உண்மைகளை வெளியிடப்போவதாக அத்துரலிய ரத்தன தேரர் எச்சரிக்கை தேசிய அரசினதும் ஜாதிக ஹெல உறுமயவினதும் இதுவரை வெளிவராத பல்வேறு உண்மைகளை விரைவில் வெளியிடவுள்ளதாக ஐக்கிய தேசியக் கட்சியின் நாடாளுமன்ற உறுப்பினரும் நாடாளுமன்றில் சுயாதீனமாக இயங்கப் போவதாக அறிவித்துள்ளவருமான அத்துரலிய ரத்ன தேரர் எச்சரிக்கை விடுத்துள்ளார். தேசிய அரசின் செயற்பாடுகளால் மங்களின் மனங்களை வெல்ல முடியாது போயுள்ளதாக குறிப்பிட்டுள்ள அவர், குறிப்பாக அரசு முன்னெடுத்துவரும் பல அபிவிருத்தித் திட்டங்களுக்கு மக்கள் மத்தியில் …
Read More »இந்தியா எம்மை நம்பவில்லை – கோத்தாபய ராஜபக்ச ஆதங்கம்
இந்தியா எம்மை நம்பவில்லை – கோத்தாபய ராஜபக்ச ஆதங்கம் மேற்குலகின் தலையீடுகளால் மகிந்த ராஜபக்ச அரசாங்கத்தை இந்தியா நம்பவில்லை என்றும், மகிந்த அரசுக்கு எதிராக செயற்பட முடிவு செய்தது என்றும் ஸ்ரீலங்காவின் முன்னாள் பாதுகாப்புச் செயலாளர் கோத்தாபய ராஜபக்ச தெரிவித்துள்ளார். கொழும்பு ஆங்கில நாளிதழ் ஒன்றுக்கு வழங்கியிருந்த செவ்வியிலேயே அவர் இவ்வாறு கூறியுள்ளார். இந்தியாவுடனான எதிர்கால உறவுகள் மிகவும் முக்கியமானது எனக் குறிப்பிட்டுள்ள அவர், இதனை தாம் ஆரம்பத்திலேயே புரிந்து …
Read More »நல்லிணக்கப் பொறிமுறை பொருத்தமற்றது – எஸ்.சிவமோகன்
நல்லிணக்கப் பொறிமுறை பொருத்தமற்றது – எஸ்.சிவமோகன் தென்னாபிரிக்காவில் பின்பற்றப்பட்ட உண்மையைக் கண்டறியும் நல்லிணக்கப் பொறிமுறையானது இலங்கைக்கு பொருந்தாதென ஆங்கில ஊடகமொன்றிற்கு வழங்கிய செவ்வியில் தமிழ்த்தேசிய கூட்டமைப்பின் நாடாளுமன்ற உறுப்பினர் எஸ்.சிவமோகன் தெரிவித்தார். அத்துடன் தென்னாபிரிக்காவில் இப்பொறிமுறை செயற்படுத்தப்பட்டபோது பாதிக்கப்பட்ட ஆபிரிக்கர்கள் பெரும்பான்மையினராக இருந்தனர். ஆனால் இங்கு சிறுபான்மையினரான தமிழர்களைப் பொறுத்தவரையில் அப்பொறிமுறையின் விசாரணைகள் பக்கச்சார்பானதாக அமையுமென்பதையும் சுட்டிக்காட்டியிருந்தார். எனவே அனைத்துத் தரப்பில் இருந்தும் சர்வதேச விசாரணையினை வலியுறுத்துவதே பொருத்தமான வழியாகும் …
Read More »வடக்கிலிருந்து இராணுவத்தினரை வெளியேற்றுங்கள்: வலி. வடக்கு மக்கள் போராட்டம்
