பிரிந்து நின்றால் பிரச்சினைகளை தீர்க்க முடியாது – மைத்திரி பிரிந்து சென்று செயற்பட்டால் பிரச்சினைகளுக்கு தீர்வு காண முடியாது என ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன தெரிவித்துள்ளார். மக்கள் தமக்கிடையில் சந்தேகங்களை ஏற்படுத்திக்கொள்ளக்கூடாது என வலியுறுத்திய மைத்திரிபால சிறிசேன, அனைத்து மக்களும் உள்ளத்தால் ஒன்றுபட வேண்டும் எனவும் கோரிக்கை விடுத்துள்ளார். ஜனாதிபதியிடம் சொல்லுங்கள் என்ற ஒரு புதிய குறைகேள் அலுவலகமொன்று யாழ்ப்பாணத்தில் திறந்து வைக்கப்பட்டுள்ளது. வட மாகாண ஆளுநரின் அலுவலகத்தில் அமைக்கப்பட்டுள்ள …
Read More »ஈழ அகதிகளின் போராட்டம் தற்காலிகமாக இடைநிறுத்தம்
ஈழ அகதிகளின் போராட்டம் தற்காலிகமாக இடைநிறுத்தம் அகதி அந்தஸ்து மறுக்கப்பட்ட ஈழத் தமிழர்களால் இந்தோனேஷியாவில் மேற்கொள்ளப்பட்டு வந்த உண்ணாவிரதப் போராட்டம் தற்காலிகமாக கைவிடப்பட்டுள்ளது. ஈழ அகதிகளின் கோரிக்கை தொடர்பில் ஆராய்ந்து விரைவில் தீர்வினை பெற்றுத்தருவதாக சர்வதேச அகதிகள் நிறுவன அதிகாரிகள் உறுதியளித்ததை தொடர்ந்தே குறித்த போராட்டம் முடிவுக்கு வந்துள்ளது. இந்தோனேசியாவில் அகதி அந்தஸ்து மறுக்கப்பட்ட ஈழ அகதிகளை இலங்கைக்கு திருப்பி அனுப்ப நடவடிக்கை மேற்கொள்ளப்பட்டு வந்த நிலையில், தம்மை வேறு …
Read More »ராணுவ பிடியிலிருந்த புதுக்குடியிருப்பு மக்களின் பகுதியளவு காணி விடுவிப்பு
ராணுவ பிடியிலிருந்த புதுக்குடியிருப்பு மக்களின் பகுதியளவு காணி விடுவிப்பு முல்லைத்தீவு புதுக்குடியிருப்பு காணிகள் மூன்று கட்டங்களாக விடுவிக்கப்படும் என வாக்குறுதி அளிக்கப்பட்டிருந்ததற்கு அமைய, தற்போது முதல் கட்டமாக ஏழரை ஏக்கர் காணி விடுவிக்கப்பட்டதை அடுத்து அம்மக்களால் முன்னெடுக்கப்பட்டு வந்த தொடர் போராட்டம் கைவிடப்பட்டுள்ளது. இதன்படி மக்கள் தங்கள் சொந்த காணிகளுக்குள் செல்ல இன்று அனுமதிக்கப்பட்டுள்ளனர். புதுக்குடியிருப்பில் 19 குடும்பங்களுக்கு சொந்தமான 49 ஏக்கர் காணிகளிலிருந்து ராணுவத்தினர் வெளியேற வேண்டும் என்ற …
Read More »நல்லாட்சியில் தமிழ் மக்கள் பெற்ற நன்மைகள் மிகவும் குறைவு: மாவை
