Author: தமிழவன்

விளம்பரத்தில் நடிக்கும் ஜூலி; வைரலாகும் வீடியோ

பிக்பாஸ் நிகழ்ச்சியில் கலந்துகொண்ட போட்டியாளர்களில் சினிமா பிரபலம் அல்லாதவர் ஜூலி மட்டும்தான். பிக்பாஸ் நிகழ்ச்சியில் கலந்துகொண்ட பிறகு ஜூலி வெகுவாக பிரபலமடைந்தாலும், அவர் செய்த சில விஷயங்களால் மக்களின் வெறுப்பைச் சம்பாதித்தார். ஜூலிக்கு எழுந்த எதிர்ப்பு காரணமாக கமல்ஹாசனே, அவரது தங்கை எனச் சொல்லி வெளியே அனுப்பி வைத்தார். இப்போது ஜூலி கலைஞர் டிவியில் ஓடி விளையாடு பாப்பா என்ற குழந்தைகள் ஆடும் ரியாலிட்டி ஷோவை தொகுத்து வழங்கி வருகிறார். […]

வரலாற்று சிறப்புமிக்க புகைப்படத்தை வெளியிட்ட நாசா

விண்வெளியில் சுதந்திரமாக வலம் வந்த வீரர் புரூஸ் மெக்கண்டில்ஸ் கடந்த 21ஆம் தேதி உயிரிழந்ததை அடுத்து அவரை பெருமைப்படுத்தும் வகையில் அரிய புகைப்படங்களை நாசா வெளியிட்டு வருகிறது. புரூஸ் மெக்கண்டில்ஸ் என்ற விண்வெளி வீரர் விண்வெளியில் எந்த பிடிமானமும் இல்லாமல் சுதந்திரமாக வலம் வந்த மூதல் வீரர் என்ற பெருமைக்குரியவர். இவர் கடந்த 21ஆம் தேதி தனது 80 வயதில் உயிரிழந்தார். இவரை பெருமைப்படுத்தும் விதமாக நாசா தற்போது அவரது […]

முதல்வர் சசிகலா

ஜெயலலிதா சிகிச்சை தொடர்பான ஆவணங்களை சமர்பிக்க சசிகலாவுக்கு 15 நாள் ‘கெடு’

விசாரணை ஆணையம் ஜெயலலிதா சிகிச்சை தொடர்பான ஆவணங்களை 15 நாட்களுக்குள் சமர்பிக்க வேண்டுமென சசிகலாவுக்கு ‘கெடு’ விதித்து சம்மன் அனுப்பியுள்ளது. தமிழக முன்னாள் முதலமைச்சர் ஜெயலலிதா உடல் நலக்குறைவால் அப்பல்லோ மருத்துவமனையில் 75 சிகிச்சைப் பெற்று, கடந்த வருடம் டிசம்பர் 5-ஆம் தேதி மரணமடைந்தார். ஜெயலலிதாவின் மரணத்தில் பல்வேறு சந்தேகங்கள் கிளம்பியதால், அவரது மருத்துவமனையின் சிகிச்சை குறித்து விசாரிக்க வேண்டும் என எதிர்கட்சிகளும், அதிமுக தொண்டர்களும் கோரிக்கை விடுத்தனர். இதனையடுத்து […]

நம்பிக்கை வாக்கெடுப்பில் முதல்வர் எடப்பாடி

உளவுத்துறை அறிக்கையால் எடப்பாடி அதிர்ச்சி

சென்னை ஆர்.கே.நகர் தேர்தலில் டிடிவி தினகரன் அதிக வாக்குகள் பெற்று வெற்றி பெறுவார் என பல்வேறு கருத்து கணிப்புகள் கூறுகிறது. ஜெயலலிதாவின் மறைவிற்கு பின் ஆர்.கே.நகரில் கடந்த ஏப்ரல் மாதம் இடைத்தேர்தல் அறிவிக்கப்பட்டது. ஆனால், பணப்பட்டுவாடா புகார் எழுந்ததையடுத்து தேர்தல் ரத்து செய்யப்பட்டது. அந்நிலையில், அந்த தொகுதியில் கடந்த 21ம் தேதி மீண்டும் தேர்தல் நடைபெற்றது. சுயேட்சை வேட்பாளர்களோடு சேர்த்து 50க்கும் மேற்பட்டோர் போட்டியிட்டாலும் திமுக, அதிமுக மற்றும் தினகரன் […]

ஆர்.கே.நகர் தேர்தல் முடிவு

சென்னை ஆர்.கே.நகர் இடைத்தேர்தலில் டிடிவி தினகரன் அதிக வாக்குகள் பெற்று வெற்றி பெறுவார் என மக்கள் செய்தி மையம் கருத்து கணிப்பு நடத்தி செய்தி வெளியிட்டுள்ளது. ஆர்.கே.நகரில் கடந்த 21ம் தேதி மீண்டும் தேர்தல் நடைபெற்றது. சுயேட்சை வேட்பாளர்களோடு சேர்த்து 50க்கும் மேற்பட்டோர் போட்டியிட்டாலும் திமுக, அதிமுக மற்றும் தினகரன் ஆகிய மூவருக்கும் இடையே மட்டுமே பலத்த போட்டி நிலவுகிறது. அந்நிலையில், தேர்தலுக்கு முன்பு அந்த தொகுதியில் யார் வெற்றி […]