வடக்கிலிருந்து இராணுவத்தினரை வெளியேற்றுங்கள்: வலி. வடக்கு மக்கள் போராட்டம் யாழ்ப்பாணம் வலிகாமம் வடக்கு பகுதி மக்கள் கவனயீர்ப்பு போராட்டம் ஒன்றில் ஈடுபட்டுள்ளனர். இவர்கள் மல்லாகம் பழம் பிள்ளையார் ஆலயத்திற்கு முன்னால் போராட்டத்தில் ஈடுபட்டுள்ளனர். கேப்பாபிலவு பிலவுக்குடியிருப்பு மக்களின் நில மீட்பு போராட்டத்திற்கு ஆதரவாகவும், வலிகாமம் வடக்கு பகுதியிலுள்ள தமது காணிகளை விடுவிக்குமாறு கோரியும் இவர்கள் போராட்டத்தில் ஈடுபட்டுள்ளனர். வலிகாமம் வடக்கில் இராணுவத்தினர் வசமுள்ள காணிகள் விடுவிக்கப்பட வேண்டும், வடக்கு பகுதியிலிருந்து …
Read More »வெளிநாட்டு நீதிபதிகளை ஒருபோதும் அனுமதியோம்: ஜனாதிபதி திட்டவட்டம்
வெளிநாட்டு நீதிபதிகளை ஒருபோதும் அனுமதியோம்: ஜனாதிபதி திட்டவட்டம் இலங்கையில் இடம்பெற்றதாகக் கூறப்படும் போர்க்குற்றம் மற்றும் மனித உரிமை மீறல்கள் தொடர்பான விசாரணைக்கு வெளிநாட்டு நீதிபதிகளை அனுமதிக்க மாட்டோம் என்பதை மேற்குலக நாடுகளுக்கு தான் ஏற்கனவே கூறிவிட்டதாக தெரிவித்துள்ள ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன, இலங்கையில் உள்ள நீதிபதிகள் ஏனைய உலக நாடுகளின் நீதிபதிகளை விட கல்வியிலோ அனுபவத்திலோ ஆற்றலிலோ எந்தவகையிலும் குறைந்தவர்கள் அல்லர் எனக் குறிப்பிட்டுள்ளார். பொலனறுவையில் புதிதாக அமைக்கப்படவுள்ள நீதிமன்ற …
Read More »தீவிர சிகிச்சை பிரிவில் வடக்கு முதல்வர் விக்னேஸ்வரன்
தீவிர சிகிச்சை பிரிவில் வடக்கு முதல்வர் விக்னேஸ்வரன் வடக்கு மாகாண முதலமைச்சர் சி.வி.விக்னேஸ்வரன், கொழும்பிலுள்ள தனியார் மருத்துவமனை ஒன்றில் தீவிர சிகிச்சைப் பிரிவில் அனுமதிக்கப்பட்டுள்ளார். கடந்த சில நாட்களாக சுகயீனமுற்றுள்ள முதலமைச்சர் விக்னேஸ்வரன், கடந்த சில தினங்களுக்கு முன்னர் சத்திரசிகிச்சைக்கு உட்படுத்தப்பட்டதாகவும் தெரிவிக்கப்படுகிறது. முதலமைச்சரின் உடல் நிலை தேறிவருவதாக தெரிவிக்கப்படுவதோடு, இன்னும் சில நாட்களுக்கு அவர் மருத்துவமனையில் தங்கியிருக்க வேண்டுமென வைத்தியர்கள் ஆலோசனை வழங்கியுள்ளதாகவும் கூறப்படுகிறது. …
Read More »ஐ.நா அமர்வு நாளை ஆரம்பம் : மங்கள தலைமையிலான குழு ஜெனிவா பயணம்
ஐ.நா அமர்வு நாளை ஆரம்பம் : மங்கள தலைமையிலான குழு ஜெனிவா பயணம் ஐக்கிய நாடுகளின் மனித உரிமைகள் பேரவை அமர்வில் பங்கேற்பதற்காக வெளிவிவகார அமைச்சர் மங்கள சமரவீர மற்றும் நாடாளுமன்ற உறுப்பினர் ஜயம்பதி விக்ரமரத்ன ஆகியோர் இன்று ஜெனிவா பயணமாகின்றனர். ஐக்கிய நாடுகளின் மனித உரிமைகள் பேரவையின் 34 ஆவது அமர்வு நாளை ஆரம்பமாகவுள்ள நிலையில், ஸ்ரீலங்கா அரசாங்க தரப்பை பிரதிநிதித்துவப்படுத்தி இருவரும் ஜெனிவா அமர்வில் கலந்துகொள்ளவுள்ளனர். இந்த …
