Author: தமிழவன்

நிலச்சரிவில் சிக்கி 5 பேர் பலி – 15 பேர் மாயம்

சிலி நாட்டில் நிலச்சரிவில் சிக்கி 5 பேர் இறந்தனர். மேலும், நிலச்சரிவால் மாயமான 15 பேரை போலீஸார் தேடி வருகின்றனர். சிலி நாட்டில் தற்போது கனமழை பெய்து வருகிறது. கனமழையால் அங்குள்ள வீடுகள், மற்றும் பல்வேறு கட்டிடங்கள் சேதமடைந்துள்ளன. பலத்த மழையால் அங்குள்ள ஆறுகளில் வெள்ளம் கரை புரண்டோடுகிறது. கடந்த 24 மணி நேரத்தில் 11.4 செ.மீ மழை பெய்துள்ளதாக அந்நாட்டு வானிலை மையம் தெரிவித்துள்ளது. சிலியின் முக்கிய சுற்றுலா […]

லஞ்சம் பெற்ற சார் பதிவாளருக்கு 8 ஆண்டுகள் சிறை

ரூ.500 லஞ்சம் பெற்ற சார் பதிவாளருக்கு ஈரோடு நீதிமன்றம் 8 ஆண்டு சிறைத் தண்டனை விதித்து அதிரடியாக தீர்ப்பளித்துள்ளது. ஈரோடு மாவட்டம் கோபிசெட்டியாளையத்தில் மேக்லீன் முதியோர் இல்லம் செயல்பட்டு வருகிறது. இதன் ஆலோசகரான புஷ்பராஜ் ஆண்டுதோறும் இல்லத்தின் வரவு-செலவு கணக்கை சார் பதிவாளரிடம் ஒப்புதல் பெற்று, மாவட்ட பதிவாளரிடம் சமர்பித்து வந்தார். இந்நிலையில் கடந்த 2004-ஆம் ஆண்டு ஜனவரி மாதம் சார் பதிவாளராக இருந்த தங்கவேல் என்பவரிடம் புஷ்பராஜ் வரவு […]

13 லட்சம் ரூபாய் செலவில் நாமக்கல் ஆஞ்சநேயருக்கு வடமாலை

ஆஞ்சநேயர் ஜெயந்தியை முன்னிட்டு நாமக்கல்லில் உள்ள ஆஞ்சநேயர் சுவாமிக்கு 13 லட்சம் ரூபாய் செலவில் வடமாலை அணிவிக்கப்பட்டுள்ளது. நாமக்கல் அருள்மிகு ஆஞ்சநேயர் கோயிலில் இன்று ஆஞ்சநேயர் ஜெயந்தி கொண்டாடப்பட்டு வருகிறது. தமிழ்நாட்டில் மிகவும் பிரபலமான நாமக்கல் ஆஞ்சநேயரை வழிபடுவதற்காக நாட்டின் பல்வேறு பகுதியில் இருந்து மக்கள் வருகை தந்துள்ளனர். அதிகாலை முதலே பக்தர்கள் சுவாமி தரிசனம் செய்து வருகின்றனர். ஆஞ்சநேயர் ஜெயந்தியை முன்னிட்டு, கோயில் நிர்வாகம் சார்பில் 18 அடி […]

நிலக்கண்ணி வெடித்தடை சர்வதேச உடன்படிக்கையில் இலங்கை கைச்சாத்திட்டுள்ளது

நியூயோர்க்கிலுள்ள ஐக்கிய நாடுகள் சபையில் 163 ஆவது நாடாக நிலக்கண்ணி வெடித்தடை சர்வதேச உடன்படிக்கை சாசனத்தில் இலங்கை கைச்சாத்திட்டுள்ளது. நிலக் கண்ணிவெடித் தடை சர்வதேச உடன்படிக்கையில் இலங்கை கைச்சாத்திட்டுள்ளதைத் தொடர்ந்து இவ்வுடன்படிக்கையில் இன்னும் சேராத நாடுகள் இலங்கையை முன்னுதாரணமாகக் கொண்டு அதனைப் பின்பற்றவேண்டுமென மனித உரிமைகள் கண்காணிப்பகத்தைச் சேர்ந்த ஸ்டீவ் உஸ் தெரிவித்துள்ளார்.

புது­வி­த­மான காய்ச்­ச­லால் முல்­லை­த்தீவில் 9 பேர் உயி­ரி­ழந்­தனர்

முல்­லைத்­தீவு மாவட்­டத்­தில் கடந்த 20 நாள்­க­ளுக்­குள் அடை­யா­ளம் காணப்­ப­டாத காய்ச்­சல் கார­ண­மாக 9பேர் உயி­ரி­ழந்­தனர். திடீர் உயி­ரி­ழப்­புத் தொடர்­பில் கொழும்பு அர­சின் மருத்­து­வக் குழு முல்­லைத்­தீவு மாவட்­டத்­தில் ஆய்­வில் ஈடு­பட்­டுள்­ளது. முல்­லைத்­தீவு நக­ரப் பகு­தி­யைச் சேர்ந்­த­வர்­களே இந்­தக் காய்ச்­சல் கார­ண­மாக உயி­ரி­ழந்­தனர். தொடர்ச்­சி­யான காய்ச்­ச­லின் பின்­னர் மருத்­து­வ­ம­னை­யில் சேர்க்­கப்­பட்ட 9 பேரும் உயி­ரி­ழந்­த­னர் என்று தெரி­விக்­கப்­ப­டு­கின்­றது. இது தொடர்­பில் வடக்கு மாகாண சுகா­தா­ரத் திணைக்­க­ளத்­தின் கவ­னத்­துக்குக் கொண்டு செல்­லப்­பட்­டது. கொழும்பு […]

