ஐ.நா. செயலாளர் நாயகம் இலங்கைக்கு விஜயம் ஐக்கிய நாடுகளின் செயலாளர் நாயகம் அந்தோனியோ குட்டெரஸ் விரைவில் இலங்கைக்கு விஜயம் மேற்கொள்ளவுள்ளதாக தெரிவிக்கப்படுகிறது. ஜெனீவாவில் ஐ.நா. செயலாளர் நாயகத்தை அமைச்சர் மங்கள சமரவீர நேற்று (செவ்வாய்க்கிழமை) சந்தித்து கலந்துரையாடியபோது இதற்கான அழைப்பை விடுத்ததாகவும், ஐ.நா. செயலர் அதனை ஏற்றுக்கொண்டுள்ளதாகவும் வெளிவிவகார அமைச்சின் தகவல்கள் தெரிவிக்கின்றன. ஐ.நா. செயலாளர் நாயகமாக அந்தோனியோ குட்டெரஸ் பதவியேற்ற பின்னர் மேற்கொள்ளும் முதலாவது இலங்கை விஜயமாக இது …
Read More »பொறுப்புக்கூறல் விடயத்தில் இலங்கை உரிய வகையில் செயற்படவில்லை: பிரித்தானியா
பொறுப்புக்கூறல் விடயத்தில் இலங்கை உரிய வகையில் செயற்படவில்லை: பிரித்தானியா பொறுப்புக்கூறல், மனித உரிமை, பாதுகாப்பு மற்றும் மீள்கட்டமைப்பு விடயங்களில் இலங்கை உரியவகையில் செயற்படவில்லை என பிரித்தானியா குற்றஞ்சாட்டியுள்ளது. இலங்கையின் மனித உரிமைகள் நிலைப்பாடு தொடர்பாக பிரித்தானிய நாடாளுமன்றத்தில் நேற்றையதினம் (செவ்வாய்க்கிழமை) சிறப்பு விவாதம் ஒன்று இடம்பெற்றுள்ளது. இவ் விவாதத்தை ஆரம்பித்து வைத்து உரையாற்றிய தமிழர்களுக்கான பிரித்தானிய அனைத்து கட்சி நாடாளுமன்ற உறுப்பினர்கள் குழுவின் தலைவர் ஜேம்ஸ் பெரி இக் குற்றச்சாட்டை …
Read More »வட.கிழக்கு மீளிணைப்பை தமிழர்கள் கைவிட்டுவிட்டனர்: ஐக்கிய தேசியக் கட்சி
வட.கிழக்கு மீளிணைப்பை தமிழர்கள் கைவிட்டுவிட்டனர்: ஐக்கிய தேசியக் கட்சி புதிய அரசியலமைப்பினை மக்கள் கருத்துக் கணிப்பிற்கு செலுத்தக்கூடாது என்று நல்லாட்சி அரசாங்கத்தின் பிரதான இரண்டு கட்சிகளில் ஒன்றான ஸ்ரீலங்கா சுதந்திரக் கட்சி தெரிவித்துவரும் நிலையில் பொதுமக்கள் கருத்துக் கணிப்பு அவசியம் மேற்கொள்ளப்பட வேண்டும் என்று ஐக்கிய தேசியக் கட்சி உறுதிபடத் தெரிவித்துள்ளது. புதிய அரசியலமைப்புப் பணிகள் உருவாக்கம் தொடர்பான இன்னும் யோசனையே பெற்று வருவதாகவும் ஐக்கிய தேசியக் கட்சி தெரிவிக்கின்றது. …
Read More »மேலதிக கொடுப்பனவு கோரி யாழ். போதனா வைத்தியசாலை தாதியர் போராட்டம்
