தமிழகத்தில் கடந்த சில வாரங்களுக்கு முன்னர் 18 எம்.எல்.ஏக்களை தகுதிநீக்கம் செய்து சபாநாயகர் உத்தரவிட்ட நிலையில் இரண்டு ராஜ்யசபா எம்பிக்களை தகுதி நீக்கம் செய்ய துணை ஜனாதிபதி வெங்கையா நாயுடு உத்தரவிட்டுள்ளார். ஐக்கிய ஜனதா தளம் கட்சியின் மூத்த தலைவர் சரத்யாதவ் மற்றும் அலி அன்வர் அன்சாரி ஆகியோர் கட்சி விரோத நடவடிக்கையில் ஈடுபட்டு வருவதாகவும், எனவே அவர்கள் இருவரது ராஜ்யசபா எம்பி பதவியை நீக்க வேண்டும் என்றும் ஐக்கிய […]
Author: தமிழவன்
யாழில் வாள்வெட்டு இரு இளைஞர்கள் படுகாயம்
யாழ்ப்பாணம், சாவகச்சேரி, மீசாலைப் பகுதியில் நேற்று இரவு இரு வேறு இடங்களில் இடம்பெற்ற வாள் வெட்டுச் சம்பவங்களில் இளைஞர் இருவர் படுகாயமடைந்த நிலையில் வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளனர். மீசாலை கிழக்கு – மதுவன் சனசமூகப் பகுதியிலுள்ள கடை ஒன்றினுள் புகுந்த அறுவர் கொண்ட வாள் வெட்டுக்குழுவினர் அங்கிருந்த இளைஞனை சமாரியாக வெட்டியதோடு கடைக்கும் சேதம்விளைவித்துவிட்டுத் தப்பிச் சென்றுள்ளனர். இதன்போது மீசாலை கிழக்கைச் சேர்ந்த செல்வராசா கஜவதனன் (20) என்ற இளைஞன் படுகாயமடைந்துள்ளார். […]
இறுதி முடிவு எடுக்க இன்று கூடுகிறது கூட்டமைப்பு.!
உள்ளூராட்சி மன்றங்களுக்கான தேர்தலில் ஆசனப்பங்கீடு தொடர்பில் இறுதி தீர்மானம் எடுப்பதற்காக தமிழ் தேசியக் கூட்டமைப்பு இன்று கூடவுள்ளது. குறித்த கூட்டமானது யாழ்ப்பாணம் மாட்டீன் வீதியில் உள்ள இலங்கை தமிழரசுக்கட்சியின் தலைமையகத்தில் பிற்பகல் இரண்டு மணிக்கு ஆரம்பமாகவுள்ளது. ஏற்கனவே தமிழ்த் தேசியக் கூட்டமைப்பில் அங்கம் வகிக்கும் இலங்கை தமிழரசுக்கட்சி, புளொட், ரெலோ ஆகிய கட்சிகள் நேற்று முன்தினம் பிற்பகல் மூன்று மணி முதல் இரவு எட்டு மணி வரையில் ஆசனப்பங்கீடு தொடர்பில் […]
”பரீட்சைகள் நடைபெறுவதில் மாற்றமில்லை”
சீரற்ற காலநிலை காரணமாக இவ் வருடம் இடம்பெறவுள்ள க.பொ.த. சாதாரண தர பரீட்சை யில் எந்த வித மாற்றங்களும் இடம்பெறாது என பதில் பரீட்சைகள் ஆணையாளர் நாயகம் டி.சனத்பூஜித தெரிவித்துள்ளார். க.பொ.த.சாதாரண தர பரீட் சையை நடத்துவதற்கான அனைத்து ஏற்பாடுகளும் மேற்கொள்ளப்பட்டுள்ளன. சீரற்ற காலநிலையால் இவற்றிற்கு எவ்வித தடையும் ஏற்படவில்லை. எனவே க.பொ.த சாதாரண தர பரீட்சை குறிப்பிட்ட காலத்தில் நடைபெறும் என அவர் மேலும் தெரிவித்துள்ளார். மேலும், அவர் […]
ஆர்.கே.நகரில் ஒரே நாளில் தாக்கலான 101 வேட்புமனுக்கள்
சென்னை ஆர்.கே.நகர் இடைத்தேர்தல் வரும் 21ஆம் தேதி நடைபெறவுள்ள நிலையில் நேற்றுடன் வேட்புமனு தாக்கல் முடிந்தது. இந்த நிலையில் நேற்று ஒரே நாளில் மட்டும் 101 பேர் மனுதாக்கல் செய்துள்ளனர். இவர்களில் பெரும்பாலானோர் சுயேட்சைகள் என்பது குறிப்பிடத்தக்கது. நேற்று மனுதாக்கல் செய்தவர்களின் நடிகர் விஷால் மற்றும் ஜெயலலிதாவின் அண்ணன் மகள் தீபா ஆகியோர் குறிப்பிடத்தக்கவர்கள். நேற்று வேட்புமனுதாக்கல் செய்த 101 பேர்களையும் சேர்த்து மொத்தம் 131 பேர் ஆர்.கே.நகரில் போட்டியிடுகின்றனர். […]
வயாவிளான் பகுதியில் வெடிபொருள்கள் தொடர்பில் எச்சரிக்கைப் பதாகைகள்
