Author: தமிழவன்

இரத்த குழாய்களை சுத்தம் செய்து இதயத்தை ஆரோக்கியமாக வைக்க…!

மனித உடலுக்கு போதுமான இயக்கம் என்பது மிக அவசியமான ஒன்று. அப்பொழுது தான் உடல் உறுப்புகள் ஆரோக்கியமான இருக்கும். மூளையில் ஏற்படும் சிறிய அடைப்பு மனித உடலில் வாதத்தை ஏற்படுத்தி உடலின் ஒட்டு மொத்த இயக்கத்தையும் நிறுத்திவிடும். இதயத்திற்கு செல்லும் இரத்தத்தில் சிறிது குறைந்தாலும் இதய நோய்கள் அல்லது மாரடைப்பு ஏற்படும். எனவே, இது போன்ற உடலின் முக்கியமான உறுப்புகளை ஆரோக்கியமாக வைத்துக் கொள்ள தினசரி உடல் இயக்கமும் முக்கியம். […]

மருத்துவ குணம் நிறைந்த ஒரு அற்புத மூலிகை துளசி

துளசியை ஒரு தெய்வீகச் சின்னமாக எண்ணி வழிபடுகிறோம். துளசியில் அடங்கியிருக்கும் மருத்துவக் குணங்களை கருத்தில் கொண்டுதான் தெய்வீகச் சின்னமாக நம் முன்னோர்கள் உருவகப்படுத்தி சொல்லியிருக்கிறார்கள். அரி, ராம துளசி, கிருஷ்ண துளசி என்றும் துளசி அழைக்கப்படுகிறது. துளசியில் நற்றுளசி, கருந்துளசி, செந்துளசி, நிலத்துளசி, கல்துளசி, நாய்த்துளசி, முள் துளசி எனப் பலவகை உண்டு. துளசியின் மருத்துவப் பலன்கள்: துளசி வயிற்றில் உள்ள புண்களை ஆற்றும். ஈரலில் உள்ள ஜீரண நீர்களை […]

ஆவா குழு உறுப்பினர்கள் கொழும்பில் கைது!

யாழ்ப்பாணத்தில் வாள்வெட்டு வன்முறைகளில் ஈடுபட்டுவிட்டு கொழும்பில் தலைமறைவாகியிருந்த ஆவா குழு உறுப்பினர்கள் மூவர் கைது செய்யப்பட்டு யாழ்ப்பாணத்துக்கு நேற்று இரவு அழைத்துவரப்பட்டுள்ளதாக, பொலிஸ் தகவல்கள் தெரிவிக்கின்றன. பொலிஸாரால் தேடப்பட்டு வந்த முஸ்லிம் இளைஞன் என நம்பப்படும் இக்ரம் உள்ளிட்ட மூவரே இவ்வாறு கைது செய்யப்பட்டுள்ளனர். சந்தேகநபர்கள் மூவரும், கொழும்பில் மறைந்திருப்பதாகக் கிடைக்கப்பெற்ற தகவலின் அடிப்படையில், யாழ்ப்பாணத்தில் இருந்து சென்ற சிறப்பு பொலிஸ் குழுவே, குறித்த நபர்களை கைதுசெய்துள்ளது. கைதுசெய்யப்பட்டவர்களிடம் தீவிர […]

அம்ருதாவின் தாய் ஜெ.வின் சகோதரிதானா?

பெங்களூரை சேர்ந்த அம்ருதா என்பவரின் தாய் சைலைஜா, ஜெயலலிதாவின் சகோதரி அல்ல என கர்நாடக அதிமுக செயலாளரும், தினகரனின் ஆதரவாளருமான புகழேந்தி தெரிவித்துள்ளார். தன்னை ஜெ.வின் மகளாக அறிவிக்க வேண்டும் என வலியுறுத்தி அம்ருதா என்பவர் உச்ச நீதிமன்றத்தில் வழக்கு தொடர்ந்து பரபரப்பை உண்டாக்கியுள்ளார். மேலும், அதே பெங்களூரில் வசிக்கும் ஜெ.வின் அத்தை மகளான லலிதா என்பவரும் அம்ருதா கூற்றில் உண்மையிருக்கிறது எனக்கூறி பரபரப்பிற்கு வலு சேர்த்துள்ளார். இந்நிலையில், தினகரனின் […]

செவிலியர் போராட்டத்திற்கு ஆதரவு தெரிவித்த ஜூலி

சென்னை தேனாம்பேட்டை டி.எம்.எஸ் வளாகத்தில் கடந்த மூன்று நாட்களாக செவிலியர்கள் பல்வேறு கோரிக்கைகளை வலியுறுத்தி போராட்டம் நடத்தி வருவது தெரிந்ததே. இந்த நிலையில் இன்று முதல் போராட்டம் நடத்தி வரும் செவிலியர்கள் உண்ணாவிரதமும் இருந்து வருகின்றனர். இந்த நிலையில் செவிலியர்கள் போராட்டம் உச்சகட்டத்தில் உள்ள நிலையில் பிக்பாஸ் புகழ் ஜூலி நேரில் வந்து போராட்டம் செய்து வரும் செவிலியர்களுக்கு ஆதரவு கொடுத்துள்ளார். இந்த போராட்டம் குறித்து ஜூலி செய்தியாளர்களிடம் தெரிவித்ததாவது: […]

மாலைதீவில் இலங்கை மீனவர்கள் கைது!

