யாழ்ப்பாணம், மண்டைதீவுக் கடலில் மிதந்து வந்த மரப்பெட்டி ஒன்றிலிருந்து வெடிபொருள்கள் மீட்கப்பட்டன என்று ஊர்காவற்றுறைப் பொலிஸார் தெரிவித்தனர். அதில் 4 கண்ணிவெடிகள், 2 மோட்டார் குண்டுகள், 2 சார்ச்சர் என்பன மீட்கப்பட்டுள்ளன என்று தெரிவிக்கப்பட்டது. “கடலில் நேற்று மாலை 5 மணியவில் பச்சை நிற மரப் பெட்டி ஒன்று மிதப்பதை மீனவர்கள் சிலர் அவதானித்துள்ளனர். அது தொடர்பில் மண்டைதீவு பொலிஸ் காவலரணுக்குத் தகவல் வழங்கப்பட்டது. பொலிஸார் மரப் பெட்டியை மீட்டனர். […]
Author: தமிழவன்
அம்மா இருசக்கர வாகன திட்டம்
வேலைக்கு செல்லும் பெண்கள் இன்று (திங்கட்கிழமை) முதல் அதற்கான விண்ணப்பிக்கலாம் என சென்னை மாநகராட்சி கமிஷனர் அறிவித்து உள்ளார் அம்மா இருசக்கர வாகன திட்டத்தில் பயன்பெற விரும்பும், வேலைக்கு செல்லும் பெண்கள் இன்று (திங்கட்கிழமை) முதல் அதற்கான விண்ணப்பிக்கலாம் என சென்னை மாநகராட்சி கமிஷனர் அறிவித்து உள்ளார். மாநகராட்சி பெண் ஊழியர்கள் பெண்கள் தங்களது பணியிடங்களுக்கு செல்வதற்கு உதவியாக அம்மா இருசக்கர வாகன திட்டம் தமிழக அரசால் கொண்டு வரப்பட்டு […]
ஆப்கானிஸ்தானில் ஓட்டல் மீது துப்பாக்கி ஏந்திய 4 பேர் தாக்குதல் : 18 பேர் உயிரிழப்பு
ஆப்கானிஸ்தான் தலைநகர் காபூலில் உள்ள ஓட்டலில் பயங்கரவாதிகள் துப்பாக்கியால் சுட்டும், கையெறி குண்டுகளை வீசியும் தாக்குதல் நடத்தினர் ஆப்கானிஸ்தான் தலைநகர் காபூலில் உள்ள ஓட்டலில் பயங்கரவாதிகள் துப்பாக்கியால் சுட்டும், கையெறி குண்டுகளை வீசியும் தாக்குதல் நடத்தினர். இதில் 18 பேர் உயிரிழந்தனர். தாக்குதல் நடத்திய 4 பயங்கரவாதிகள் சுட்டுக்கொல்லப்பட்டனர். அமெரிக்காவில் 2001-ம் ஆண்டு செப்டம்பர் 11-ந் தேதி, வாஷிங்டன் பென்டகன் ராணுவ தலைமையகத்தின் மீதும், நியூயார்க் உலக வர்த்தக மையத்தின் […]
குரங்கில் இருந்து மனிதன் வந்தான்
குரங்கில் இருந்து மனிதன் வந்தான் என்பதற்கு எந்த ஆதாரமும் இல்லை என்பதால் டார்வின் தத்துவம் தவறு என்று மத்திய மனிதவள மேம்பாட்டுத்துறை இணையமைச்சர் சத்யபால் சிங் கூறியுள்ளார். மகாராஷ்டிர மாநிலம் ஔரங்காபாத் நகரில் அகில இந்திய வேதிக் சம்மேளன மாநாடு நடைபெற்றது. இதில் கலந்து கொண்டு பேசிய மத்திய மனிதவள மேம்பாட்டு துறை இணையமைச்சர் சத்யபால் சிங் கூறியதாவது:- குரங்கில் இருந்து மனிதன் தோன்றவில்லை. அதற்கு எவ்வித ஆதாரமும் இல்லை. […]
பருவமடையாத 9 வயது சிறுமிக்கு 39 வயது நபருடன் திருமணம்!