நல்லாட்சியில் தமிழ் மக்கள் பெற்ற நன்மைகள் மிகவும் குறைவு: மாவை தமிழ் மக்கள் உங்கள் மீது நம்பிக்கை இழந்து வரும் நிலையில் மிகவும் நம்பிக்கையுடனும் கனத்த மனதுடனும் உங்களை சந்திக்கிறேன். உங்களது நல்லாட்சியிலும் தமிழ் மக்கள் பெற்றிருக்கும் நன்மைகள் மிகவும் குறைவு என தமிழரசு கட்சியின் தலைவரும் நாடாளுமன்ற உறுப்பினருமான மாவை சேனாதிராஜா தெரிவித்துள்ளார். வடமாகாண ஆளுநர் அலுவலகத்தில் ‘ஐனாதிபதியிடம் தெரிவியுங்கள்’ முறைப்பாட்டு அலுவலகம் இன்று ஜனாதிபதியினால் திறந்து வைக்கப்பட்டது. …
Read More »காணாமல் ஆக்கப்பட்டோருக்கு என்ன நடந்தது? வவுனியாவில் பேரணி
காணாமல் ஆக்கப்பட்டோருக்கு என்ன நடந்தது? வவுனியாவில் பேரணி காணாமல் ஆக்கப்பட்டோருக்கு என்ன நடந்தது? உண்மையை சொல்’ எனக் குறிப்பிட்டு காணாமல் ஆக்கப்பட்டோரின் உறவினர்களால் வவுனியாவில் முன்னெடுக்கப்பட்டுவரும் சுழற்சி முறையிலான உண்ணாவிரதப் போராட்டத்திற்கு ஆதரவாக ஈழ மக்கள் புரட்சிகர விடுதலை முன்னணி இன்று (சனிக்கிழமை) பேரணியொன்றினை ஏற்பாடு செய்திருந்தது. இப்பேரணியின் நிறைவில் போராட்டத்தில் ஈடுபட்டிருந்த தாய்மார் தமது உறவுகளை எண்ணி கதறி அழுத சம்பவம் அங்கிருந்த அனைவரையும் சோகத்தில் ஆழ்த்தியது. வவுனியா …
Read More »ஆறு தலைமுறைகளாக வாழ்ந்த நிலம் எமக்கு வேண்டும் – கேப்பாபுலவு மக்கள்
ஆறு தலைமுறைகளாக வாழ்ந்த நிலம் எமக்கு வேண்டும் – கேப்பாபுலவு மக்கள் காணிக்குள் கால் பதிக்கும் வரை தொடர் போராட்டம் முன்னெடுக்கப்படும் என கேப்பாபுலவு மக்கள் தெரிவித்துள்ளனர். அறுபது வருடங்களாக தாம் வாழ்ந்து வந்த காணிகளை விடுவிக்க வலியுறுத்தி தமது பூர்விக நிலங்களை விடுவிக்குமாறு வலியுறுத்தி புதன்கிழமை முதலாம் திகதியிலிருந்து தொடர்போராட்டத்தை ஆரம்பித்துள்ளனர். இந்த நிலையில் இந்தபோராட்டம் மூன்றாவது நாளாக இன்றும் முன்னெடுக்கப்பட்டு வருகின்றது. ஆறு தலைமுறையாக தாம் வாழ்ந்து …
Read More »நல்லாட்சியின் நகர்விற்கு மஹிந்த முட்டுக்கட்டை: கிழக்கு முதலமைச்சர்
நல்லாட்சியின் நகர்விற்கு மஹிந்த முட்டுக்கட்டை: கிழக்கு முதலமைச்சர் இனப்பிரச்சினை தொடர்பான தீர்வை நோக்கிய ஜனாதிபதி மற்றும் பிரதமர் ஆகியோர் தலைமையிலான நல்லாட்சியின் நகர்விற்கு, முன்னாள் ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷ பாரிய அழுத்தங்களைக் கொடுத்து வருவதாக கிழக்கு மாகாண முதலமைச்சர் செய்னுலாப்தீன் நஸீர் அஹமட் தெரிவித்துள்ளார். கிழக்கு மாகாண முதலமைச்சரின் 18 மில்லியன் ரூபாய் நிதி ஒதுக்கீட்டில் ஏறாவூரில் செய்னுலாப்தீன் ஆலிம் வாவிக்கரை பொழுதுபோக்கு பூங்கா திறப்பு விழா இன்று (வெள்ளிக்கிழமை) …