போருக்கு வராமல் இருக்கும் ரஜினி

நடிகர் ரஜினிகாந்த் விரைவில் அரசியலுக்கு வருவதாக கூறி வருகிறார்கள். ஆனால் அவர் இன்னும் அதிகாரப்பூர்வமாக வரவில்லை. போருக்கு தயாராக இருங்கள் என்று கூறிவிட்டு அமைதியாக இருக்கிறார். ஆனால் அவரை சுற்றியுள்ளவர்கள் அவர் மிக விரைவில் அரசியலுக்கு வருவார், அதுதொடர்பாக அறிவிப்பார் என கூறுகிறார்கள். கடந்த 12-ஆம் தேதி அவரது பிறந்தநாள் கொண்டாடப்பட்டது. அன்றைய தினக் அவரது அரசியல் கட்சி தொடர்பான அறிவிப்பு நிச்சயம் இருக்கும் என பெரிதாக பேசப்பட்டது. இதனால் […]

அமெரிக்கா செல்ல விரும்பும் பயணிகளுக்கு டொனால்டு டிரம்ப் புதிய கட்டுப்பாடுகள் விதித்துள்ளார்.

அமெரிக்காவுக்கு வரும் வெளிநாட்டினரால் பாதுகாப்புக்கு அச்சுறுத்தல் ஏற்படுவதாக கருதி, அந்நாட்டுக்கு வருபவர்களுக்கு ஜனாதிபதி டொனால்டு டிரம்ப் நிறைய கட்டுப்பாடுகளை விதித்து வருகிறார். தற்போது மீண்டும் புதிய விதிமுறைகளை வெளியிட்டார். அதன்படி, விசா இல்லாமல் நுழையும் சலுகையை பெற விரும்பும் 38 நாடுகளை சேர்ந்தவர்கள், அமெரிக்காவுக்குள் நுழைய பயண அனுமதி பெற வேண்டும். தங்கள் நாடுகளை கடந்து அமெரிக்காவுக்கு செல்லும் பயணிகளை அமெரிக்காவின் பயங்கரவாத தடுப்பு பிரிவு அளித்த தகவல்கள் அடிப்படையில் […]

8 தோட்டாக்கள்’ நாயகியின் ஹாட் அண்ட் கூல் புகைப்படம்

இந்த ஆண்டு ஏப்ரல் மாதம் வெளியான ‘8 தோட்டாக்கள்’ திரைப்படம் நல்ல வரவேற்பை பெற்ற நிலையில் இந்த படத்தில் முக்கிய கேரக்டர் ஒன்றில் நடித்த மீராமிதுன் தற்போது ‘கிரஹனம்’ என்ற படத்தில் நடித்து வருகிறார் இந்த நிலையில் மீராமீதுன் ஒரு வைர நகைக்கடை விளம்பரத்திற்காக ஹாட் அண்ட் கூல் போஸ் ஒன்றை கொடுத்துள்ளார். மீராமிதுனின் இந்த ஸ்டில் இணையதளங்களை அதிர வைத்து வைரலாக பரவி வருகிறது. சோனி ஆல்பா சோனி […]

டி என்ஏ ஆதாரம் எடுக்க அம்ருதா தீவிரம்!

தமிழக முன்னாள் முதல்வர் மறைந்த ஜெயலலிதாவின் மகள் என தன்னை கூறிக்கொள்ளும் பெங்களூரை சேர்ந்த அம்ருதா, தான் ஜெயலலிதாவுக்கும், சோபன் பாபுவுக்கும் தான் பிறந்தேன் என்பதை நிரூபிக்க தீவிர முயற்சியில் இறங்கியுள்ளார். ஜெயலலிதா அப்பல்லோ மருத்துவமனையில் சிகிச்சைக்காக அனுமதிக்கப்பட்டிருந்த தால் அவரது உடலில் இருந்து டெஸ்டுக்கு ஏதாவது எடுத்திருக்கலாம் என, அம்ருதா கடந்த இரண்டு நாட்களாக சென்னையில் தங்கியிருப்பதாக கூறப்படுகிறது. தன்னுடைய மருத்துவ நண்பர் ஒருவர் மூலம் அப்பல்லோ மருத்துவமனையில் […]

ஜெயலலிதா ஆபத்தான நிலையில் தான் அனுமதிக்கப்பட்டார்

முன்னாள் முதல்வர் ஜெயலலிதாவின் மரணத்தில் மர்மம் இருப்பதாக கூறப்பட்ட நிலையில் அவரது மரணம் குறித்து ஆறுமுகச்சாமி தலைமையிலான விசாரணை கமிஷன் விசாரணை செய்து வருகிறது இந்த நிலையில் ஜெயலலிதாவுக்கு சிகிச்சை செய்த மருத்துவர்கள் உள்பட பலர் விசாரணை கமிஷன் முன் ஆஜராகி வரும் நிலையில் சற்று முன்னர் அப்பல்லோ மருத்துவமனையின் பிரதாப் ரெட்டி செய்தியாளர்களை சந்தித்து பல திடுக்கிடும் உண்மைகளை கூறி வருகிறார் ஆபத்தான நிலையில் தான் ஜெயலலிதாவை அப்பல்லோ […]