எல்லை மீறி மீன்பிடித்த குற்றச்சாட்டில், இலங்கையின் மீனவப் படகுகள் இரண்டையும் அதில் மீன்பிடித்துக்கொண்டிருந்த பத்து மீனவர்களையும் மாலைதீவு பாதுகாப்புப் படையின் கடலோரப் பிரிவினர் தடுத்து வைத்துள்ளனர். மாலைதீவின் கடல் எல்லைக்கு உட்பட்ட வாவு அட்டோல் பகுதியில் இவ்விரண்டு படகுகளும் மீன்பிடித்துக்கொண்டிருந்தன. இதை, மாலைதீவு பாதுகாப்புப் படையின் கடலோர ரோந்துப் படகு ஒன்று அவதானித்தது. இது பற்றிய தகவல்களை கட்டுப்பாட்டு அலுவலகத்துக்கு அறியத் தந்த பின்னரே இரண்டு படகுகளையும் கைப்பற்றியதுடன், அதில் […]

அடுத்த 24 மணிநேரத்தில் கடும் காற்று, மழைக்கான சிவப்பு சமிக்ஞை

வங்காள விரிகுடாக் கடலில் அதிகரித்துள்ள தாழமுக்கம் காரணமாக நாட்டில் சீரற்ற வானிலை நிலவக்கூடும் என அவதான நிலையம் சிவப்பு சமிக்ஞை யை வெளியிட்டுள்ளது. இதனால் எதிர்வரும் 24 மணித்தியாலங்களில் நாட்டின் சில பகுதிகளில் கன மழைப் பொழிவும் கடுங்காற்றும் வீசக்கூடும் என வானிலை அவதான நிலையம் எதிர்வுகூறியுள்ளது. மணிக்கு 60 முதல் 70 கிலோமீட்டர் வேகத்தில் கடுங்காற்று வீசக்கூடும் எனவும் 100 முதல் 150 மில்லிமீட்டர் அளவில் மழைப்பொழிவு இடம்பெறக்கூடும் […]

மன்னார் கடலில் கொந்தளிப்பு!

இலங்கையில் சீரற்ற காலநிலையில் தீவிரமடைந்துள்ள நிலையில் மன்னாரில் இன்று கடல் கொந்தளிப்புடன் காணப்பட்டது. மன்னார் – வவுனியா பிரதான வீதியில் மன்னார் மேம்பாலத்தை அண்மித்த பகுதிகளில் வீதிக்கு மேலாகக் கடல் அலைகள் எழுந்தன. இலங்கையை அண்மித்த பகுதியில் ஏற்பட்ட தாழமுக்கம் காரணமாக நாட்டின் பெரும்பாலான பகுதிகளில் அடை மழை பெய்து வருகிறது. மன்னாரை அண்டிய கடற்பகுதியில் தாழமுக்கம் நிலை கொண்டுள்ளமையினால், ஏற்பட்ட சுழற்சியின் காரணமாக கடல்நீர் நிலப்பகுதியை நோக்கி நகர்கின்றன. […]

பேச்சுத் தோல்வி போராட்டம் தொடரும்!!

“இலங்கை போக்குவரத்துச் சபையின் உயர் அதிகரிக்கும் வடபிராந்திய போக்குவரத்துச் சபையின் தொழிற்சங்கத்துக்கும் இடையே வவுனியாவில் இன்று நண்பகல் இடம்பெற்ற பேச்சுக்களின் போது சாதகமான முடிவுகள் எட்டப்படவில்லை. அதனால் தொழிற்சங்க பணிப்புறக்கணிப்புப் போராட்டம் தொடரும்” இவ்வாறு வடபிராந்திய போக்குவரத்துச் சபையின் தொழிற்சங்கத்தினர் தெரிவித்தனர். வடபிராந்திய போக்குவரத்துச் சபையின் பிரதான முகாமையாளர் மற்றும் பாதுகாப்பு அதிகாரி ஆகியோரை வடக்கிலிருந்து உடனடியாக இடமாற்றக்கோரி வடபிராந்திய போக்குவரத்துச் சபையின் ஊழியர்கள் நேற்று செவ்வாய்கிழமை தொடக்கம் பணிப்புறக்கணிப்பில் […]

எமது சிங்களத் தலைவர்களை விட பிரபாகரனே சிறந்த தலைவர்!

சிங்களத் தலைவர்களை விடவும் தமிழீழ விடுதலைப் புலிகளின் தலைவர் பிரபாகரனே சிறந்த தலைமைத்துவத்தைக் கொண்டிருந்ததாக பொதுபல சேனா அமைப்பின் பொதுச் செயலாளரான சர்ச்சைக்குரிய ஞானசார தேரர் தெரிவித்துள்ளார்.கொழும்பில் இன்று நடைபெற்ற ஊடகவியலாளர் சந்திப்பிலேயே அவர் இதனைக் கூறியுள்ளார். அங்கு மேலும் கருத்து வெளியிட்ட அவர்; விடுதலைப் புலிகள் இயக்கத்தில் இருந்தாலும், இலங்கை இராணுவத்தில் இருந்தாலும், சிங்களவராக இருந்தாலும், தமிழ், முஸ்லிமாக இருந்தாலும் மக்களே என்பதை நாங்கள் அனைவரும் ஏற்றுக்கொள்கின்றோம்.விடுதலைப் புலிகளின் […]