மேலதிக கொடுப்பனவு கோரி யாழ். போதனா வைத்தியசாலை தாதியர் போராட்டம் தமக்கான மேலதிக நேரக் கொடுப்பனவு திறைசேரியால் இன்னும் வழங்கப்படவில்லை என தெரிவித்து அரச தாதி உத்தியோகத்தர் சங்க யாழ். போதனா வைத்தியசாலை கிளையினரால் போராட்டம் ஒன்று முன்னெடுக்கப்பட்டுள்ளது. குறித்த போராட்டம் இன்று (செவ்வாய்க்கிழமை) மதியம் 12 மணி முதல் 1 மணிவரை யாழ். போதனா வைத்தியசாலை உட்பகுதியில் முன்னெடுக்கப்பட்டுள்ளது. தமக்கான மேலதிக நேரக் கொடுப்பனவுகளுக்கு சுகாதார அமைச்சு அனுமதி …
Read More »கேப்பாப்புலவு மக்களின் தொடர் போராட்டத்திற்கு கிடைத்த வெற்றி
கேப்பாப்புலவு மக்களின் தொடர் போராட்டத்திற்கு கிடைத்த வெற்றி ஸ்ரீலங்கா விமானப் படையினர் வசமுள்ள தமது காணிகளை விடுவிக்குமாறு கோரி முல்லைத்தீவு – கேப்பாப்புலவு – பிலவுக்குடியிருப்பு மக்கள் மேற்கொண்ட போராட்டத்திற்கு வெற்றி கிடைத்துள்ளது. இதற்கமைய மக்களின் காணிகள் நாளைய தினம் கையளிக்கப்படவுள்ளதாக முல்லைத்தீவு கரைத்துறைப்பற்று பிரதேச செயலாளர் சி.குணபாலன் தெரிவித்தார். ஸ்ரீலங்கா விமானப்படையினரால் கடந்த எட்டு ஆண்டுகாளாக கையகப்படுத்தப்பட்டுள்ள பிலவுக்குடியிருப்பு கிராமத்திலுள்ள 84 குடும்பங்களுக்கு சொந்தமான 20 ஏக்கர் காணிகளை …
Read More »ஊர்காவற்துறை கர்ப்பிணி பெண் படுகொலை சம்பவம் தொடர்பில் விசாரணை
ஊர்காவற்துறை கர்ப்பிணி பெண் படுகொலை சம்பவம் தொடர்பில் விசாரணை ஊர்காவற்துறை கர்ப்பிணி பெண் படுகொலை சம்பவம் தொடர்பில் ஊடகவியலாளர்களுக்கு அனுப்பப்பட்ட செய்தி தொடர்பில் விசாரணைகளை நடத்த உத்தரவு பிறப்பிக்கப்பட்டுள்ளது. குறித்த வழக்கு நேற்று (திங்கட்கிழமை) ஊர்காவற்துறை நீதவான் நீதிமன்றில் விசாரணைக்கு எடுத்துக்கொள்ளப்பட்டபோது, நீதவான் ஏ.எம்.எம்.றியாழ் பொலிஸாருக்கு இந்த உத்தரவை பிறப்பித்துள்ளார். குறித்த சம்பவத்துடன் முஸ்லிம் இளைஞருக்கு தொடர்பு இருப்பதாகவும் அவரை பொலிஸார் தேடிவருவதாகவும் செய்திகள் வெளியாகியிருந்தன. இவ்வாறு வெளியான செய்தி …
Read More »கேப்பாப்புலவு – பிலவுக்குடியிருப்பு மக்களின் காணிகள் அளவீடு
கேப்பாப்புலவு – பிலவுக்குடியிருப்பு மக்களின் காணிகள் அளவீடு கேப்பாப்புலவு – பிலவுக்குடியிருப்பு மக்களுக்கு சொந்தமான காணிகளை விடுவிப்பதற்கு அரசாங்கம் இணக்கம் தெரிவித்துள்ளது. இந்த நிலையில், குறித்த காணிகள் நிலஅளவை திணைக்கள அதிகாரிகளினால் இன்று காலை அளவீடு செய்யப்படுவதாக முல்லைத்தீவு கரைத்துறைப்பற்று பிரதேச செயலாளர் சி.குணபாலன் தெரிவித்தார். மக்களின் சொந்த காணிகள் விடுவிக்கப்படும் அதேவேளை, தற்காலிகமாக வழங்கப்பட்ட காணிகள் மீள பெறப்படும் வாய்ப்பு உள்ளதாகவும் அவர் குறிப்பிட்டார். …