ஜெ மரணம் குறித்த விசாரணை ஆணையத்தின் பதவிக் காலம் 6 மாதம் நீட்டிப்பு

மறைந்த முன்னாள் தமிழக முதல்வர் ஜெயலலிதா மர்ம மரணம் அடைந்ததாக கூறப்பட்ட நிலையில் இதுகுறித்து விசாரணை செய்ய அமைக்கப்பட்டுள்ள விசாரணை ஆணையத்தின் பதவிக்காலம் மேலும் 6 மாதங்கள் நீட்டிக்கப்பட்டுள்ளது. உயர்நீதிமன்ற ஓய்வு பெற்ற நீதிபதி ஆறுமுகச்சாமி தலைமையிலான விசாரணை ஆணையம் கடந்த செப்டம்பர் 25ம் தேதி தமிழக அரசால் அமைக்கப்பட்ட நிலையில் இந்த ஆணையம் தற்போது விறுவிறுப்பாக விசாரணையை நடத்தி வருகிறது. ஜெயலலிதா மரணம் தொடர்பாக அவரது அண்ணன் மகன் […]

விபத்தில் ஒரே குடும்பத்தைச் சேர்ந்த அக்கா-தம்பி பலி

சிவகங்கை அருகே நடந்த விபத்தில் இரு சக்கர வாகனத்தில் சென்ற ஒரே குடும்பத்தை சேர்ந்த அக்கா-தம்பி பரிதாபமாக உயிரிழந்தனர். இச்சம்பவம் அப்பகுதியில் பெரும் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது. சிவகங்கை மாவட்டம் தேவக்கோட்டையைச் சேர்ந்தவர் லட்சுமி. இவருக்கு வனிதா என்ற மகளும், அகிலன் என்ற மகனும் இருந்தனர். வனிதா 10-ஆம் வகுப்பும், அகிலன் 9-ஆம் வகுப்பும் படித்து வந்தனர். அகிலாவிற்கு 10-ம் வகுப்பு பொதுத் தேர்வு நெருங்குவதால் அவருக்கு பள்ளியில் ஸ்பெஷல் கிளாஸ் […]

தினகரன் வெற்றி பெற்றால் அதிமுக என்ன ஆகும்

நடந்து முடிந்துள்ள ஆர்.கே நகர் இடைத்தேர்தலில் ஊடகங்களின் கருத்துக்கணிப்பின்படி டிடிவி தினகரன் வெற்றி பெறவே அதிக வாய்ப்பு இருப்பதாக கூறப்படுகிறது. இந்த ஒரே ஒரு தொகுதியில் திமுகவோ அல்லது அதிமுகவோ வெற்றி பெற்றால் ஆட்சியில் எந்த மாற்றமும் ஏற்பட்டுவிடாது. ஆனால் தினகரன் வெற்றி பெற்றால் அதிமுகவில் ஒரு பெரிய மாறுதல் இருக்கும் என்று கூறப்படுகிறது அதிமுகவில் இன்னும் மூன்று ஆண்டுகள் பதவியை அனுபவிக்க வேண்டும் என்பதற்காகவே பலர் ஈபிஎஸ்-ஓபிஎஸ் தலைமையை […]

இன்றைய ராசிபலன் I 23.12.2017 I

மேஷம்: திட்டமிட்ட காரியங்கள் கைக்கூடும். உடன்பிறந்தவர்களின் பிரச்னையை தீர்த்து வைப்பீர்கள். வெளிவட்டாரத்தில் அந்தஸ்து உயரும். பழைய கடனில் ஒரு பகுதியை பைசல் செய்வீர்கள். வியாபாரத்தில் புதிய வாடிக்கையாளர்கள் தேடி வருவார்கள். உத்யோகத்தில் மேலதிகாரி பாராட்டுவார். அதிஷ்ட எண்: 8 அதிஷ்ட நிறங்கள்: மஞ்சள், கருநீலம் ரிஷபம்: உங்கள் செயலில் வேகம் கூடும். பிள்ளைகள் கேட்டதை வாங்கித் தருவீர்கள். சிலர் உங்களை நம்பி முக்கிய பொறுப்புகளை ஒப்படைப்பார்கள். ஆன்மிக நாட்டம் அதிகரிக்கும். […]

இந்தியா அபார வெற்றி

இந்தியா மற்றும் இலங்கை அணிகளுக்கு இடையில் நடைபெற்ற முதலாவது ஒருநாள் போட்டியில் இந்தியா வெற்றி பெற்ற நிலையில் இன்று இந்தூரில் நடைபெற்ற 2வது ஒருநாள் போட்டியிலும் 88 ரன்கள் வித்தியாசத்தில் வெற்றி பெற்று தொடரை வென்றது. இந்த போட்டியில் டாஸ் வென்ற இலங்கை அணி முதலில் பந்துவீச தீர்மானித்தது. எனவே முதலில் களமிறங்கிய இந்திய அணி, ரோஹித் சர்மாவின் விஸ்வரூபத்தால் 20 ஓவர்களில் 5 விக்கெட்டுக்கள் இழப்பிற்கு 260 ரன்கள் […]