Read More »இந்தோனேசியாவில் ஈழ அகதிகள் ஐவர் வைத்தியசாலையில்
இந்தோனேசியாவில் ஈழ அகதிகள் ஐவர் வைத்தியசாலையில் இந்தோனேசியாவில் அகதி அந்தஸ்து மறுக்கப்பட்ட நிலையில் உணவு தவிர்ப்பு போராட்டத்தில் ஈடுபட்டுள்ள ஈழத்தமிழர்கள் ஐவரின் உடல் நிலை மோசமடைந்த நிலையில் மொடன் வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளனர். நான்கு ஆண்களும் ஒரு பெண்ணும் இவ்வாறு வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ள நிலையில் ஏனையவர்கள் இன்று ஐந்தாவது நாளாகவும் உணவு தவிர்ப்பு போராட்டத்தில் ஈடுபட்டுள்ளனர். இலங்கையில் இடம்பெற்ற இறுதிக்கட்ட யுத்தத்தின் பின்னர் உயிருக்கு ஆபத்தான நிலையில் இந்தோனேசியாவில் ஈழ தமிழர்கள் …
Read More »தொடரும் வேலையற்ற பட்டதாரிகளின் போராட்டம்: ஜனாதிபதிக்கு அழுத்தம் கொடுக்கவுள்ள மாவை
தொடரும் வேலையற்ற பட்டதாரிகளின் போராட்டம்: ஜனாதிபதிக்கு அழுத்தம் கொடுக்கவுள்ள மாவை வடமாகாண வேலையற்ற பட்டதாரிகளுக்கு வேலைவாய்ப்பை பெற்றுக்கொடுத்து அவர்களின் பிரச்சினைகளுக்கு தீர்வு காணப்பட வேண்டும் என ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேனவிடம் கோரவுள்ளதாக இலங்கை தமிழரசுக் கட்சி தலைவர் மாவை சேனாதிராஜா தெரிவித்துள்ளார். வடமாகாண வேலையற்ற பட்டதாரி மாணவர்கள் யாழ். மாவட்ட செயலகத்திற்கு முன்னால் காலவரையற்ற போராட்டத்தை ஆரம்பித்துள்ளனர். அவர்களின் போராட்டம் இன்று (வெள்ளிக்கிழமை) ஐந்தாவது நாளை எட்டியுள்ளது. இந்நிலையில், ஆர்ப்பாட்டம் …
Read More »ஆசிரியர் வெற்றிடங்கள்: அவசரக் கலந்துரையாடல்
ஆசிரியர் வெற்றிடங்கள்: அவசரக் கலந்துரையாடல் கிழக்கு மாகாணத்திலுள்ள 4703 அதிபர் மற்றும் ஆசிரியர் வெற்றிடங்களை உடனடியாக நிரப்புவது தொடர்பான அவசரக் கலந்துரையாடலொன்று இடம்பெறவுள்ளது. இந்த கலந்துரையாடல் எதிர்வரும் சில நாட்களில் பிரதமர் ரணில் விக்ரமசிங்கவின் அமைச்சான தேசிய கொள்கைகள் மற்றும் பொருளாதார அலுவல்கள் அமைச்சின் ஆலோசகர் ஆர்.பாஸ்கரலிங்த்தின் தலைமையில் இடம்பெறவுள்ளது. குறித்த கூட்டத்தில் பங்கேற்க கிழக்கு மாகாண முதலமைச்சர் ஹாபிஸ் நசீர் அஹமட், கிழக்கு மாகாண கல்வியமைச்சர் எஸ் தண்டாயுதபானி, …
Read More »