Read More »கேப்பாபுலவு புதுக்குடியிருப்பு காணிப்பிரச்சனைக்கு தீர்வு:சம்பந்தன்
கேப்பாபுலவு புதுக்குடியிருப்பு காணிப்பிரச்சனைக்கு தீர்வு:சம்பந்தன் கேப்பாபுலவு புதுக்குடியிருப்பு பகுதிகளில் போராட்டங்களை நடத்தும் மக்களின் பிரச்சனைகளுக்கு எதிர்வரும் மார்ச் நான்காம் திகதி தாம் யாழ்ப்பாணம் செல்லுமுன்பாக முடிவுகாணப்படவேண்டும் என ஜனாதிபதி உத்தரவு பிறப்பித்துள்ளதாக தமிழ்த்தேசியக் கூட்டமைப்பு தலைவரும் எதிர்க்கட்சித் தலைவருமான இரா. சம்பந்தன் தெரிவித்தார். தமிழ்த் தேசியக் கூட்டமைப்பால் கொழும்பில் இன்று ஏற்பாடுசெய்யப்பட்டிருந்த அவசர செய்தியாளர் சந்திப்பின் போதே அவர் இந்தத் தகவலை வெளியிட்டார். கொழும்பிலுள்ள எதிர்க்கட்சித்தலைவர் அலுவலகத்தில் இன்று மாலை …
Read More »பிரதம நீதியரசராக பிரியசாத் டெப் பரிந்துரை: ஸ்ரீபவன் இன்றுடன் ஓய்வு
பிரதம நீதியரசராக பிரியசாத் டெப் பரிந்துரை: ஸ்ரீபவன் இன்றுடன் ஓய்வு பிரதம நீதியரசர் கே.ஸ்ரீபவன் இன்றுடன் ஓய்வுபெறவுள்ள நிலையில், அடுத்த பிரதம நீதியரசராக உயர் நீதிமன்ற நீதியரசர் பிரியசாத் டெப்பின் பெயரை அரசியலமைப்பு சபை பரிந்துரை செய்துள்ளது. பிரதம நீதியரசருக்கான நியமனம் தொடர்பில் ஜனாதிபதியால் உயர்நீதிமன்ற நீதியரசர்களான பிரியசாத் டெப் மற்றும் ஈவா வனசுந்தர ஆகியோரின் பெயர்கள் அரசியலமைப்பு சபைக்கு அனுப்பிவைக்கப்பட்டிருந்தன. இதனையடுத்து நேற்று (திங்கட்கிழமை) இரவு சபாநாயகர் கரு …
Read More »கால அவகாசம் வழங்குமா ஐ.நா.? – அமைச்சர் மங்கள இன்று உரை
கால அவகாசம் வழங்குமா ஐ.நா.? – அமைச்சர் மங்கள இன்று உரை கடந்த 2015ஆம் ஆண்டு ஐ.நா. மனித உரிமைகள் பேரவையில் இலங்கை உள்ளிட்ட சில நாடுகளின் இணை அனுசரணையில் நிறைவேற்றிக்கொள்ளப்பட்ட இலங்கை தொடர்பான பிரேரணையில் குறிப்பிடப்பட்ட பரிந்துரைகளை நடைமுறைப்படுத்துவதற்கு மேலும் இரண்டு வருட கால அவகாசத்தை ஐ.நா.விடம் இலங்கை இன்று கோரவுள்ளது. நேற்றைய தினம் ஆரம்பமான ஐ.நா. மனித உரிமைகள் பேரவையின் 34ஆவது கூட்டத்தொடரில் கலந்துகொண்டுள்ள வெளிவிவகார அமைச்சர் …
Read More »