Read More »ஸ்ரீலங்காவுக்கு படையெடுக்கும் அமெரிக்க நாடாளுமன்றக் குழுக்கள்
ஸ்ரீலங்காவுக்கு படையெடுக்கும் அமெரிக்க நாடாளுமன்றக் குழுக்கள் ஸ்ரீலங்காவிற்கு மற்றுமொரு அமெரிக்க நாடாளுமன்ற உறுப்பினர்கள் குழு நேற்று பயணம் மேற்கொண்டு உயர்மட்டத் தலைவர்களைச் சந்தித்துப் பேச்சுவார்த்தை நடத்தியுள்ளது. அமெரிக்க ஜனாதிபதியாக டொனால்ட் ட்ரம்ப் பதவியேற்ற பின்னர், பீற்றர் ரொஸ்கம் தலைமையிலான நாடாளுமன்ற ஜனநாயகத்துக்கான அமெரிக்க நாடாளுமன்றக் குழு கடந்த 20 ஆம் திகதி ஸ்ரீலங்காவிற்கு விஜயம் மேற்கொண்டது. இந்தக் குழுவினர் ஸ்ரீலங்கா ஜனாதிபதி, வெளிவிவகார அமைச்சர், எதிர்க்கட்சித் தலைவர் உள்ளிட்டோரைச் சந்தித்ததுடன், …
Read More »வன்னிப் பல்கலைக்கழக கோரிக்கைக்கு ஆதரவு வழங்குமாறு அழைப்பு
வன்னிப் பல்கலைக்கழக கோரிக்கைக்கு ஆதரவு வழங்குமாறு அழைப்பு வவுனியா வளாகத்தை வன்னிப் பல்கலைக்கழகமாக தரமுயர்த்த கோரி எதிர்வரும் 28 ஆம் திகதி வவுனியாவில் பேரணி ஒன்று நடைபெறவுள்ளது. இந்த பேரணிக்கு அனைவரையும் பங்கேற்குமாறு வட மாகாண சுகாதார அமைச்சர் ப.சத்தியலிங்கம் அழைப்பு விடுத்துள்ளார். 1992 ஆம் ஆண்டு இலங்கையின் ஒன்பது மாகாணங்களிலும் பல்கலைக்கழக கல்லூரிகள் ஆரம்பிக்கப்பட்டன. 25 வருடங்கள் கடந்துள்ள நிலையில் நாட்டின் ஏனைய மாகாணங்களின் பல்கலைகழக கல்லூரிகள் பல்கலைகழகங்களாக …
Read More »ஜனாதிபதி மைத்திரி இந்தோனேசியா விஜயம்
ஜனாதிபதி மைத்திரி இந்தோனேசியா விஜயம் இந்தோனேசிய ஜனாதிபதி ஜோகோ விடோடாவின் அழைப்பை ஏற்று ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன எதிர்வரும் மார்ச் மாதம் 8ஆம் திகதி இந்தோனேஷியாவிற்கு உத்தியோகப்பூர்வ விஜயம் மேற்கொள்ளவுள்ள உள்ளதாக தகவல்கள் வெளியாகியுள்ளன. ஜகார்த்தாவில் எதிர்வரும் 6ஆம் 7ஆம் திகதிகளில் நடைபெறவுள்ள இந்து சமுத்திர பிராந்திய ஒத்துழைப்பு ஒன்றிய மாநாட்டில் ஜனாதிபதி பங்குபற்றவுள்ளார். அந்த மாநாடு நிறைவடைந்த பின்னர் 8ஆம் திகதி இந்தோனேசியாவில் உத்தியோகபூர்வ விஜயத்தில் ஈடுபடுவார் என்று …
Read More »