பருவம் அடையாத 9 வயதான 4-ஆம் வகுப்பு மாணவிக்கு 39 வயது நபருடன் திருமணம் செய்து வைக்க குடும்பத்தார் முயற்சித்தது திருச்சியில் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. கடந்த 18-ஆம் தேதி திருச்சி முசிறி அனைத்து மகளிர் காவல் நிலையத்துக்கு மர்ம நபர் ஒருவர் கால் செய்து குழந்தை திருமணம் குறித்த தகவல் ஒன்றை கொடுத்துள்ளார். அதில் 9 வயதான பள்ளி மாணவியை 39 வயது நபருக்கு திருமணம் செய்திட மின்னதம்பட்டி கிராமத்தில் […]
படுக்கைக்கு அழைத்த தயாரிப்பாளரிடம் செருப்பை காட்டிய பிரபல நடிகை
வாய்ப்புக்காக படுக்கைக்கு அழைத்த தயாரிப்பாளரிடம் என் செருப்பை கழற்றி காண்பித்தேன் என்று நடிகை ஸ்ருதி ராமச்சந்திரன் கூறியிருப்பது பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. பிரபல மலையாள நடிகை ஸ்ருதி ராமச்சந்திரன் சமீபத்தில் விழா ஒன்றில் கலந்து கொண்டு பேசினார். அதில், நான் நடித்த படம் ஒன்று தமிழில் ரீமேக் செய்ய முடிவு செய்து தயாரிப்பாளர் ஒருவர் என்னையே தமிழிலும் நடிக்க அழைப்பு விடுத்தார். இந்த படத்தை தன்னுடன் நான்கு பேர் இணைந்து […]
ஆப்கான் ஓட்டல் தாக்குதலுக்கு தலிபான் பொறுப்பு ஏற்பு
காபூல் ஓட்டலில் நடத்தப்பட்ட தாக்குதலுக்கு தலிபான் பயங்கரவாத அமைப்பு பொறுப்பு கூறிஉள்ளது ஆப்கானிஸ்தான் தலைநகர் காபூலில் உள்ள இன்டர்கான்டினென்டல் ஓட்டலில் நேற்று இரவு ஆயுதம் தாங்கிய பயங்கரவாதிகள் நுழைந்து அங்கிருந்த வெளிநாட்டு சுற்றுலாப் பயணிகளை பணயக்கைதியாக பிடித்தனர். தானியங்கி துப்பாக்கிகள், உள்ளிட்ட பயங்கர ஆயுதங்களுடன் பயங்கரவாதிகள் தாக்குதலையும் முன்னெடுத்தனர். இந்த தாக்குதல் குறித்து தகவல் அறிந்த அந்நாட்டு பாதுகாப்பு படை விரைந்து சென்று எதிர்தாக்குதலில் ஈடுபட்டது. பயங்கரவாதிகள் நடத்திய தாக்குதலில் […]
காணாமல்போன சிறுவர்களின் எண்ணிக்கை தொடர்பில் ஐ.நாவில் குழப்பம்
வடக்கில் போரின் பின்னர் காணாமல்போன சிறுவர்களில் 611பேர் இன்றுவரை கண்டுபிடிக்கப்படவில்லை என்று புள்ளிவிவரங்கள் கூறுகின்றன. ஆனால் ஐ.நாவில் இடம்பெறும் 77ஆவது அமர்வின் சிறுவர் உரிமை மாநாட்டில் இலங்கை அரசு கூறிய புள்ளி விவரம் இதிலிருந்து மாறுபட்டுள்ளது. இதனால் ஐ.நா அதிகாரிகள் அதிர்ச்சியடைந்தனர் எனத் தெரிவிக்கப்பட்டது. ஜெனிவாவில் இடம்பெறும் 77ஆவது ஐ.நா கூட்டத்தொடரின் சிறுவர் உரிமை மாநாடு ஆரம்பமாகியுள்ளது. எதிர்வரும் 2ஆம் திகதி வரை நடைபெறவுள்ளது. இதில் இலங்கை சார்ந்த விடயம் […]
ஆப்கானிஸ்தானில் ஓட்டல் மீது துப்பாக்கி ஏந்திய 4 பேர் தாக்குதல் : 5 பேர் பலி 8 பேர் காயம்
ஆப்கானிஸ்தானில் ஓட்டல் ஒன்றில் துப்பாக்கி ஏந்திய 4 பேர் நடத்திய தாக்குதலில் 5 பேர் பலியாகியுள்ளனர். 8 பேர் காயம் அடைந்துள்ளன ஆப்கானிஸ்தானின் தலைநகர் காபூல் நகரில் இன்டர்கான்டினென்டல் ஓட்டல் ஒன்று அமைந்துள்ளது. இந்த ஓட்டலுக்குள் துப்பாக்கிகளுடன் புகுந்த 4 பேர் நேற்றிரவு துப்பாக்கி சூடு நடத்தினர். தகவலறிந்து வந்த பாதுகாப்பு படையினரும் பதிலுக்கு துப்பாக்கியால் சுட்டுள்ளனர். இந்த சம்பவத்தில் கட்டிடம் தீப்பிடித்து கொண்டது. அங்கு வசிப்போர் மற்றும் ஓட்டல் […]
முள்ளியவளையில் வாள்வெட்டு – இருவர் படுகாயம்!!
முல்லைத்தீவு, முள்ளியவளையில் நேற்று இரவு நடந்த வாள்வெட்டு மற்றும் தாக்குதலில் இருவா் படுகாயமடைந்தனர். இந்தச் சம்பவம் இரவு 7 மணியளவில் நடந்துள்ளது. முள்ளியவளை 4 ஆம் வட்டாரத்தைச் சேர்ந்த ஜெயசீலன் ஜனுராஜ் (வயது -20), முள்ளியவளை 2ஆம் வட்டாரத்தைச் சேர்ந்த தங்கராசா டியானு (வயது-20) ஆகியோரே காயமடைந்தனர். ஒருவர் வெட்டுக்காயங்களுடனும், மற்றையவர் அடிகாயங்களுடனும் மாவட்ட மருத்துவனையில் சேர்க்கப்பட்டனர் என்று தெரிவிக்கப்பட்டது. இரு குழுக்களுக்கிடையே ஏற்பட்ட வாய்த்தர்க்கம் கைலப்பில் முடிந்தது என்றும், […]





