும், […]
பரவிப்பாஞ்சானில் இராணுவத்தின் அச்சுறுத்தல் மத்தியிலும் தொடரும் நிலமீட்பு போராட்டம்
பரவிப்பாஞ்சானில் இராணுவத்தின் அச்சுறுத்தல் மத்தியிலும் தொடரும் நிலமீட்பு போராட்டம் கிளிநொச்சி – பரவிபாஞ்சான் பகுதியில் இராணுவத்திடமுள்ள தமது காணிகளை விடுவிக்குமாறு கோரி, இன்று முதல் தொடர் போராட்டத்தில் ஈடுபட்டுவரும் மக்களை இராணுவத்தினர் புகைப்படம் எடுத்ததுடன், அச்சுறுத்தலும் விடுத்துள்ளது. பரவிப்பாஞ்சான் இராணுவ முகாமிற்கு முன்பாக இன்று காலை முதல் பொதுமக்கள் தொடர் போராட்டத்தை ஆரம்பித்துள்ளனர். கிளிநொச்சி பரவிப்பாஞ்சான் இராணுவ முகாமிற்காக, கடந்த ஏழு வருடங்களாக கையகப்படுத்தப்பட்டிருக்கும் தமது காணிகளை விடுவிக்குமாறு வலியுறுத்தி […]
தமிழ் மக்களுக்குள் மீண்டும் பிளவை ஏற்படுத்த முயற்சி – கருணாகரம்
தமிழ் மக்களுக்குள் மீண்டும் பிளவை ஏற்படுத்த முயற்சி – கருணாகரம் பிரதமர் ரணில் விக்ரமசிங்க தமிழ் மக்களுக்குள் மீண்டும் பிளவுகளை ஏற்படுத்த முயற்சிக்கின்றாரா என்கின்ற நியாயமான சந்தேகம் எழுந்துள்ளதாக கிழக்கு மாகாண சபை உறுப்பினரும் நாடாளுமன்ற முன்னாள் உறுப்பினருமான கோவிந்தன் கருணாகரம் தெரிவித்துள்ளார். மட்டக்களப்பு இந்து கல்லூரியின் வருடாந்த இல்ல மெய்வல்லுனர் போட்டியில் பிரதம அதிதியாக கலந்துகொண்டு உரையாற்றும்போதே அவர் இவ்வாறு தெரிவித்தார். அங்கு தொடர்ந்து உரையாற்றிய அவர், ‘எமது […]