இராணுவத்தால் அண்மையில் விடுவிக்கப் பட்ட பகுதியான வலி. வடக்கு வயாவிளான் பகுதிக்குச் செல்லும் மக்கள் வெடிபொருள்களில் இருந்து பாதுகாப்புப் பெறுவதற்கு அங்கு ஆங்காங்கே எச்சரிக்கைப் பதாகைகள் தொங்க விடப்பட்டுள்ளன. இலங்கை இராணுவத்தின் கட்டுப்பாட்டில் 27 வருடங்களாக இருந்த வயாவிளான் பகுதி கடந்த சில தினங்களுக்கு முன்னர் மக்களிடம் மீண்டும் கையளிக்கப்பட்டது. அங்கு ‘மிதிவெடி, வெடிபொருள்களில் இருந்து எமது மக்களைப் பாதுகாப்போம்’ என்ற தொனிப்பொருளில் எச்சரிக்கைப் பதாகைகள் பல தொங்க விடப்பட்டுள்ளன. […]
பிரபாகரனின் காலில் விழாத நான் யாரிடமும் மண்டியிடேன்
தமிழீழ விடுதலைப் புலிகளின் தலைவர் பிரபாகரனுக்கு முன்பாக முழங்காலிடாத தாம், ஸ்ரீலங்கா ஆட்சியாளர்கள் முன்னிலையிலும் முழங்காவிட மாட்டேன் என்று முன்னாள் ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ச சூளுரைத்துள்ளார். ஸ்ரீலங்கா பொதுஜன முன்னணி ஏற்பாடு செய்திருந்த முதலாவது அரசியல் மக்கள் கூட்டம் இன்றைய தினம் திங்கட்கிழமை பதுளை வின்சன் டயஸ் விளையாட்டுத் திடலில் நடைபெற்றது. இதில் கலந்துகொண்டு உரையாற்றிய போதே முன்னாள் ஜனாதிபதி இவ்வாறு தெரிவித்தார். வலுக்கட்டாயமான மற்றும் போதையுடனான அரசியலை செய்ய […]
குமரன் பத்மநாதன் குற்றமற்றவர்
கே.பி. என்றழைக்கப்படும் குமரன் பத்மநாதன் வெளிநாடு செல்வதற்கு மேன்முறையீட்டு நீதிமன்றம் இன்று அனுமதி வழங்கியுள்ளது. குமரன் பத்மநாதனுக்கு எதிராக மக்கள் விடுதலை முன்னணியின் பாராளுமன்ற உறுப்பினர் விஜித ஹேரத் தாக்கல் செய்திருந்த மனுவை நிராகரித்து நீதிமன்றம் இந்த அனுமதியை வழங்கியுள்ளது. பல்வேறு குற்றச்செயல்களுடன் தொடர்புடைய கே.பி.யை கைது செய்யுமாறு பொலிஸ் மா அதிபருக்கு எழுத்தாணை கட்டளை பிறப்பிக்கக் கோரி விஜித ஹேரத் இந்த மனுவை தாக்கல் செய்திருந்தார். குறித்த மனுமீது […]
கைத்தொழில் மீளமைக்கத்திட்டம்
வடக்கு மாகாணத்தில் இயங்கிவரும் கைத்தொழில் பேட்டைகள் மற்றும் உப்பளங்களை வர்த்தமானியில் பிரசுரித்தல் தொடர்பாக வடக்கு மாகாணசபையின் அபிப்பிராயம் பெற்றுக் கொள்வதற்காக முதலமைச்சர் சி.வி.விக்னேஸ்வரன் அறிக்கை ஒன்றை நாளைய மாகாண சபை அமர்வில் சமர்ப்பிக்கவுள்ளார் என தெரிவிக்கப்படுகின்றது. இது தொடர்பில் மேலும் தெரியவருவதாவது: கைத்தொழில் பேட்டைகள் மற்றும் உப்பளங்களை வர்த்தமானியில் பிரசுரித்தல் தொடர்பாக கொழும்பு அரசு, மாகாண சபையிடம் அபிப்பிராயம் வினவியுள்ளதால் அது தொடர்பான அபிப்பிராயத்தை மாகாண சபையினரிடம் கேட்கும் வகையில் […]
விஷால் கேட்கும் சின்னம் கிடைக்குமா?
ஆர்.கே.நகர் இடைத்தேர்தலில் நடிகர் விஷால் இன்று வேட்புமனு தாக்கல் செய்ய உள்ளார். ஆர்.கே.நகர் தொகுதியில் போட்டியிட முடிவெடுத்திருப்பதாக ஏற்கனவே அறிவித்திருந்த நடிகர் விஷால் இன்று காலை சிவாஜி சிலை, காமராஜர் சிலை மற்றும் ராமாபுரம் தோட்டத்தில் உள்ள எம்.ஜி.ஆர் நினைவகம், மெரினா கடற்கரையில் உள்ள ஜெயலலிதா சமாதி ஆகிய இடத்திற்கு சென்று அஞ்சலி செலுத்தினார். அதன் பின் தனது ரசிகர் மன்றத்தை சேர்ந்த 100 பேருடன் இன்று மதியம் 2 […]





